
























Updated on
:
1 min read
சென்னை: விலை உயர்ந்த செல்போன்களை குறைந்த விலையில் தருவதாக கூறி, நூதன பண மோசடியில் ஈடுபட்ட மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்தியராஜ் (31). பூந்தமல்லி பகுதியில் தங்கி, கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். கடந்த 4-ம் தேதி மதியம், அண்ணாநகர், வள்ளியம்மாள் கல்லூரி தெருவில் காரில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு குடும்பத்துடன் வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவசரமாக பணம் தேவைப்படுகிறது.
எங்களிடம் போதிய பணம் இல்லை. எனவே, விலை உயர்ந்த இந்த புதிய செல்போனை வைத்துக் கொண்டு பணம் கொடுத்தால் உதவியாக இருக்கும் என கேட்டுக் கொண்டனர்.
அப்போது, அங்கு குடும்பத்துடன் வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவசரமாக பணம் தேவைப்படுகிறது.
எங்களிடம் போதிய பணம் இல்லை. எனவே, விலை உயர்ந்த இந்த புதிய செல்போனை வைத்துக் கொண்டு பணம் கொடுத்தால் உதவியாக இருக்கும் என கேட்டுக் கொண்டனர்.
விலை உயர்ந்த செல்போன் குறைந்த விலையில் கிடைக்கிறதே என ஆசைப்பட்ட சத்தியராஜ் ரூ.12 ஆயிரம் கொடுத்து அந்த செல்போனை வாங்கிக் கொண்டார். பின்னர் மாலையில் வீடு சென்று செல்போனை இயக்கிப் பார்த்தபோது அது இயங்கவில்லை.
இதையடுத்து வீட்டருகே உள்ள செல்போன் கடைக்கு சென்று சோதித்தபோது அது போலியான செல்போன் என தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், போலியான செல்போனை கொடுத்து மோசடியில் ஈடுபட்டது மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாலு (49), அவரது மனைவி பிரமிளா பாய் (42), இவர்களது மகன் பிரவீன் (18), உறவினர் தன்ராஜ் (27) என்பது தெரிந்தது.
தலைமறைவாக இருந்த இந்த 4 பேரையும் நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 26 போலி செல்போன்கள், 27 சார்ஜர்கள் மற்றும் ரூ.9 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைதான 4 பேரும் மும்பையிலிருந்து போலி செல்போன்களை வாங்கி வந்து அவசர தேவைக்காக விலை உயர்ந்த செல்போன்களை குறைந்த விலையில் தருவதாக கூறி சென்னையில் செல்போன்களை விற்று பண மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。