






















சென்னை: தமிழக முதல்வர் விஜய்-க்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், மாநில முதல்வர்களுக்கு வழங்கப்படும் உயர் பாதுகாப்பான ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பை விஜய்-க்கும் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே, விஜய் கட்சி தொடங்கியவுடன் பிரச்சாரத்தின் போது பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது. இதையடுத்து, அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படும் ‘சிறப்பு பாதுகாப்புப் படை’க்கு (எஸ்பிஜி) அடுத்த படியான ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு முதல்வர் விஜய்க்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பின் சிறப்புகள்: மாநில முதல்வர்கள், மூத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்படும். இந்த பாதுகாப்பின் கீழ் இருப்பவர்களுக்கு 24 மணி நேரமும், மத்திய பாதுகாப்புப் படையினர் அடங்கிய 55-க்கும் மேற்பட்ட வீரர்கள் அடங்கிய குழு பாதுகாப்பு அளிக்கும்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。