惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
阮一峰的网络日志
阮一峰的网络日志
S
Secure Thoughts
Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
C
Cyber Attacks, Cyber Crime and Cyber Security
T
Threat Research - Cisco Blogs
P
Privacy & Cybersecurity Law Blog
The Hacker News
The Hacker News
H
Heimdal Security Blog
W
WeLiveSecurity
L
LINUX DO - 热门话题
Hacker News: Ask HN
Hacker News: Ask HN
WordPress大学
WordPress大学
The Last Watchdog
The Last Watchdog
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 【当耐特】
D
DataBreaches.Net
I
Intezer
Webroot Blog
Webroot Blog
C
Cisco Blogs
AWS News Blog
AWS News Blog
博客园 - 聂微东
T
The Blog of Author Tim Ferriss
V
Vulnerabilities – Threatpost
罗磊的独立博客
Google DeepMind News
Google DeepMind News
N
Netflix TechBlog - Medium
Schneier on Security
Schneier on Security
宝玉的分享
宝玉的分享
博客园 - 叶小钗
PCI Perspectives
PCI Perspectives
D
Docker
Scott Helme
Scott Helme
NISL@THU
NISL@THU
J
Java Code Geeks
B
Blog RSS Feed
Google Online Security Blog
Google Online Security Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
T
The Exploit Database - CXSecurity.com
AI
AI
美团技术团队
Cloudbric
Cloudbric
月光博客
月光博客
P
Proofpoint News Feed
T
Tailwind CSS Blog
Google DeepMind News
Google DeepMind News
小众软件
小众软件
www.infosecurity-magazine.com
www.infosecurity-magazine.com
The Cloudflare Blog
cs.CV updates on arXiv.org
cs.CV updates on arXiv.org

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
விடாமுயற்சி, தளராத நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்: மாணவர்களுக்கு வெ.இறையன்பு, வெ.திருப்புகழ் அறிவுறுத்தல்
செய்திப்பிரிவு · 2026-05-25 · via hindutamil

‘இந்து தமிழ் திசை’ - ‘கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’ சார்பில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டி நிகழ்ச்சி சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் வெ.திருப்புகழ் ஆகியோர் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’யின் நிர்வாக இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் உதவிப் பொதுமேலாளர் மு.முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated on: 

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ - ‘கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’ சார்பில் நடந்த ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டி நிகழ்ச்சியில் பேசிய மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் வெ.இறையன்பு, வெ.திருப்புகழ் ஆகியோர், “இடைவிடாத முயற்சியும், தளராத நம்பிக்கையும் இருந்தால் யுபிஎஸ்சி தேர்வில் நிச்சயம் வெற்றிபெறலாம்” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து போட்டித் தேர்வர்களுக்கான ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டி நிகழ்ச்சியை பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட யுபிஎஸ்சி தேர்வுகளுக்கும், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கும் ஆலோசனை வழங்கும் வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை தி.நகர், வாணி மஹாலில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு, மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது: ‘மக்களோடு மக்களாக பழகுவேன்’ என்று எண்ணுபவர்களே இத்தேர்வை எழுதலாம். நீங்கள் மனிதர்களை நேசிப்பதாக இருந்தால் இந்த பணிக்கு வாருங்கள். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, ‘என் கால்கள் தண்ணீரில் நனையக் கூடாது’ என்று நினைப்பவர்களாக இருந்தால் இந்த பணிக்கு வரக்கூடாது.

இயந்திரங்களை நேசிக்கிறேன், கணினியின் முன்னால் அமர்வதில் களிப்படைகிறேன் என்று கருதினால் இந்த தேர்வை எழுதாதீர்கள். அதேபோல் ஏராளமானோர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, வேலை தேடுவதற்கு இது ஒரு வாய்ப்பு என்று கருதி இத்தேர்வை எழுதுகின்றனர். சிலர் கவுரவம், மதிப்பு, மரியாதை கிடைக்கும் என எழுதுகிறார்கள். இவர்கள் எல்லாம் யுபிஎஸ்சி தேர்வில் தோற்றுத்தான் போகின்றனர். அதேபோல் மனப்பாடம்தான் வழி என்று நினைப்பவர்களும் தோற்கத்தான் செய்கின்றனர்.

போட்டித்தேர்வில் தேர்ச்சி, வெற்றி என்பதல்ல. தகுதி பெற்றிருக்கிறீர்களா என்பது தான் முக்கியம். இங்கு நாம் எழுதுகிற அனைத்தும் முக்கியம். பெறும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியம். ஒவ்வொரு நொடியும் உன்னிப்பாக யார் படிக்கிறார்களோ, அவர்கள்தான் இதில் வெற்றி பெறுவார்கள். போட்டித் தேர்வுகளில் அறிவு 30 சதவீதம், புரிதல் 30 சதவீதம், பகுப்பாய்வு 40 சதவீதம் என்ற அடிப்படையில் தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

ஒரு தகவல் தெரிந்தால் மட்டும் இங்கு போதாது, அந்த தகவல் எதனால் கிடைத்தது, என்ன தாக்கத்தை அது ஏற்படுத்தும் என்பதையெல்லாம் நீங்கள் சிந்தித்து எழுத வேண்டும். இதற்காக ஆய்வு கட்டுரைகளைப் படியுங்கள். அண்மையில் நிகழ்ந்தமாற்றங்களைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். தோல்வி அடைந்தால் துவண்டு விடாதீர்கள். அடுத்தமுறை இன்னும் இரட்டிப்பு வேகத்தோடு செயல்படுங்கள்.

