
























Updated on
:
1 min read
சென்னை: தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் 2023-ம் ஆண்டு செப்.15-ம் தேதி திமுக அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 1.31 கோடிக்கும் அதிகமான மகளிர் பயனடைந்து வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகை மாதம் தோறும் 15-ம் தேதி அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக அரசு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு என்பது அந்தந்த அமைச்சகங்களின் ஒப்புதலோடு நடைபெற்று வருகிறது. திமுக அரசின் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ள நிலையில், தவெக அரசுஇன்னும் பொறுப்பேற்காத தால், கோப்புகளில் கையெழுத்திட்டு நிதியை விடுவிக்கப்படுவது தடைபட்டுள்ளது.
அதனால், மே மாதத்துக்கான தொகை, வழக்கம்போல் 15-ம் தேதி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரூ.2500 வழங்கப்படுமா? அதேநேரம், தவெக தலைவர் விஜய், தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்தார். தவெக அரசு விரைவில் பொறுப்பேற்க வுள்ள நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு இந்த மாதம் ரூ.1,000 வழங்கப்படுமா? அல்லது விஜய் அறிவித்தபடி ரூ.2,500 வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மகளிர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。