惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

T
The Exploit Database - CXSecurity.com
D
Darknet – Hacking Tools, Hacker News & Cyber Security
V
Vulnerabilities – Threatpost
Blog — PlanetScale
Blog — PlanetScale
G
Google Developers Blog
M
MIT News - Artificial intelligence
C
Cybersecurity and Infrastructure Security Agency CISA
MyScale Blog
MyScale Blog
P
Privacy International News Feed
MongoDB | Blog
MongoDB | Blog
Know Your Adversary
Know Your Adversary
P
Palo Alto Networks Blog
AWS News Blog
AWS News Blog
Cisco Talos Blog
Cisco Talos Blog
Malwarebytes
Malwarebytes
aimingoo的专栏
aimingoo的专栏
T
Threat Research - Cisco Blogs
Last Week in AI
Last Week in AI
量子位
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
C
CERT Recently Published Vulnerability Notes
Hugging Face - Blog
Hugging Face - Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
cs.CV updates on arXiv.org
cs.CV updates on arXiv.org
Y
Y Combinator Blog
L
LangChain Blog
L
LINUX DO - 热门话题
cs.AI updates on arXiv.org
cs.AI updates on arXiv.org
Simon Willison's Weblog
Simon Willison's Weblog
V
Visual Studio Blog
S
Security @ Cisco Blogs
cs.CL updates on arXiv.org
cs.CL updates on arXiv.org
O
OpenAI News
N
News | PayPal Newsroom
Stack Overflow Blog
Stack Overflow Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
V
V2EX - 技术
李成银的技术随笔
Recent Announcements
Recent Announcements
C
Check Point Blog
Attack and Defense Labs
Attack and Defense Labs
Recent Commits to openclaw:main
Recent Commits to openclaw:main
S
Security Archives - TechRepublic
小众软件
小众软件
博客园 - 聂微东
月光博客
月光博客
GbyAI
GbyAI
T
Troy Hunt's Blog
S
Securelist
雷峰网
雷峰网

