


























Updated on
:
1 min read
சண்டிகர்: ஐபிஎல் 2026 தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பஞ்சாப் அணி இந்த சீசனின் மிக அதிக ஸ்கோரைப் பதிவு செய்து சாதனை படைத்தது.
டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ஸ்ரேயஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கான்னொலி ஆகியோர் லக்னோ பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். பிரியான்ஷ் ஆர்யா வெறும் 37 பந்துகளில் 93 ரன்கள் குவித்து சதத்தை நூலிழையில் தவறவிட்டார். அவருக்கு ஈடுகொடுத்து ஆடிய கூப்பர் கான்னொலி 46 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார். இவர்களின் அதிரடியால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
255 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் மிச்செல் மார்ச் (40), ஆயுஷ் படோனி (35) இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் பஞ்சாப் அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் தனது முதலிடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. லக்னோ அணிக்குப் பேட்டிங்கில் ஓரளவுக்கு ரன்கள் கிடைத்தாலும், பந்துவீச்சில் அதிக ரன்களை வாரி வழங்கியது அந்த அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。