惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
I
InfoQ
J
Java Code Geeks
Microsoft Security Blog
Microsoft Security Blog
G
Google Developers Blog
D
DataBreaches.Net
Recent Announcements
Recent Announcements
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
B
Blog RSS Feed
Y
Y Combinator Blog
博客园 - 【当耐特】
博客园 - 聂微东
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
大猫的无限游戏
大猫的无限游戏
P
Proofpoint News Feed
量子位
C
Check Point Blog
F
Fortinet All Blogs
罗磊的独立博客
Last Week in AI
Last Week in AI
GbyAI
GbyAI
L
LangChain Blog
博客园 - 司徒正美

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வைகை ஆற்றில் கள்ளழகர்: ‘கோவிந்தா’ கோஷம் முழங்க லட்சக்கணக்...
2026-05-01 · via hindutamil

மதுரை சித்திரைத் திருவிழாவில் புதூர் பகுதியில் நேற்று நடைபெற்ற எதிர் சேவையில் கள்ளழகரைக் காண குவிந்த பக்தர்கள். (உள்படம்) கள்ளழகர் திருக்கோலத்தில் அருள்பாலித்த சுந்தரராஜ பெருமாள். படங்கள்: என்.தங்கரத்தினம்

Updated on

1 min read

மதுரை: மதுரை சித்​திரைத் திரு​விழா​வில் இன்று அதி​காலை வைகை ஆற்​றில் கள்​ளழகர் எழுந்​தருளி​னார். லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர்.

மதுரை கள்​ளழகர் கோயில் சித்​திரைத் திரு​விழா ஏப். 27-ம் தேதி தொடங்கி மே 6-ம் தேதி வரை நடை​பெறுகிறது. மண்​டூக முனிவருக்கு சாப​விமோசனம் அளிப்​ப​தற்​காக நேற்று முன்​தினம் தங்​கப் பல்​லக்​கில் கள்​ளழகர் திருக்​கோலத்​தில் சுந்​தர​ராஜ பெரு​மாள் புறப்​பட்​டார். அவரை எதிர்​கொண்டு வரவேற்​கும் எதிர்​சேவை நிகழ்ச்சி மதுரை மாநகர எல்​லை​யான மூன்​று​மாவடி​யில் நேற்று அதி​காலை 5.30 மணி​யள​வில் நடை​பெற்​றது. ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கள்​ளழகரை தரிசனம் செய்​தனர்.

பின்​னர், புதூர் மாரி​யம்​மன் கோயில், ரிசர்வ் லைன் மாரி​யம்​மன் கோயில், அவுட்​போஸ்ட் மாரி​யம்​மன் கோயில், அம்​பலக்​காரர் மண்​டகப்​படிகளில் எழுந்​தருளி இரவு 8.30 மணி​யள​வில் தல்​லாகுளம் பிரசன்ன வெங்​க​டாசலபதி கோயிலுக்கு கள்​ளழகர் வந்​தடைந்​தார்.

அங்கு திரு​மஞ்​சன​மாகி தங்​கக் குதிரை வாக​னத்​தில் எழுந்​தருளி, ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஆண்​டாள் நாச்​சி​யார் சூடிக்​கொடுத்த மாலையை அணிந்​து​ கொண்​டார். இன்று (மே 1) அதி​காலை கோயி​லில் இருந்து புறப்​பா​டாகி தல்​லாகுளம் கருப்​பண​சாமி கோயில் முன் ஆயிரம் பொன் சப்​பரத்​தில் எழுந்​தருளி​னார்.

அங்​கிருந்து வைகை ஆறு நோக்கி தங்​கக் குதிரை வாக​னத்​தில் புறப்​பட்​டார். எழுத்​தாணிக்​காரத்​தெரு வீர​ராகவ பெரு​மாள் வெள்ளி குதிரை வாக​னத்​தில் வரவேற்க, அதி​காலை 5.35 மணி முதல் 5.55 மணிக்​குள் கள்​ளழகர் வைகை ஆற்​றில் எழுந்​தருளி​னார். `கோ​விந்​தா.. கோவிந்தா..' என்ற கோஷம் முழங்க பக்​திப் பெருக்​குடன் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர்.

பின்​னர், காலை 7.25 மணி​யள​வில் வையாளி​யாகி வீர​ராகவப் பெரு​மாளுக்கு மாலை சாற்​றி​விட்டு அங்​கிருந்து ராம​ராயர் மண்​டகப்​படிக்கு புறப்​படு​கிறார். அங்கு பக்​தர்​கள் தண்​ணீர் பீய்ச்சி அடித்து கள்​ளழகரை குளிர்​விப்​பார்​கள். இன்​றிரவு வண்​டியூர் வீர​ராகவப் பெரு​மாள் கோயி​லில் தங்​கு​கிறார். நாளை தேனூர் மண்​டகப்​படி​யில் மண்​டூக முனிவருக்கு கள்​ளழகர் சாப​விமோசனம் அளிக்​கிறார். அன்​றிரவு ராம​ராயர் மண்​டபத்​தில் விடிய விடிய தசாவ​தா​ரம் நடை​பெறும்.

மே 3-ல் ராம​ராயர் மண்​டகப்​படியி​லிருந்து அனந்​த​ராயர் பல்​லக்​கில் ராசாங்க திருக்​கோலத்​தில் ராம​நாத​புரம் மன்​னர் சேதுபதி மண்​டபம் செல்​கிறார். மே 4-ல் ராம​நாத​புரம் மன்​னர் சேதுபதி மண்​டபத்​திலிருந்து அதி​காலை 2.30 மணி​யள​வில் பூப்​பல்​லக்​கில் கள்​ளழகர் திருக்​கோலத்​தில் எழுந்​தருள்​கிறார். மே 5-ம் தேதி காலை 10.40 மணி​யள​வில் அழகர் கோயிலை சென்​றடைகிறார். மே 6-ல் உற்சவ சாந்​தி​யுடன் திரு​விழா நிறைவு பெறுகிறது.

7,500 போலீ​ஸார் பாது​காப்பு: கள்​ளழகர் வைகை ஆற்​றில் எழுந்​தருள்​வதையொட்டி தல்​லாகுளம், கோரிப்​பாளை​யம், ஆழ்​வார்​புரம், வைகை வடகரை உள்​ளிட்ட பகு​தி​களில் விரி​வான பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டன. தென் மண்டல ஐஜி விஜயேந்​திர பிதா​ரி, மதுரை மாநகர காவல் ஆணை​யர் அபிஷேக் தீட்​சித் மேற்​பார்​வை​யில் மொத்​தம்​ 7,500 போலீ​ஸார்​ பாது​காப்​பு பணி​யில்​ ஈடு​படுத்​தப்​பட்​டனர்​