惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园_首页
Engineering at Meta
Engineering at Meta
量子位
A
About on SuperTechFans
阮一峰的网络日志
阮一峰的网络日志
Recent Announcements
Recent Announcements
博客园 - 司徒正美
V
Visual Studio Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The GitHub Blog
The GitHub Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
F
Fortinet All Blogs
Martin Fowler
Martin Fowler
腾讯CDC
Jina AI
Jina AI
C
Check Point Blog
H
Help Net Security
罗磊的独立博客
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
V2EX
爱范儿
爱范儿
I
InfoQ

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான குடியிருப்புகள் க...
செய்திப்பிரிவு · 2026-06-21 · via hindutamil

Updated on: 

சென்னை: சு​னாமி​யால் பாதிக்​கப்​பட்ட மீனவர்​களுக்​கான குடியிருப்​பு​கள் கட்ட முதி​ய​வரை கட்​டாயப்​படுத்தி பதி​யப்​பட்ட நிலத்​துக்கு 200 சதவீத இழப்​பீட்டை 12 சதவீத வட்​டி​யுடன் 2013 முதல் கணக்​கிட்டு வழங்க செங்​கல்​பட்டு மாவட்ட ஆட்​சி​யருக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது.

கடந்த 2004-ம் ஆண்டு டிச.26ம் தேதி ஏற்​பட்ட சுனாமி பேரழி​வால் பாதிக்​கப்​பட்ட மீனவர்​களுக்கு கிறிஸ்​துவ தொண்டு நிறு​வனம் சார்​பில் குடி​யிருப்​பு​கள் கட்​டு​வதற்​காக செங்​கல்​பட்டு மாவட்​டம் செய்​யூர் தாலு​கா​வில் அரசு சார்​பில் நிலங்​கள் கையகப்படுத்தப்பட்​டன. இந்​நிலை​யில் மீனவ குடி​யிருப்​பு​கள் கட்டு​வதற்​காக கையகப்​படுத்​தப்​பட்ட தனது 4 ஏக்​கர் நிலத்​துக்கு உரிய இழப்​பீடு வழங்​கவில்லை என கூறி 81 வயது முதி​ய​வ​ரான ஆதி​கேசவலு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்​கு, நீதிபதி கிருஷ்ணன் ராம​சாமி முன்​பாக விசாரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்கறிஞர் எம்.ஸ்ரீதர் ஆஜராகி, "கையகப்​படுத்​தப்பட்ட நிலத்துக்கு வழி​காட்டி மதிப்​பை ​விட மிகக் ​குறைந்த தொகையே அரசால் இழப்​பீ​டாக வழங்​கப்​பட்​டுள்​ளது. கட்​டாயப்​படுத்தி மனுதாரரிடமிருந்து அந்த நிலத்தை அரசுக்​காக பதிவு செய்துள்ளனர்" என வாதிட்​டார்.

அதற்கு அரசு தரப்​பில், "மனு​தா​ரரின் மகன் கடந்த 2005-ம் ஆண்டு ஒரு சென்ட் நிலத்​துக்கு ரூ.520 வீதம் இழப்​பீடு பெற சம்​மதம் தெரிவித்​தார். அதனடிப்​படை​யிலேயே கடந்த 2013-ம் ஆண்டு பத்திரப் ​ப​திவு செய்​யப்​பட்​டது" என வாதிடப்​பட்​டது.

இரு தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, "குடும்​பத்​தில் உள்ள ஒரு உறுப்​பினர் கொடுத்த சம்​மதத்​தின்​ பேரில் அந்த நிலத்​துக்கு குறை​வான இழப்​பீட்​டுத் தொகையை நிர்​ண​யம் செய்​திருப்​பது ஏற்​புடையதல்ல. மேலும், ஒரு உறுப்​பினரின் சம்​மதம், ஒட்டுமொத்த குடும்​பத்​தை​யும் கட்​டுப்​படுத்​தாது. 2005ம் ஆண்டு நிர்​ண​யம் செய்த தொகை 2013-ல் செய்​யப்​பட்ட பத்​திரப்​ பதிவுக்கு ஈடா​காது.

எனவே, மனு​தா​ரரை அழைத்து விசா​ரித்து 2013ம் ஆண்டு பதியப்பட்​ட​போது இருந்த உண்​மை​யான சந்தை மதிப்​பின் அடிப்படை​யில் அவருக்கு 200 சதவீத இழப்​பீட்டை 2013 முதல் 12 சதவீத வட்​டி​யுடன் வழங்க வேண்​டும்" என செங்​கல்​பட்டு மாவட்ட ஆட்​சி​யருக்கு உத்​தர​விட்டு வழக்​கை முடித்​து வைத்​துள்​ளார்​.