惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

C
Check Point Blog
有赞技术团队
有赞技术团队
博客园 - 三生石上(FineUI控件)
博客园_首页
博客园 - 【当耐特】
WordPress大学
WordPress大学
月光博客
月光博客
博客园 - 叶小钗
S
SegmentFault 最新的问题
雷峰网
雷峰网
H
Help Net Security
宝玉的分享
宝玉的分享
A
About on SuperTechFans
IT之家
IT之家
J
Java Code Geeks
Hugging Face - Blog
Hugging Face - Blog
D
DataBreaches.Net
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 聂微东
T
The Blog of Author Tim Ferriss
B
Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நடிகை கவுதமியிடம் ரூ.25 கோடி சொத்து மோசடி: கட்டுமான நிறுவ...
செய்திப்பிரிவு · 2026-06-18 · via hindutamil

Updated on: 

சென்னை: நடிகை கவுதமி​யிடம் ரூ.25 கோடி சொத்து மோசடி விவ​காரத்​தில் ரியல் எஸ்​டேட் அதிபர் தொடர்​புடைய 6 இடங்களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்தினர்.

பிரபல நடிகை கவுதமி, தற்​போது தொலைக்​காட்சி நிகழ்ச்சிகளில் பங்​கேற்று வரு​கிறார். கடந்த 2004-ல் புற்றுநோயால் பாதிக்​கப்​பட்ட அவர், அதில் இருந்து மீண்டு வந்​து, புற்​று​நோய் தொடர்​பான விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகளி​லும் பங்கேற்று வரு​கிறார். கடந்த 2023-ம் ஆண்டு சென்னை காவல் ஆணை​யரிடம் அவர் ஒரு புகார் கொடுத்​தார்.

அதில், ‘சென்னை வேளச்​சேரியை சேர்ந்த கட்​டு​மான நிறுவன அதிபர் அழகப்​பன், ஸ்ரீபெரும்​புதூரில் எனக்கு சொந்​த​மான ரூ.25 கோடி மதிப்​புள்ள 46 ஏக்​கர் நிலத்​தை, ரூ.6 கோடி கொடுத்து வாங்கி என்னை ஏமாற்​றி​விட்​டார். எனது புற்​று​நோய் சிகிச்​சைக்​காக​வும், என் குழந்​தை​யின் செல​வுக்​காக​வும் நிலத்தை விற்க வேண்​டிய நிலைக்கு நான் தள்​ளப்​பட்​டதை அறிந்து அவர் ஏமாற்றி விட்டார்’ என்று அதில் கூறி​யிருந்​தார்.

காவல் ஆணை​யர் உத்​தர​வின்​பேரில், சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். இதையறிந்த அழகப்பன் குடும்​பத்​துடன் தலைமறை​வா​னார். நீண்ட தேடுதலுக்கு பிறகு, கேரள மாநிலம் திருச்​சூரில் பதுங்கி இருந்த அவரை​யும், குடும்​பத்​தினரை​யும் போலீ​ஸார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து சிறை​யில் அடைத்​தனர்.

முன்​ன​தாக, விசா​ரணை​யின்​போது, அழகப்​பனின் வீட்​டில் இருந்து சில ஆவணங்​களை போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர். இதில் ஆஸ்​திரேலி​யா​வில் அழகப்​பன் குடும்​பத்​தினர் முதலீடு செய்​ததற்​கான ஆவணங்​களை கைப்​பற்​றிய​தாக கூறப்​படு​கிறது. இதன் அடிப்​படை​யில் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், அழகப்​பன் சட்ட விரோத பணப் பரிவர்த்​தனை​யில் ஈடு​பட்​டது தெரிய​வந்​தது. இதையடுத்​து, மத்​தி​யக் குற்​றப்​பிரிவு போலீ​ஸாரின் பரிந்​துரை அடிப்​படை​யில் அமலாக்​கத் துறை​யினர் விசா​ரணை நடத்​தினர். இதில், சட்ட விரோத பணப் பரி​மாற்​றம் நடந்​திருப்​பது உறுதி செய்யப்​பட்​ட​தாக தகவல் வெளி​யானது.

இந்​நிலை​யில், அதற்​கான ஆதா​ரங்​களை திரட்​டும் வகை​யில், சென்னை வேளச்​சேரி, ராஜா அண்​ணா​மலைபுரத்​தில் உள்ள அழகப்​பனின் வீடு​கள், அண்ணா நகரில் உள்ள அவரது நண்​பர் வீடு ஆகிய 3 இடங்​களில் அமலாக்​கத் துறை​யினர் நேற்று சோதனை​யில் ஈடு​பட்​டனர். இதே​போல மதுரை, சிவகங்​கை, காரைக்​குடி​யிலும் அழகப்​பன் தொடர்பு உடைய இடங்​களில் அமலாக்​கத் துறை​யினர் சோதனை செய்​தனர். இதில் முக்​கிய ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. வழக்கு வி​சா​ரணை தொடர்ந்து நடை​பெற்று வரு​வ​தால் அதுதொடர்​பான விவரங்​களை தற்​போது வெளி​யிட இயலாது என அதி​காரி​கள்​ தெரிவித்தனர்.