惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
IT之家
IT之家
博客园_首页
人人都是产品经理
人人都是产品经理
博客园 - Franky
I
InfoQ
Recent Announcements
Recent Announcements
P
Proofpoint News Feed
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
GbyAI
GbyAI
大猫的无限游戏
大猫的无限游戏
aimingoo的专栏
aimingoo的专栏
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
月光博客
月光博客
Microsoft Security Blog
Microsoft Security Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
B
Blog RSS Feed
MongoDB | Blog
MongoDB | Blog
雷峰网
雷峰网
博客园 - 聂微东
N
Netflix TechBlog - Medium
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
The GitHub Blog
The GitHub Blog
D
Docker

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தவெக அரசு செய்வது கருத்து சுதந்திரம் மீதான தாக்குதல்: தமி...
2026-05-11 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: ‘தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்களின் கணக்குகளை முடக்க கோருவது பேச்சு சுதந்திரத்தின் மீதான வெளிப்படையான தாக்குதல்’ என பாஜக மாநிலத் தலைமைச் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு இணைய குற்றப்பிரிவு எக்ஸ் தளத்துக்கு அனுப்பியுள்ள ஓர் அறிவிக்கையில் @MaridhasAnswers உட்பட 18 கணக்குகளின் விமர்சனப் பதிவுகளை நீக்கவும், முடக்கவும் கோரியுள்ளது, பேச்சு சுதந்திரத்தின் மீதும் அரசியல் எதிர்ப்பின் மீதும் நடத்தப்பட்ட வெளிப்படையான தாக்குதல் ஆகும்.

ஓர் அரசியல் கட்சியையோ அல்லது அதன் தலைவரையோ கடுமையாக விமர்சித்தால் “பொது அமைதியை தூண்டுதல்” என்று சொல்லி போலீஸ் தலையீடும், எச்சரிக்கையும் தேவையற்ற நடவடிக்கையே.

நிர்வாகம், நிதி, கொள்கைகள் குறித்த நியாயமான கேள்விகளை “பொது அமைதிக்கு அச்சுறுத்தல்” என்று முத்திரை குத்துவது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, ஜனநாயகத்தை நெறித்துவிடும்.

எதிர்ப்பு என்பது ஜனநாயகத்தின் உயிர் நாடி. தவெக அல்லது எந்தவொரு ஆளும் கட்சியின் விமர்சகர்களை அடக்கவும் சைபர் சட்டங்களைப் பயன்படுத்துவது அரசியலமைப்பையே பலவீனப்படுத்தும் செயலாகும். இது சட்ட அமலாக்கம் அல்ல, மாறாக இது அதிகார துஷ்பிரயோகமாகும். இந்த அதிகார துஷ்பிரயோகத்தை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.

பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும், ஆளும் தரப்பின் விருப்பத்திற்கேற்ப ஏற்ப காவல் துறை செயல்படக் கூடாது.

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே சாமானிய மக்கள் மீது இந்த வருந்தத்தக்க துன்புறுத்தல் தொடங்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. முதல்வரான பின்னர் தன் முதல் உரையில், அரசியல் பயணத்தில் பல தடைகளை எதிர்கொண்டதாக பேசிய முதல்வர் ஜோசப் விஜய், இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, அத்துமீறலை புரிந்துகொண்டு, உடனடியாக சைபர் குற்றப் பிரிவின் மேற்படி நடவடிக்கையை திரும்பப் பெற உத்தரவிடுவார் என்று நம்புகிறேன்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற திராவிட மாடல் அராஜகங்களை தொடர வேண்டாம். அதே நேரம், முதலமைச்சரை தரக்குறைவாகவோ, அநாகரிகமாகவோ யார் விமர்சித்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், கொள்கை ரீதியான விமர்சனமும், அரசியல் எதிர்ப்பும் குற்றங்கள் அல்ல என்பதை முதல்வர் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.