惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

H
Help Net Security
G
Google Developers Blog
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 聂微东
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
小众软件
小众软件
Stack Overflow Blog
Stack Overflow Blog
美团技术团队
博客园_首页
T
Tailwind CSS Blog
博客园 - 三生石上(FineUI控件)
B
Blog
D
DataBreaches.Net
腾讯CDC
C
Check Point Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
U
Unit 42
月光博客
月光博客
V
V2EX
Vercel News
Vercel News
T
The Blog of Author Tim Ferriss
The Cloudflare Blog
博客园 - 叶小钗
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஓட்டேரி நல்லா கால்வாய் பாலம் விவகாரம்: சென்னை மாநகராட்சி ...
ஆர்.பாலசரவணக்குமார் · 2026-05-22 · via hindutamil

Updated on: 

சென்னை: ஓட்டேரி நல்லா கால்வாயில் பாலம் கட்டியதில் 90 லட்ச ரூபாய் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டலத்தில் உள்ள ஆஸ்பிரான் தோட்டம் 2-வது தெருவையும், கீழ்ப்பாக்கம் தோட்டச் சாலையையும் இணைக்கும் வகையில், ஓட்டேரி நல்லா கால்வாய் மீது கட்டப்பட்டிருந்த பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலத்தை கட்ட, தாமஸ் அய்யாதுரை இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் என்ற நிறுவனத்துக்கு மாநகராட்சி டெண்டர் வழங்கியது.

இதில் திட்ட மதிப்பீடுகளை அதிகரித்து காட்டி, அரசு பணத்தை தவறான பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக, விசாரணை நடத்தி குற்ற நடவடிக்கை எடுக்கக் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், மாநகராட்சி அதிகாரிகள் ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் சரவணபவநாதன் , தற்போதைய தலைமை பொறியாளர் சங்கரவேலு, மேற்பார்வை பொறியாளர் கணேசன், உதவி செயற் பொறியாளர் கோமதி, உதவி பொறியாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் தனியார் நிறுவனதுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலம் காட்டுவதற்காக நிலம் கையகப்படுத்திய வகையில் 20 லட்ச ரூபாயும், விளக்குகள் அமைப்பதற்காக 20 லட்ச ரூபாயும், தளவாட பொருட்களை இடமாற்றம் செய்ததற்காக 20 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், இதர செலவீனங்களுக்காக 31 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயும் என 92 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளதே தவிர, நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஏதும் நடைபெறவில்லை; விளக்குகள் அமைக்க 11 ஆயிரத்து 470 ரூபாய் மட்டுமே செலவாக்கியுள்ளது என்பத்து தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், தளவாட பொருட்கள் இடமாற்றம் மற்றும் இதர செலவீனங்களுக்காக எந்த வித ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை; இந்த முறைகேடு தொடர்பாக கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை; எனவே தனது புகாரில் விசாரணை நடத்தி, சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.