






















அதில் கூறியிருப்பதாவது: தெரு நாய்கள் தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த உத்தரவுகள் திரும்ப பெறப்பட மாட்டாது. விலங்குகள் நல வாரிய விதிகளை மாநில அரசுகள் முறையாக அமல்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் விலங்குகள் கருத்தடை மையத்தை அமைக்க வேண்டும்.
தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பகுதியில் விலங்குகள் கருத்தடை மையங்களை அதிகரிக்க வேண்டும். அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் போதுமான அளவு ரேபிஸ் தடுப்பூசிகளை வைத்திருக்க வேண்டும். நாய்க் கடி, அதற்கான முதலுதவி சிகிச்சை குறித்து பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விளையாட்டு அரங்குகள், மருத்துவமனைகளில் தெரு நாய்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும். இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். வெறிநோய் மற்றும் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட ஆபத்தான நாய்களை கருணை கொலை செய்யலாம். உச்ச நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தும் அரசு ஊழியர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。