

























தொடர்ந்து, தற்காலிக சட்டப்பேரவைத் தலைவரை நியமிப்பதற்கான ஆவணம் உட்பட சில கோப்புகளில் கையெழுத்திட்டு தனது அலுவல் பணிகளை தொடங்கினார். இதையடுத்து அனைத்து துறைகளின் செயலர்கள், இயக்குநர்கள், அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது செங்கோட்டையன், ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் தவெக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையடுத்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வுக் கூட்டம், முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல், போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நிதிநிலை குறித்தும்.. இந்த விவகாரத்தில் தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பதால், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அரசின் தற்போதைய நிதிநிலை குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலர் எம்.சாய்குமார், உள்துறை செயலர் க.மணிவாசன், டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。