
























மேலும் அவர்கள், பணியில் இருந்த மருத்துவர்களிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள், தேவைப்படும் வசதிகள், பணியாளர்கள் விவரங்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்துள்ளனர். இதேபோல், கடையநல்லூரில் உள்ள அம்மா உணவகத்தை தவெக நிர்வாகிகள் பார்வையிட்டு, அம்மா உணவகத்தில் உள் கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள், குடிநீர் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்துள்ளனர்.
இந்நிலையில், மக்கள் பிரதிநிதிகளாக இல்லாத கட்சி நிர்வாகிகள் அரசு மருத்துவமனை, அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசு மருத்துவமனை, அம்மா உணவகத்தை கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்ய அதிகாரம் அளித்தது யார்? இந்த ஆய்வுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளித்தது ஏன்? என்று சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ஆய்வுக்கு சென்றவர்கள் மற்றும் அவர்களை ஆய்வு செய்ய அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。