





















புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்மூலம், வெப்ப அலை சூழல் இரண்டு நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் என அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக லக்னோ வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உத்தரப்பிரதேசத்தின் பண்டா, சித்ரகூட், கவுசாம்பி, பிரயாக்ராஜ், ஃபதேபூர், பிரதாப்கர், மிர்சாபூர், வாரணாசி, பதோஹி, ஜான்பூர் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வெப்ப அலை வீசக்கூடும். கடுமையான முதல் மிகக் கடுமையான வெப்ப அலை நிலவும். இது பொது சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாக்பத், மீரட், காஜியாபாத், ஹப்பூர், கவுதம் புத்த நகர், பலந்த்ஷஹர், அலிகார், மதுரா, ஆக்ரா உள்ளிட்ட 34 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ள லக்னோ வானிலை ஆய்வு மையம், தேவரியா, லக்கிம்பூர் கேரி, சீதாபூர், ஹர்தோய், ஃபரூக்காபாத், லக்னோ, பாரபங்கி, அயோத்தி உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。