




























திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
Updated on:
தூத்துக்குடி: முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிறு விடுமுறை மற்றும் அமாவாசை தினத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனால், பொது தரிசனம், நூறு ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கான சிறப்பு தரிசன பாதைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。