




















வாக்காளர்கள் நின்று கொண்டிருந்த வரிசையைக் கடந்து சென்ற அந்த யானை, அங்கிருந்த வாகனங்களை நோட்டமிட்டுக்கொண்டிருந்தது. இதனால், தேர்தல் பணிகள் சற்று தாமதமாகின. எனினும், லோதாஷூலி சரகத்தில் இருந்து விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், அந்த யானையை மெதுவாக பாதுகாப்பான தூரத்துக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, வாக்குப்பதிவு மையம் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பியது.
காடுகளை ஒட்டிய பகுதி என்பதால், வனத்துறைக்கு முன்கூட்டியே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில், வனத்துறை அதிகாரிகளும் காலை முதலே தயார் நிலையில் இருந்ததால், யானை விரைவாக அப்புறப்படுத்தப்பட்டது. ராம்லால் என்ற பெயர் கொண்ட இந்த யானை அடிக்கடி இப்பகுதிக்குள் வரும் என்றும் கிராம மக்கள் உணவுகளை வழங்கி மகிழ்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று 152 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 41.11% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。