



























Updated on
:
1 min read
போபால்: மத்திய பிரதேச மாநில ஜபல்பூர் மாவட்டத்தில் பர்கி அணையில் கடந்த வியாழக்கிழமை அன்று சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (மே 3) காலை தமிழகத்தை சேர்ந்த காமராஜ் (39), மயூரன் (5) ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டது.
விபத்தில் சிக்கிய படகில் சுமார் 41 பேர் பயணித்ததாக அம்மாநில போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இதில் 28 பேர் மீட்கப்பட்டனர். 13 பேர் உயிரிழந்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் இந்த தகவலை அளித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய சுற்றுலா படகு, மத்திய பிரதேச அரசின் சுற்றுலா துறையால் இயக்கப்பட்டு வந்தது. இந்த படகு சுமார் 20 ஆண்டு காலம் பயன்படுத்தப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2006-ல் இந்த கப்பல் கட்டப்பட்டது. விபத்தை அடுத்து அதற்கு காரணமான மூவர் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.
படகை இயக்கியவர்களின் அலட்சியம்தான் இந்த விபத்துக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக வெளியான வீடியோவில் படகுப் பயணங்களின்போது செய்ய வேண்டிய அடிப்படை பாதுகாப்பு விதிகளைக் கூட விபத்தில் சிக்கிய படகை இயக்கிய ஊழியர்கள் பின்பற்றவில்லை என்று தெரிய வந்துள்ளது.
மீட்புப் பணி நிறைவு: இந்தச் சூழலில் இன்று (மே 3) படகு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நிறைவடைந்ததாக ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் ராகவேந்திரா சிங் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். மீட்புப் பணியில் அயராது உழைப்பை செலுத்திய பல்வேறு துறையினருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு மத்தியப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。