





























மும்பை: உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) கட்சியைச் சேர்ந்த 6 எம்பிக்கள் இன்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தனர்.
மும்பையில் நடைபெற்ற விழாவில் நாகேஷ் ஆஸ்திகர், சஞ்சய் தேஷ்முக், சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தினா பாட்டீல், ஓம் பிரகாஷ் ராஜேநிம்பல்கர், பாவ்சாகேப் வக் சவ்ரே ஆகிய 6 எம்பிக்களும், சிவசேனா தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தங்களை சிவசேனாவில் இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து ஏக்நாத் ஷிண்டே வரவேற்றார்.
பின்னர் பேசிய ஏக்நாத் ஷிண்டே, “பாலாசாகேப் தாக்கரே, ஆனந்த் திகே ஆகியோரின் உண்மையான சிவசேனாவில் இணைந்துள்ள ஆறு எம்பிக்களையும் நாங்கள் வரவேற்கிறோம். 2022-ல் 40 எம்எல்ஏக்கள் எங்களுடன் இணைந்தபோது ஒரு புரட்சி நடந்தது. அந்த புரட்சியின் இரண்டாம் கட்டம் தற்போது நடந்துள்ளது. இம்முறை நாங்கள் சிக்ஸர் அடித்துள்ளோம்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。