惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
M
MIT News - Artificial intelligence
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 聂微东
量子位
S
SegmentFault 最新的问题
V
Visual Studio Blog
博客园 - 【当耐特】
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
小众软件
小众软件
Stack Overflow Blog
Stack Overflow Blog
Vercel News
Vercel News
D
Docker
J
Java Code Geeks
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - Franky
Recent Announcements
Recent Announcements
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
MongoDB | Blog
MongoDB | Blog
D
DataBreaches.Net
Y
Y Combinator Blog
云风的 BLOG
云风的 BLOG
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
விளாத்திகுளம் தொகுதியில் 4 கிராமங்களில் தேர்தல் புறக்கணிப...
2026-04-23 · via hindutamil

Updated on

2 min read

கோவில்பட்டி: விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட எட்டயபுரம் அருகே குளத்துள்வாய்பட்டியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி 4 கிராம மக்கள், வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட எட்டயபுரம் அருகே சுரைக்காய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துள்வாய்பட்டி கிராமத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 45 வீடுகள் அமைந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அதன் பின்னர் குளத்துள்வாய்பட்டி கிராம மக்கள் தங்களது விவசாய நிலங்களுக்கு செல்வதில் பிரச்சினை உருவாகியது. அவர்களுக்கும் முகாமில் உள்ளவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களை கண்காணிக்க வேண்டும். இப்பகுதியில் போதை பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், குளத்துள்வாய்பட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தங்கியிருந்த கோழிப்பண்ணை ஷெட்டை தங்களுக்கு விவசாய விளை பொருட்கள் காய வைக்கும் களமாக பயன்படுத்த வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தரப்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்தவொரு தீர்வும் எட்டப்படாமல் அப்படியே உள்ளது. இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6-ம் தேதி குளத்துள்வாய்பட்டி கிராம மக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்புக் கொடிகளை ஏற்றி, சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து கடந்த 17-ம் தேதி கிராம மக்கள் சார்பில் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையில் சரல் மண் கொட்டி சமன் செய்தனர். இதற்கு முகாம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மறுநாள் 18-ம் தேதி கிராம மக்களுக்கும் முகாமை சேர்ந்தவருக்கும் இடையே பிரச்சினை உருவானது. போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் குளத்துள்வாய்ப்பட்டி கிராமத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை உடனடியாக இங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டி கிராம மக்கள் உறுதியாக இருந்தனர். இதனால் பேச்சுவார்த்தை எந்தவித முடிவும் எட்டப்படாமல் போனது.

தொடர்ந்து கிராம மக்கள் இலங்கை தமிழர் முகாமை இடமாற்றம் செய்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிப்போம் இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்போம் என அறிவித்தனர். அதன்படி இன்று காலை ஏழு மணிக்கு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. குளத்துள்வாய்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தயாராக இருந்தனர். இந்த வாக்குச்சாவடியில் 453 ஆண்கள், 530 பெண்கள் என மொத்தம் 983 வாக்காளர்கள் உள்ளனர். இதில் காலை 9 மணி நிலவரப்படி 5 பேர் மட்டுமே வாக்களித்தனர். 11 மணி நிலவரப்படி 8 பேர் வாக்களித்துள்ளனர்.

இந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட குளத்தூள்வாய் பட்டி, குமார கிரி, சோத்து நாயக்கன்பட்டி, அம்மா மடம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்லாமல் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்கள் வீட்டு வாசலிலேயே அமர்ந்திருந்தனர். வாக்காளர்கள் இல்லாமல் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.

வருவாய்த்துறை மற்றும் காவல்துறையின் அலட்சியம் காரணமாகவே குளத்துள்வாய்ப்பட்டி கிராமத்தில் பிரச்சினை பெரிதாகிவிட்டது. இதற்கு ஒரே தீர்வு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை இங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றம் செய்வது மட்டுமே, என கிராம மக்கள் தெரிவித்தனர்.