ஒவ்வொரு நாளும் அட்டவணையை தயாரித்து, எதை படிப்பது என்று குறித்துக்கொண்டு, அதை முடித்துவிட்ட பிறகுதான் தூங்க வேண்டும். மனம் நிர்ணயித்துவிட்டால், உடல் ஓய்வெடுக்காது. மனதை திடப்படுத்துங்கள். வைராக்கியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இடைவிடாத முயற்சியும், அயராத உழைப்பும், தளராத நம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் ஊக்க உரையாற்றிய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் வெ.திருப்புகழ் பேசும்போது, “குடிமைப் பணித் தேர்வு என்பது பிழைப்பு அல்ல, அது ஓர் அழைப்பு. எப்படி அதை நாம் பிழைப்பதற்காக செய்கிறோம் என்கிற நிலையிலிருந்து மாறி, இயற்கையின் அழைப்பாக, இருத்தலின் அழைப்பாக, இதயங்களின் அழைப்பாக அதை ஏற்றுக் கொண்டு பணி செய்ய வேண்டும். பணம் சம்பாதிப்பதற்கோ, புகழுடன் வாழ்வதற்கோ இந்த பணி உரியது அல்ல. சமூக மாற்றத்தை உருவாக்குவதற்கான ஒரு களமாகும்.

<div class="paragraphs"><p>நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர். படங்கள்: எஸ்.சத்தியசீலன்</p></div>

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர். படங்கள்: எஸ்.சத்தியசீலன்

உலகில் உள்ள மக்களாட்சி நாடுகளில் குடிமைப் பணியாளர்கள் கடுமையான போட்டி தேர்வுகளின் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதேபோல் இந்தியாவில் யுபிஎஸ்சி நடத்தும் தேர்வு முறையும் ஒரு கடுமையான தேர்வு முறையாகும். அந்த வகையில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் விண்ணப்பிக்கும் இத்தேர்வில் இறுதியாக ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் முதல் 100 இடங்களை பெறுபவர்களுக்கு மட்டுமே ஐஏஎஸ் பணிவாய்ப்பு கிடைக்கிறது.

இத்தகைய கடினமான போட்டி நிலவுவதால் மாணவர்கள் தங்களை மிகச்சிறந்த முறையில் தயார் செய்து கொள்ள வேண்டியது அவசியம். இன்றைய இளைஞர்களிடம் கணினி பயன்பாட்டால் எழுதும் பயிற்சி குறைந்து வருகிறது. யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தினமும் எழுதிப் பழக வேண்டும். அதேபோல் மாணவர்களுக்காக ‘கிங்மேக்கர்ஸ் அகாடமி’ போன்ற பயிற்சி நிறுவனங்கள் சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன. முழுமையான உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் இத்தேர்வில் நிச்சயம் வெற்றிபெற முடியும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக ‘கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’யின் நிர்வாக இயக்குநர் சத்யஸ்ஸ்ரீ பூமிநாதன் பேசுகையில், “இந்த குடிமைப் பணியை எப்படிபயன்படுத்தினால், எத்தகைய ஆளுமையாக நீங்கள் வெளிப்படுவீர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு இங்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள்.

தமிழக மாணவர்கள் பலர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிப்பெறுவதற்கு அடித்தளமிட்டவர் இறையன்பு. இந்த நிகழ்ச்சி, கண்டிப்பாக உங்களுக்குள் இருக்கக்கூடிய ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் என்கிற கனவை தட்டி எழுப்பும். அந்த கனவு இல்லாத மாணவர்களுக்கு அந்த கனவை விதைக்கும். குடிமைப் பணிகளின் தாக்கத்தை உணரச்செய்யும். முதன் முயற்சியிலேயே ஒரு சிலருக்கு தான் வெற்றி கிடைக்கும். ஆனால் பயிற்சியும், முயற்சியும் தொடர்ச்சியாகஇருந்தால் மகிழ்ச்சியான வெற்றியை பெறமுடியும்” என்று குறிப்பிட்டார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் உதவிப் பொதுமேலாளர் (நிகழ்வு ஒருங்கிணைப்பு & விற்பனைப் பிரிவு) மு.முருகேசன் பேசும்போது, “‘ஒவ்வொரு ஆண்டும் யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வரும் போது அதில்வெற்றிப்பெற்ற மாணவர்களின் பெயர், இந்த அரங்கில் இருக்கும் மாணவர்களின் பெயராக இருக்கவேண்டும், தமிழக மாணவர்கள் ஏராளமானோர் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் ‘இந்து தமிழ் திசை’ மற்றும் ‘கிங்மேக்கர்ஸ் அகாடமி’யின் பெரும் நம்பிக்கையாகும். அந்த வகையில்தான் இந்த நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்திவருகிறோம்” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றிப்பெற்ற கிங்மேக்கர்ஸ் அகாடமியைச் சேர்ந்த மாணவர்களும் கவுரவிக்கப்பட்டனர்.