惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
G
Google Developers Blog
D
Docker
The GitHub Blog
The GitHub Blog
H
Help Net Security
WordPress大学
WordPress大学
博客园_首页
Recent Announcements
Recent Announcements
P
Proofpoint News Feed
罗磊的独立博客
I
InfoQ
U
Unit 42
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
V
Visual Studio Blog
Jina AI
Jina AI
J
Java Code Geeks
博客园 - Franky
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
大猫的无限游戏
大猫的无限游戏
小众软件
小众软件
Last Week in AI
Last Week in AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
D
DataBreaches.Net
Google DeepMind News
Google DeepMind News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“12 ஆண்டுகால பிரதமர் பணி என் வாழ்வின் மிகச் சிறந்த அனுபவம...
டெக்ஸ்டர் · 2026-06-19 · via hindutamil

Updated on: 

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் ஆற்றிய உரையில், தொடர்ந்து 12 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றுவது தனது வாழ்வின் மிகச் சிறந்த மற்றும் மறக்க முடியாத அனுபவம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

பாரிஸில் திரண்டிருந்த இந்தியர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “இன்று உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் முன்னணிப் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. இன்று, வங்கிச் சேவைகள் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கிடைக்கின்றன. கைபேசிகள் வழியாக, குடிமக்கள் இப்போது பலதரப்பட்ட சேவைகளையும் வாய்ப்புகளையும் எளிதாக அணுக முடிகிறது. தொழில்நுட்பம் மக்களுக்கு அதிகாரம் அளித்து, அன்றாட வாழ்க்கையை மேலும் வசதியாகவும் திறமையாகவும் ஆக்கியுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “பாரிஸ் என்பது ஒளி, வண்ணங்கள், புதிய சிந்தனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் நகரம். இந்தியாவின் பலதரப்பட்ட கலாச்சார வளத்தைக் கொண்டு, இந்த நகரத்தின் துடிப்பான சூழலுக்கு இந்திய வம்சாவளியினர் மேலும் பெருமை சேர்த்துள்ளனர். பாரிஸ் நகரில் தமிழர்கள், பஞ்சாபியர்கள், குஜராத்திகள், மராத்தியர்கள் மற்றும் வங்காளிகள் என இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்திய வம்சாவளியினர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரத்துக்குப் புதிய வண்ணங்களைக் கொண்டு சேர்த்துள்ளதோடு, இந்தியாவின் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற உன்னதத் தத்துவத்தின் பிரதிபலிப்பாகவும் விளங்குகின்றனர்” என்று பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக, பிரான்சின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பிரதமர் மோடி, அம்மாநாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதன்கிழமை அன்று பாரிஸ் வந்தடைந்தார். பாரிஸ் விமான நிலையத்தில் அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியா - பிரான்ஸ் இடையிலான வலுவான கூட்டாண்மை, உலகளாவிய முன்னேற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிப்பதாகப் பிரதமர் தெரிவித்தார். 

இதுகுறித்து பாஜக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பிரதமர் மோடியின் இந்த வருகை வெறும் சாதாரணப் பயணம் அல்ல; இது உலக அரங்கில் புதிய இந்தியாவின் எழுச்சியைக் காட்டுகிறது. உலகளாவிய முக்கிய விவாதங்களில் இந்தியா வெறும் பங்கேற்பாளராக மட்டுமன்றி, உலகிற்கு வழிகாட்டும் நாடாகவும் உயர்ந்துள்ளதை இந்த மாநாடு உணர்த்துகிறது" என்று பதிவிட்டுள்ளது.