

























அப்போது அவர் பேசுகையில், “நான் இந்த ஆசிரமத்தில் 2 நாட்கள் தங்கலாம் என்று நினைத்தே வந்தேன். ஆனால் இங்குள்ள இயற்கை எழில், இங்குள்ளோரின் முகங்களில் நிலவும் மகிழ்ச்சி, ஏன் யானை, குதிரைகள், பசுக்கள் முகங்களில் கூட நிலவும் அமைதி என எல்லாம் சேர்ந்து என்னை இங்கு 15 நாட்கள் தங்கவைத்துவிட்டது. இங்கே இரண்டு குதிரைகள் இருக்கின்றன. அதில் ஒன்றின் பெயர் ரஜினி. இமாலயத்துக்குப் பின்னர் நான் இந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த போது மிகவும் மகிழ்ந்திருந்தேன்.
ஒரு நாள் குருதேவ் என்னிடம், “நான் தரிசன உலா செல்கிறேன். நீங்கள் என்னுடன் வருகிறீர்களா?” என்றார். நான் அதற்கு, ”குருதேவ், நான் உங்களுடன் வந்தால் உங்களுக்குத் தொந்தரவாக இருக்கும். நிறைய பேர் அங்கே இருப்பார்கள்” என்றேன்.
நிறைய மக்கள் இருப்பார்கள். அவர்களை என்னைப் பார்த்து ரஜினி, ரஜினி என்று ஆர்ப்பரிப்பார்கள். என்னுடன் புகைப்படம் எடுக்கக் கூடுவார்கள். ஆட்டோகிராஃப் கேட்பார்கள் என்று நினைத்தே நான் வேண்டாம் என்றேன். ஆனால், “ஒரு இடையூறும் இருக்காது” என்று கூறி குருதேவ் என்னைக் கூட்டிச் சென்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。