






















கவுகாத்தியின் கானாபாரா பகுதியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சர்வானந்த சோனோவால், பவித்ரா மார்கெரிட்டா, பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் பா.ஜ.க தலைவர் நிதின் நவீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய ‘கமோசா' (துண்டு) அணிந்து, வேட்டி-குர்தா உடையில் வந்த ஹிமந்த பிஸ்வா சர்மா, அசாமிய மொழியில் பதவியேற்றார். அமைச்சர்களில் தெலி, போரா மற்றும் நியோக் ஆகியோர் அசாமிய மொழியிலும், பி.பி.எஃப் அமைச்சர் சரண் போரா போடோ மொழியிலும் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழா முடிந்ததும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。