惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

宝玉的分享
宝玉的分享
B
Blog RSS Feed
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
MyScale Blog
MyScale Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
S
SegmentFault 最新的问题
Y
Y Combinator Blog
月光博客
月光博客
IT之家
IT之家
T
Tailwind CSS Blog
Last Week in AI
Last Week in AI
L
LangChain Blog
博客园_首页
MongoDB | Blog
MongoDB | Blog
P
Proofpoint News Feed
博客园 - Franky
WordPress大学
WordPress大学
云风的 BLOG
云风的 BLOG
M
MIT News - Artificial intelligence
V
Visual Studio Blog
小众软件
小众软件
博客园 - 叶小钗
博客园 - 三生石上(FineUI控件)
N
Netflix TechBlog - Medium

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“மின் கட்டண உயர்வை யாரும் ஏற்கத் தயாராக இல்லை” - ஜி.கே.வாசன்
இ.ஜெகநாதன் · 2026-06-17 · via hindutamil

ஜி.கே. வாசன்

Updated on: 

சிவகங்கை: “தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்துவது தவெக அரசின் கடமை. ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் அரசியல் சுதந்திரம் உள்ளது. எந்தக் கட்சியில் சேர வேண்டும் என்பது அவரவர் விருப்பம். அதற்கு தடை விதிக்க முடியாது” என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். மேலும், “மின் கட்டண உயர்வை யாரும் ஏற்கத் தயாராக இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

சிவகங்கையில் தமாகா நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்ளிடம் அவர் கூறியது: “தவெக அரசு அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட வேண்டும். பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பில் தெளிவான விளக்கம் இல்லை. பாரபட்சமின்றி அனைத்து விவசாயகளுக்கும் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளிடம் பேசி அவர்களது பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

கர்நாடக முதல்வர் மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியில் உறுதியாக இருக்கிறார். அது காவிரி டெல்டா விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். மேகேதாட்டு அணை கட்ட கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

மின் கட்டண உயர்வை யாரும் ஏற்கத் தயாராக இல்லை. மின் கட்டண உயர்வு இல்லை என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மேலும், கோடைக் காலத்தில் மின்வெட்டு இல்லாத சூழலை உறுதி செய்வது அரசின் பொறுப்பு.

தற்போது பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, சங்கிலி பறிப்பு, பாலியல் குற்றங்களால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை அதிகரித்து வருகிறது. இந்தச் சம்பவங்களுக்கு காவல் துறையும், அரசும் கடுமையான நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கால அவகாசம் கேட்கக் கூடாது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மன்னிப்பு கொடுக்க கூடாது.

சமூகச் சீர்கேடுகளுக்கு போதைப்பொருள், மதுப் பழக்கமே காரணமாக உள்ளன. அவற்றின் விற்பனை, பயன்பாட்டை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் கடன் சுமையை கட்டுப்படுத்துவதோடு, வருவாயையும் அதிகரிக்க வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்துவது தவெக அரசின் கடமை.

ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் அரசியல் சுதந்திரம் உள்ளது. எந்தக் கட்சியில் சேர வேண்டும் என்பது அவரவர் விருப்பம். அதற்கு தடை விதிக்க முடியாது.

தமாகா தங்களது அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தவே தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

சிவகங்கை கிராபைட் தொழிற்சாலையை உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் மேம்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போரின் கருத்துகளையும் அதிகாரிகள் கேட்டு, அச்சங்களை போக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.