
































எனினும், தீ விபத்தில் முதல் தளம், 2-வது, 3-வது தளங்களில் இருந்து 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடங்குவர். மேலும் 15 பேர் மீட்கப்பட்டனர் என்று தீயணைப்பு அதிகாரி முகேஷ் வர்மா தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ”தீயில் 9 பேர் உயிரிழந்தது என்னை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். இந்த சோகமான தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவர்களுக்கு மன வலிமையை தர வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என கூறியுள்ளார்.
ஷதாரா தொகுதி பாஜக எம்எல்ஏ சஞ்சய் கோயலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。