





















குஜராத் டைட்டன்ஸ் வீரர் முகமது சிராஜ்
Updated on
:
2 min read
ஐபிஎல் குவாலிஃபையர்-1ல் தரம்சாலாவில் குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் முகமது சிராஜின் பவர் ப்ளே பவுலிங் பெரிய தாக்கம் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் பவர் ப்ளேயில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றி குஜராத் டைட்டன்ஸின் வெற்றிகளைத் தீர்மானித்துள்ளார்.
பவர் ப்ளேயில் சிராஜின் சிக்கன விகிதம் 7.53. இது 7.1 வைத்திருக்கும் புவனேஷ்வர் குமாருக்கு அடுத்த சிறந்த சிக்கன விகிதமாகும். புவனேஷ்வர் குமாரை ஏன் இந்திய டி20 அணியில் மறு பரிசீலனை செய்ய மறுக்கிறார்கள் என்பது புரியாத புதிர். அதுபோலவே ஒருநாள் அணியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சிராஜ் தேர்வு செய்யப்படவில்லை. முகமது ஷமியும் தேர்வு செய்யப்படவில்லை. இது ஏதோவொரு அறிகுறியாகவே படுகிறது.
குஜராத் டைட்டன்ஸுக்காக சிராஜும், ரபாடாவும் அதியற்புதமான பவர் ப்ளே பந்து வீச்சை வீசியதுதான் குஜராத் டைட்டன்ஸ் இந்த முறை பிளே ஆஃப் சுற்றில் கால் பதித்ததற்குப் பிரதான காரணம். இருவரும் கூட்டணியாகவே செயல்படுகின்றனர். களத்தினுள் மட்டுமல்ல களத்திற்கு வெளியேயும் இருவரும் உற்ற நண்பர்கள் என்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாக வட்டாரங்கள்.
ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான் மிடில் ஓவர்களில் எதிரணியினரை கட்டிப் போடுவார்கள் என்ற பின்பலம் இருப்பதால் ஷுப்மன் கில், சிராஜ் மற்றும் ரபாடாவை ஆக்ரோஷமாக வீசச்சொல்லி களவியூகம் அமைத்துக் கொடுத்தார். அதனால் சிராஜ், ரபாடா அடி வாங்கினாலும் விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் அதுதான் எதிரணியைப் பின்னடையச் செல்லும் என்பதில் குஜராத் வலுவான நம்பிக்கைக் கொண்டுள்ளது.
மேலும், ஆஷிஷ் நெஹ்ரா இந்த வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பதாகவும் குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிராஜ் என்றாலே ஆக்ரோஷம்தான். அதுவும் வைபவ் சூர்யவன்ஷி அவரது முதல் பந்தை வழக்கம் போல் சிக்ஸருக்கு தூக்கினாலும் அடுத்த பந்தே துல்லிய யார்க்கர் வீசி 15 வயது அதிரடிப்புயலை நிலைகுலையச் செய்தார். பிறகு ஒரு துல்லிய பவுன்சர் அவ்வளவுதான் வைபவ், கொடியேற்றி கேட்ச் ஆனார்.
அதே போல் சிஎஸ்கேவுக்கு எதிராக கடுமையான பார்மில் இருக்கும் சஞ்சு சாம்சனை அவுட்- ஸ்விங்கரில் வீழ்த்தியதும் சிராஜின் மங்காத திறமை, வேகம், உத்வேகத்திற்குச் சான்று. அன்று 3 விக்கெட்டுகளைச் சாய்த்து ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
2024 சீசனை ஒப்பிடும் போது சிராஜின் பவர் ப்ளே பந்து வீச்சு வெகுவாக முன்னேறியுள்ளது. 2025-லேயே பவர் ப்ளேயில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் சிராஜ். மேலும் தன்னை ஒதுக்கித் தள்ளிய ஆர்சிபி அணிக்கு எதிராக சின்னசாமி ஸ்டேடியத்தில் ஒரு மேட்ச் வின்னிங் ஸ்பெல்லை வீசினார்.
டி20-க்கான தனி பவுலிங் முறையை அனைவரும் கற்று வரும் வேளையில் நல்ல வேகம் ஸ்விங்குடன் டெஸ்ட் மேட்ச்களில் வீசும் லெந்த்தில் சிராஜ் அசத்தி வருகிறார். அவரை பும்ராவுக்கு மாற்றாக இன்னமும் அணியில் தேர்வு செய்ய நினைப்பது பெரும் தவறு. அவருக்கென்று பிரத்யேக இடத்தை அளிக்க வேண்டும் என்பதே நம் கோரிக்கை.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。