
























Updated on
:
1 min read
சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க விசிகவை தொடர்ந்து, ஐயூஎம்எல் கட்சியும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், தற்போது தவெகவின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது.
தவெகவுக்கு ஐயூஎம்எல் ஆதரவு, ஆதரவு இல்லை என குழப்பம் நீடித்து வந்த நிலையில், ஐயூஎம்எல் தலைவர்கள் இன்று ஆதரவு கடிதத்தை தவெக நிர்வாகிகளிடம் வழங்கினர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்று பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் முறையே ஏ.எம். ஷாஜஹான், சையது ஃபரூக் பாஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், முதலில் 5 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள விஜய், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலையில், காங்கிரஸ் ஆதரவு மூலம் தவெக பலம் 112 ஆக உயர்ந்தது.
மேலும், பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் (2) , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) தனது ஆதரவை நேற்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று விசிக (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். தற்போது தவெகவின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。