惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
G
Google Developers Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 【当耐特】
S
SegmentFault 最新的问题
宝玉的分享
宝玉的分享
博客园 - Franky
博客园_首页
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
WordPress大学
WordPress大学
有赞技术团队
有赞技术团队
月光博客
月光博客
博客园 - 聂微东
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
小众软件
小众软件
Microsoft Security Blog
Microsoft Security Blog
Last Week in AI
Last Week in AI
Vercel News
Vercel News
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
爱范儿
爱范儿
J
Java Code Geeks
博客园 - 叶小钗
Engineering at Meta
Engineering at Meta
阮一峰的网络日志
阮一峰的网络日志

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கான சதி பாகிஸ்தானில் தீட்ட...
2026-05-23 · via hindutamil

பஹல்காம் தாக்குதல் நடந்த பைசரன் பள்ளத்தாக்கு. (கோப்புப் படம்)

Updated on

2 min read

புதுடெல்லி: பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதல் தொடர்​பாக சிறப்பு நீதி​மன்​றத்​தில் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) 1,597 பக்க குற்​றப்​பத்​திரி​கையை தாக்​கல் செய்​துள்ளது. ‘தாக்குதலுக்கான சதி பாகிஸ்தானில் தீட்டப்பட்டது. உள்ளூர் நபர் அடைக்​கலம் அளித்​த​தால், இந்த தாக்​குதல் சாத்​தி​ய​மானது’ என்று அதில் கூறப்​பட்​டுள்​ளது.

காஷ்மீரின் பஹல்​காமில் கடந்​த ஆண்டு ஏப்​ரல் 22-ம் தேதி சுற்​றுலா பயணி​கள் மீது பாகிஸ்தான் தீவிர​வா​தி​கள் துப்​பாக்​கி​யால் சுட்​டனர். இதில் 25 சுற்​றுலா பயணி​களும், உள்​ளூர் நபர் ஒரு​வரும் சுட்​டுக் கொல்​லப்பட்​டனர். தங்களது மதக் கோட்பாடுகளைத் தெரிவிக்​கும் ‘கலி​மா’வை ஓதச் சொல்​லி, பிற மதத்தைச் சேர்ந்த நபர்​களை அடை​யாளம் கண்டு அவர்கள் தாக்​குதல் நடத்​தினர்.

இந்த தாக்​குதலை நடத்​திய தீவிர​வா​தி​கள் ஃபைசல் ஜாட் என்​கிற சுலை​மான் ஷா, ஹபீப் தாஹிர் என்​கிற ஜிப்​ரான் மற்​றும் ஹம்சா ஆப்​கானி ஆகியோரை பாது​காப்பு படை​யினர் கடந்​த ஆண்டு ஜூலை 29-ம் தேதி நடத்​திய ‘ஆபரேஷன் மகாதேவ்’ தேடு​தல் வேட்​டை​யில் சுட்​டுக் கொன்​றனர். இந்த தாக்​குதல் சம்​பவம் குறித்த 1,597 பக்க குற்​றப்​பத்​திரிக்​கையை சிறப்பு நீதி​மன்​றத்​தில் என்ஐஏ தாக்​கல் செய்​தது.

அதில் இந்த தாக்​குதலுக்​கான சதி பாகிஸ்​தானில் தீட்​டப்​பட்​டது எனவும், பஹல்​காமில் உள்ள உள்​ளூர் நபரின் ஆதர​வோடு 3 தீவிர​வா​தி​கள் இந்த தாக்​குதலை நடத்​தி​யதும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் ஹஃபீஸ் சயீத் தலை​மையி​லான லஷ்கர்​ இ தொய்​பா, ஹபிபுல்லா மாலிக் தலை​மையி​லான ‘தி ரெசிஸ்​டன்ஸ் ஃபிரன்ட் (டிஆர்​எப்) ஆகிய அமைப்​பு​களுக்கு தொடர்பு உள்​ள​தாக கூறப்​பட்​டுள்​ளது.

