


















இதில் ஈட்டி எறிதல் போட்டியில் 2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா இடம் பிடித்துள்ளார். இவர் கடந்த 2025-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு பின்னர் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. முதுகு வலி காரணமாக அவர் அவதிப்பட்டு வந்துள்ள நிலையில் அவர் போட்டியில் பங்கேற்காமல் இருந்தார். தற்போது அவர் குணமடைந்து வரும் நிலையில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கிளாஸ்கோ போட்டிக்குள் அவர் முழுமையாக தேறிவிடுவார் என தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்திய அணியில் குரிந்தர் வீர் சிங் (100மீட்டர் ஓட்டம்), அனிமேஷ் குஜுர் (200மீட்டர்), குல்வீர் சிங் (5000மீ. 10,000மீட்டர்), தேஜஸ்வின் ஷங்கர் (டெகத்லான் மற்றும் உயரம் தாண்டுதல்), பாருல் சவுத்ரி (3000மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), தேஜாஸ் அசோக் சிர்சே, யஷாஸ் பி, சந்தோஷ்குமார் தமிழரசன், சர்வேஷ் அனில் குஷாரே, ஆதர்ஷ் ராம், தேவ் மீனா, குல்தீப் குமார், ஸ்ரீசங்கர், லோகேஷ் சத்யநாதன், பிரவீண் சித்ரவேல், செல்வப்பிரபு, சமர்தீப் சிங் கில், தஜிந்தர்பால் சிங் தூர், ரோஹித் யாதவ், யஷ்வீர் சிங், டி.கே.விஷால் உள்ளிட்டோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。