惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

美团技术团队
J
Java Code Geeks
有赞技术团队
有赞技术团队
GbyAI
GbyAI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 叶小钗
阮一峰的网络日志
阮一峰的网络日志
Microsoft Security Blog
Microsoft Security Blog
IT之家
IT之家
G
Google Developers Blog
月光博客
月光博客
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
S
SegmentFault 最新的问题
博客园 - 三生石上(FineUI控件)
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - Franky
腾讯CDC
V
Visual Studio Blog
博客园 - 【当耐特】
D
Docker
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Engineering at Meta
Engineering at Meta
L
LangChain Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அமெரிக்காவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் - பங்கேற்ப...
2026-05-11 · via hindutamil

Updated on

2 min read

அமெரிக்க - ஈரான் போர்ப்பதற்றங்கள் தணியாத நிலையில் அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பைக் கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் வீரர்கள் அங்கு செல்வது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், அங்கு தங்கள் அணியினர் எப்படி நடத்தப்படுவார்கள் என்பது குறித்தும், அவர்களின் பாதுகாப்பு குறித்தும் ஈரான் கால்பந்துக் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

ஈரான் காலபந்துக் கூட்டமைப்பின் தலைவர் மெஹதி தாஜ் 2026 உலகக்கோப்பைக் கால்பந்துத் தொடரில் ஈரான் அணி “நிச்சயமாக” பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், போட்டியை நடத்தும் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள், ஈரான் அணியின் பயணம் மற்றும் அணிக்கு வழங்கப்படும் அணுகுமுறை தொடர்பான கவலைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, “அனைத்து வீரர்களும் தொழில்நுட்ப குழுவினரும், குறிப்பாக Islamic Revolutionary Guard Corps அமைப்பில் கட்டாய ராணுவ சேவை செய்தவர்கள், எந்த சிக்கலும் இல்லாமல் விசா பெற வேண்டும்” என்று மெஹதி தாஜ் கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலுக்கு பிறகு தற்போது மெத்தனமான போர்நிறுத்த நிலை தொடர்கிறது.

அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் விதித்த பயணத் தடையாலும் ஈரான் குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு செய்தி நிறுவனம் IRNA வெளியிட்ட அறிக்கையில், விசா, பாதுகாப்பு மற்றும் ஈரான் வீரர்கள், அதிகாரிகள் மீதான அணுகுமுறை குறித்து உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளதாகவும், “எங்கள் நம்பிக்கைகள், கலாசாரம் மற்றும் கொள்கைகளில் இருந்து பின்வாங்காமல் உலகக்கோப்பையில் பங்கேற்போம்” என்றும் தாஜ் கூறியுள்ளார்.

இதற்கு முன் கடந்த மாதம், கனடா நாட்டில் நடைபெற்ற உலகக் கால்பந்து கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க தாஜ்க்கு அனுமதி மறுக்கப்பட்டது. புரட்சிகர இஸ்லாமியக் காவற்படை உடனான அவரது பழைய தொடர்புகளே இதற்குக் காரணம் என கூறப்பட்டது. அந்த அமைப்பை அமெரிக்காவும் கனடாவும் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. ஈரான் தேசியக்கொடி, தேசிய கீதம் மற்றும் அதிகாரிகளுக்கு உலகக்கோப்பை போட்டியின் போது மரியாதை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் தாஜ் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

இந்த விவகாரம் ஈரான் அணியின் முக்கிய வீரரான மெஹ்தி தாரேமி மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அணித்தலைவரும் முன்னணி ஸ்டிரைக்கருமான தாரேமி, தனது கட்டாய ராணுவ சேவையை நிறைவு செய்திருந்தார். ஈரானில் கட்டாய ராணுவ சேவைக்கு அழைக்கப்படுவோர் காவல்துறை அல்லது ராணுவத்திற்கும் சீரற்ற முறையில் நியமிக்கப்படுவது வழக்கம்.

ஈரான் அணி, ‘ஜி’ பிரிவில் பெல்ஜியம், நியூஸிலாந்து மற்றும் எகிப்து அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகிலுள்ள இங்கில்வுட் நகரில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. ஈரான் தொடர்ந்து நான்காவது முறையாகவும், மொத்தம் ஏழாவது முறையாகவும் உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால் இதுவரை ஒருபோதும் குரூப் ஸ்டேஜைச் சுற்றைத் தாண்டி முன்னேறியதில்லை. உலக தரவரிசையில் தற்போது 21ஆவது இடத்தில் உள்ள ஈரான், ஆசிய தகுதிச்சுற்றில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.