























டிஜிபி சந்தீப் ராய் ரத் தோர்
Updated on
:
1 min read
தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.1.43 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, டிஜிபி சந்தீப் ராய் ரத் தோர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குற்றவாளிகளின் நடவடிக்கைகளை முற்றிலுமாகக் கட்டுப்படுத்துதல், குற்றச் செயல்களை திட்டமிட்டு நிறைவேற்றுகின்ற குழுக்களின் நடவடிக்கைகளைக் குலைத்தல் போன்ற உறுதியான நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொண்டு, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு திறம்பட பராமரிக் கப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று நாட்களாக அதுபோன்று எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, 15,349 ரவுடிகள் (12,650-சரித் திர பதிவேடு ரவுடிகள் மற் றும் 2,699-சரித்திர பதிவுறா ரவுடிகள்) அடையாளம் காணப்பட்டு சோதனையிடப் பட்டனர். அவர்களிடம் மேற் கொண்ட தீவிர விசாரணை காரணமாக, 3,246 ரவுடிகள் காவல் துறையினரால் பிடிக் கப்பட்டு அவர்களிடம் விசா ரணை மற்றும் சோதனை நடை பெற்று வருவதுடன், அவர்களில் 844 பேர் பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் நீதி மன்றக் காவலுக்கு உட்படுத் தப்பட்டுள்ளனர்.
னால் மேற்கொள்ளப்பட்ட மேலும், காவல் துறையி நடவடிக்கைகள் காரணமாக, போதைப் பொருட்கள் மற் றும் மனமயக்கப் பொருட்கள் சட்டத்தின் கீழ், 294 வழக்கு கள் மாநிலம் முழுதும் பதிவு செய்யப்பட்டு, 419 போதைப் பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வெளிச்சந்தையில் ரூ.1.43 கோடி மதிப்புடைய 267 கிலோ எடையுடைய கஞ்சா மற்றும் 2,476 போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。