

























Updated on:
சென்னை: ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிட வைத்து விஜய் நடத்தும் சதி அரசியல் நாடகம் எடுபடாது என்று தெரிவித்துள்ள தமிழக பாஜக, படம் வெளியானது குறித்து சிபிஐ விசாரணை கோர தயாரா என்றும் சவால் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “’ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியானதால் ரூ.500 கோடிக்கு மேல் தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்படும் என்று சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி, மக்களை ஏமாற்றி பரிதாப வாக்குகளைப் பெற விஜய் நாடகம் ஆடுகிறார்.
பாஜக மீதும் மத்திய அமைச்சர் எல். முருகன் மீதும் பொய் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தின் பட்டியல் சமூக பிரதிநிதியாக நேர்மையோடு செயல்படும் மத்திய அமைச்சர் எல். முருகனை அவமதிக்கும் நோக்கத்துடன், அவதூறு பரப்பிவிட்டு அம்பேத்கர் தான் எங்கள் கொள்கை தலைவர் என்று கூறுவதற்கு விஜய் வெட்கப்பட வேண்டும். இது குறித்து சிபிஐ விசாரணையை கோர விஜய் தயாரா?
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானது குறித்து தமிழக காவல்துறையில் இதுவரை ஏன் புகார் அளிக்கப்படவில்லை? சென்சார் போர்டிலும் ஏன் முறையிடவில்லை?
ஜனநாயகம் திரைப்படம் இணையத்தில் கசிந்ததற்கு மத்திய அமைச்சர் முருகனும் காரணம் என்று ஆதவ் அர்ஜுனா கூறி இருப்பது வடிகட்டிய பொய். அவர் மீது பாஜக சட்ட நடவடிக்கைகளை எடுக்கும்.
எம்ஜிஆரையும் விஜயையும் இணைத்து பேசி அதிமுக ஓட்டுக்களை பிரிக்கலாம் என்றும், ஜனநாயகன் படம் விவகாரத்தில் பாஜகவிற்கு எதிராக அவதூறு பேசி வாக்காளர்களை குழப்பி ஆதாயம் தேடலாம் என்றும் ஆதவ் அர்ஜுனா கருதுகிறார். கீழ்த்தரமான அவரது இந்த பகல் கனவு பலிக்காது.
திமுகவுக்கு ஓட்டு போடுவது தற்கொலைக்குச் சமம் என்பதை தமிழக மக்கள் உணர்ந்து விட்டார்கள். திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கின்ற வாக்காளர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே வாக்களிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。