惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 叶小钗
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Microsoft Security Blog
Microsoft Security Blog
罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
美团技术团队
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
aimingoo的专栏
aimingoo的专栏
腾讯CDC
WordPress大学
WordPress大学
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
F
Fortinet All Blogs
G
Google Developers Blog
MongoDB | Blog
MongoDB | Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
小众软件
小众软件
Engineering at Meta
Engineering at Meta
博客园_首页
B
Blog RSS Feed
D
Docker
M
MIT News - Artificial intelligence
爱范儿
爱范儿
I
InfoQ

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவு சட்ட விரோதம் என அறிவிக்கக் ...
செய்திப்பிரிவு · 2026-05-07 · via hindutamil

Updated on: 

சென்னை: முன்​னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்​கில் ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்ட பேரறி​வாளனை வழக்​கறிஞ​ராக பதிவு செய்​திருப்​பது சட்ட விரோதம் என்று அறிவிக்​கக் கோரி தொடரப்​பட்ட வழக்​கில், அகில இந்​திய பார் கவுன்​சில், தமிழ்​நாடு, புதுச்​சேரி பார் கவுன்​சில் 4 வார காலத்துக்​குள் பதில் அளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இது தொடர்​பாக சென்னை நுங்​கம்​பாக்​கத்​தைச் சேர்ந்த பி.ர​வி​ராஜா என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது:

வழக்​கறிஞர் தொழிலுக்கு என தனிப்​பட்ட மாண்​பு​கள், ஒழுக்க நெறி​முறை​கள் உள்​ளன. அதற்​காகத்​தான் வழக்​கறிஞர் சட்​டமே தனி​யாக உரு​வாக்​கப்​பட்டு விதி​முறை​கள் வகுக்​கப்பட்​டுள்​ளன. இது வணிக ரீதியி​லான தொழில் அல்ல. சட்​டத்​தின் துணை​கொண்டு நீதியை நிலை​நாட்​டும் உன்​னத​மான தொழில். ஆனால், இந்த தொழில் நெறிகளை மீறி பார் கவுன்​சில் நிர்​வாகம் கொலைக் குற்​றத்​தில் ஈடுபட்ட விடு​தலைப்​ புலிகள் ஆதரவாளரான பேரறி​வாளனை வழக்​கறிஞ​ராக பதிவு செய்திருப்பது கடும் விமர்​சனத்​துக்கு உரியது.

முன்​னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்​கில் ஆயுள் தண்டனை விதிக்​கப்​பட்டு 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக சிறை​யில் தண்​டனை அனுப​வித்த பேரறி​வாளன், உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி கடந்த 2022-ம் ஆண்டு முன்​கூட்​டியே விடுவிக்​கப்​பட்​டார். அவர் கொலைக் குற்​றத்​தில் ஈடு​பட​வில்லை என்று நீதி​மன்​றம் ஒரு​போதும் கூற​வில்​லை.

இந்த சூழலில் கடந்த ஏப்​.24-ம் தேதி பேரறி​வாளன், பெங்களூருவில் உள்ள தனி​யார் சட்​டக் கல்​லூரி​யில் சட்​டப் படிப்பை முடித்துள்​ளார் என்று கூறி அவரை வழக்​கறிஞ​ராக தமிழ்​நாடு, புதுச்​சேரி பார் கவுன்​சில் பதிவு செய்​திருப்​பது கடும் ஆட்சேபத்​துக்கு உரியது. அவரது பதிவை முன்​கூட்டி வெளிப்படையாக பார் கவுன்​சில் நிர்​வாகி​களால் அறிவிக்​காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. பார் கவுன்​சிலுக்கு தேர்​தல் நடத்தப்பட்டு வாக்​கு​கள் எண்​ணப்​பட்டு வரும் சூழலில், அவசர கதி​யில் பேரறி​வாளனை வழக்​கறிஞ​ராக பதிவு செய்​திருப்​பது பல்​வேறு சந்​தேகங்​களை எழுப்​பு​கிறது.

வழக்​கறிஞர் சட்​டத்​தின்​படி கொலை, கொள்​ளை, பாலியல் வன்​முறை சம்​பவங்​களில் ஈடு​பட்டு குற்​றச்​சாட்டு நிரூபிக்​கப்​பட்டு தண்​டனை விதிக்​கப்​பட்​ட​வர்​களை ஒரு​போதும் வழக்​கறிஞ​ராக பதிவு செய்​யக்​கூ​டாது. முன்​னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்​கில் தண்​டிக்​கப்​பட்ட பேரறி​வாளனை வழக்​கறிஞ​ராக பதிவு செய்​திருப்​பது வழக்​கறிஞர் சட்​டத்​துக்கு விரோத​மானது. இதை அனு​ம​தித்​தால் எதிர்​காலத்​தில் பெண்​களை வன்​கொடுமை செய்த குற்​ற​வாளி​கூட வழக்​கறிஞர் ஆகலாம் என்ற நிலை உரு​வாகும். எனவே, பேரறி​வாளன் வழக்​கறிஞர் என்ற முறை​யில் எந்த நீதி​மன்​றங்​களி​லும் ஆஜராகி வாதிடக்​கூ​டாது என தடை விதித்​து, அவரது வழக்​கறிஞர் பதிவை​யும் ரத்து செய்ய வேண்​டும் என்று மனுவில் கோரி​யிருந்​தார்.

நீதிப​தி​கள் எஸ்​.சவுந்​தர், பி.பி.​பாலாஜி ஆகியோர் அடங்​கிய விடு​முறைக் கால அமர்​வில் இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் சுதர்​ஷனா சுந்​தர் ஆஜராகி, ‘‘பேரறி​வாளனை உச்ச நீதி​மன்​றம் நிரப​ராதி எனக்​கூறி விடு​தலை செய்​ய​வில்​லை. மனி​தாபி​மான அடிப்​படை​யில்​தான் முன்​கூட்டி விடு​வித்​துள்​ளது. எனவே, வழக்​கறிஞர் சட்​டப்​படி அவர் தன்னை வழக்​கறிஞ​ராக பதிவு செய்​யும் தகு​தியை இழந்​து​விட்​டார்.

எனவே, இந்த வழக்கு நிலு​வை​யில் இருக்​கும் வரை அவரது வழக்​கறிஞர் பதிவை நிறுத்தி வைக்க வேண்​டும். அத்​துடன் அவரை வழக்​கறிஞ​ராக பதிவு செய்​திருப்​பது சட்​ட​விரோதம் என்​றும் அறிவிக்க வேண்​டும்’’ என்று வாதிட்​டார்.

இதையடுத்து நீதிப​தி​கள், இது தொடர்​பாக அகில இந்​திய பார் கவுன்​சில், தமிழ்​நாடு, புதுச்​சேரி பார் கவுன்​சில் மற்​றும் பேரறி​வாளன் உள்​ளிட்​டோர்​ 4 வார காலத்​துக்​குள்​ பதில்​ அளிக்​க உத்​தர​விட்​டு வி​சா​ரணையை தள்​ளிவைத்​தனர்​.