அதன் விவரம்; பஹல்​காம் தாக்​குதலில் ஈடு​பட்ட 3 தீவிர​வா​தி​களும், கடந்​த ஆண்டு ஏப்​ரல் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு பைசரன் அரு​கே​ உள்ள உள்​ளூர்​வாசி பர்​வைஸ் அகமது என்​பவரது குடிசைக்கு துப்​பாக்​கி​களு​டன் வந்​தனர். அவர்​களை பர்​வைஸின் மாமா பஷீர் அகமது ஜோதர் என்​பவர் அறி​முகம் செய்து வைத்​துள்​ளார். பர்​வைஸ் உள்​ளூரில் குதிரை ஓட்​டி​யாக பணி​யாற்​றுகிறார். விருந்​தாளி​களாக வந்​துள்ள 3 பேரும் காஷ்மீர் முஸ்​லிம்​களின் விடு​தலைக்​காக போராடும் ஜிஹா​தி​கள் என பர்​வைஸிடம் அவரது மாமா கூறி​னார். 3 தீவிர​வா​தி​களும் பஞ்​சாபி கலந்த உருது மொழி​யில் பேசினர்.

இதனால் அவர்​கள் காஷ்மீரைச் சேர்ந்​தவர்​கள் அல்ல; முஜாஹிதீன்​கள் என்​பதை பர்​வைஸ் புரிந்து கொண்​டார். தீவிர​வா​தி​கள் தாங்​கள் கொண்டு வந்த துப்​பாக்​கி​களை குடிசைக்​குள் மறைத்து வைத்​தனர். தண்​ணீர், தேநீர்,இரவு உணவு சாப்​பிட்​ட பிறகு, சில ரொட்​டிகளை பார்​சல் செய்து தரும்​படி கேட்​டனர். இதை பர்​வைஸின் மனைவி தாஹிரா தயார் செய்து கொடுத்​தார். இரவு 10 மணி​ அள​வில் 3 பேரும் புறப்​பட்​டனர். மறு​நாள் காலை அவர்​கள் பைசரன் பள்​ளத்​தாக்​குக்கு அரு​கில் காணப்​பட்​டனர். பள்​ளத்​தாக்கு பகுதியில் நுழைவதற்கு முன்​பு, ஒரு மரத்தடி​யில் அமர்ந்து மதிய உணவு சாப்​பிட்​டனர்.

மதி​யம் 2.23 மணி​ அள​வில் தாக்​குதலுக்கு புறப்​பட்​டனர். தங்​கள் பையி​ல் இருந்த போர்​வையை​ போர்த்​திக் கொண்​டனர். அவர்​களில் ஒரு​வர் தனது தலை​யில் ‘கோப்​ரோ' என்ற ஆக்​சன் கேம​ராவை அணிந்​த​படி, பூங்​காவுக்​குள் நுழைந்​தார். ஒரு​வர் தனது எம்-4 கார்​பைன் ரக துப்​பாக்​கி​யால் அங்கு கூடி​யிருந்த சுற்​றுலா பயணி​கள் மீது சுட்​டார். அடுத்த சில நொடிகளில், மற்ற 2 தீவிர​வா​தி​களும் தாபாக்​கள் மற்​றும் சரிவுப் பகு​தி​களில் இருந்து ஏகே-47 ரக துப்​பாக்​கி​கள் மூலம் சுட்​டனர். இதில் 26 பேர் உயி​ரிழந்​தனர். தீவிர​வா​தி​கள் தப்பி ஓடும்​போது, அவர்​களை பிடிக்க பொது​மக்​கள் 3 பேர் முயன்​றனர். அவர்​களை​யும் தீவிர​வா​தி​கள் மிக அரு​கில் வைத்​துச் சுட்​டுக் கொன்​றனர்.

ஒரு​வரை இடைமறித்து ‘கலி​மா' ஓது​மாறு தீவிர​வா​தி​கள் கூறினர். அவர் அதை ஓதி​யதும் அவர்​கள் சுட​வில்​லை.தீவிர​வா​தி​கள் தங்​கள் திட்​டத்தை வெற்​றிகர​மாக நிறைவேற்​றிய மகிழ்ச்​சியை வானில் துப்​பாக்​கி​யால்​ சுட்​டுகொண்​டாடினர்​. இவ்​வாறு குற்​றப் ​பத்​திரி​கையில்​ கூறப்பட்டுள்​ளது.