hindutamil

51,000+ இளைஞர்களுக்கு அரசு பணிக்கான நியமன கடிதம் வழங்கினார் பிரதமர் மோடி “மேகேதாட்டு அணை விவகாரத்தில் மற்ற கட்சிகள் சொல்வதை கேட்கக் கூடாது” - வேளாண் அமைச்சர் வினோத் The Great Hack: மாபெரும் திருட்டு | சினிமாவும் அரசியலும் 32 “கோவை சிறுமி கொலை வழக்கில் குறுகிய காலத்தில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்” - ராமதாஸ் உலகளவில் 120 கோடி பேர் மனநல பிரச்சினைகளால் பாதிப்பு: 1990-க்குப் பிறகு இரு மடங்கு அதிகரிப்பு ‘டிராகன்’ படத்துக்காக 15 கிலோ எடை குறைந்த ஜூனியர் என்டிஆர் குறைந்து வரும் வரதட்சணைக் கொடுமை மரணங்கள் - 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் உயிரிழப்பு பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல் கரூர் | விவசாயி மீது துப்பாக்கிச்சூடு - 10 இடங்களில் குண்டு பாய்ந்து காயம் கோவை சிறுமி படுகொலையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை - அன்புமணி வலியுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வழக்கில் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும்: முதல்வர் விஜய் “தேர்தல் முடிவுகளுக்குப் பின் திமுக கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை” - திருமாவளவன் “கோயில்கள் இனி எனது நேரடி கண்காணிப்பில் இருக்கும்” - அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் “கோவை சிறுமி கொலை வழக்கில் காவல்துறை துரிதமாக செயல்படவில்லை” - இபிஎஸ் குற்றச்சாட்டு நாட்டார் மர்மக்கதையில் ஜமீனாக நடிக்கிறார் ரகுமான் “கோலி உடன் விளையாடுவது எனது ஆட்டத்தை மேம்படுத்துகிறது” - ஐபிஎல் அனுபவம் பகிரும் படிக்கல் கோவை கொடூரம் | குற்றவாளிகள் விரைவாகவும் கடுமையாகவும் தண்டிக்கப்பட வேண்டும்: உதயநிதி தனது அடையாளத்தை மாற்றி 12 வருடமாக முன்னணி ஹீரோ படங்களில் நடித்து வந்த கொலை குற்றவாளி! ஒய்.ஜி.மகேந்திராவின் ‘சாருகேசி’ டிரெய்லரை வெளியிட்டார் ரஜினி​ Realme 16T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன? டிராவிஸ் ஹெட் உடன் கைகுலுக்க மறுத்த விராட் கோலி: காரணம் என்ன? இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம்: சவுதி, அமெரிக்காவை விஞ்சியது வெனிசுலா தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைவு: இன்றைய விலை விவரம் சூரியக் கட்சியின் கருத்துக் கேட்பு ‘கூத்து’ | உள்குத்து உளவாளி தவெக எம்எல்ஏ-வுடன் வாக்குவாதம்: ராயபுரம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் பஞ்சாப் - ஜம்மு சாலையில் கேமராக்களை பொருத்தி பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைது சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு: முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார் காய்ச்சல், சளி, தொண்டை மற்றும் உடல் வலியுடன் மக்கள் அவதி: கரோனா தொற்று பாதிப்பு காரணமா? துறைமுகம் - மதுரவாயல் மேம்பால பணிகள் 2027 நவம்பருக்குள் நிறைவு: சென்னை துறைமுகத்தின் தலைவர் தகவல் இரவு நேரங்களில் தொடரும் மின்தடை: சென்னை, புறநகர் பகுதி பொதுமக்கள் கடும் அவதி சென்னையில் நாளை ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி சினோரா அசோக் மீது தாக்குதல்: முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு மின் வாரிய இணைய சேவைகள் இன்றும், நாளையும் இயங்காது காவல் ஆணையராக அமல்ராஜ் பொறுப்பேற்பு வினேஷ் போகத் விவகாரத்தில் மல்யுத்த சம்மேளனத்துக்கு கண்டனம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸுடன் இன்று பலப்பரீட்சை: பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்குமா பஞ்​சாப் கிங்ஸ்? மலேசியா மாஸ்​டர்ஸ் பாட்மிண்டன்: ​கால் இறுதியில் அஷ்மிதா தோல்வி பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் பயோ-மைனிங் திட்டம் மூலம் 94 ஏக்கர் நிலம் மீட்பு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு ரூ.24 லட்​சம் அபராதம் எந்த அணி​யும் 100% முழுமையானது இல்லை: மனம் திறக்கும் குஜ​ராத் அணியின் ரஷித் கான் உலகளவில் அதிக வெப்பம் - இந்தியாவில் 97 நகரங்கள் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடிக்கு பேல்பூரி விற்றவருக்கு பாக்., வங்கதேசத்தில் இருந்து கொலை மிரட்டல் கொலை மிரட்டல் தொடர்ச்சியாக விடுக்கப்படுகிறது: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் புகார் உ.பி., மேற்கு வங்க மாநிலங்களை அடுத்து டெல்லியில் பக்ரீத்துக்குப் பலியிட கட்டுப்பாடு எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து இறங்கும் போது 2 பேர் உயிரிழப்பு அபிஷேக நேரத்திலும் சாமானிய பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம் நடிகர் ஜார்ஜ் மரியான் ஜெயித்த கதை - எக்ஸ்ப்ளைனர் வீடியோ 3 கல்வியாளர்களுக்கு எதிரான தடையை திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்றம் பத்து நாட்களில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள் என்றால் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு கோருவது ஏன்? - உச்ச நீதிமன்றம் கேள்வி ஜார்ஜ் குட்டி குடும்​பத்தை ஏற்​றுக்​கொண்​டதற்கு நன்றி: நடிகர் மோகன்லால் நெகிழ்ச்சி கோவையில் மையக்குழு கூட்டம் நிறைவு: நயினார் நாகேந்திரன் டெல்லியில் முகாம் ஒட்டுமொத்தத் திரையுலக​மும் முடங்கும்: திரைப்பட கூட்டமைப்பு எச்சரிக்கை அரசுத் துறைகளில் 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்: அஜ்மீர் ஷெரீப் தர்காவின் மதகுரு கோரிக்கை எம்ஆர்எஃப், கோத்தாரி குழுமத்தினர் முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து கருத்து: கர்நாடக துணை முதல்வருக்கு தலைவர்கள் கண்டனம் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 23 மே 2026 ஜோதிட நாள்காட்டி 23.05.2026 | வைகாசி 09 - சனிக்கிழமை கொடைக்கானல் ரோஜா பூங்காவில் வைக்கப்பட்ட முயல், டால்பின் வடிவ மலர்ச் சிற்பங்கள் மதுரை அருகே கான்கிரீட் குழியில் மண் சரிந்து உயிருடன் புதைந்த இரு பெண் தொழிலாளர்கள் குற்றாலத்தில் தாயை பிரிந்த குட்டி யானை திமுக கூட்டணியில் தேமுதிக தொடர்கிறது: பிரேமலதா மீண்டும் உறுதி பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் பெறாமல் அலைக்கழிப்பு: 5 போலீஸார் சஸ்பெண்ட் மக்கள் மனதை புண்படுத்தாத அரசியல் செய்தால் அரசு நீடிக்கும்: தவெகவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அறிவுரை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் 25-ம் தேதி முதல் தொடக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் எபோலோ வைரஸ் பாதிப்பு: சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை தவெக அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல்: ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்தால் சர்ச்சை பக்தர்கள் மனநிறைவோடு தரிசனம் செய்ய கோயில்களில் அனைத்து வசதிகளையும் செய்க: அமைச்சர் ரமேஷ் உத்தரவு பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கான சதி பாகிஸ்தானில் தீட்டப்பட்டது: 1,597 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் தமிழகத்தில் காலியாகும் ஒரு இடம் உள்ளிட்ட 26 இடங்களுக்கு ஜூன் 18-ல் மாநிலங்களவைத் தேர்தல் பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்திக்க முதல்வர் அடுத்த வாரம் டெல்லி செல்கிறார் விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு: தமிழக அமைச்சரவை மீண்டும் விரிவாக்கம் ஹைதராபாத் அபார வெற்றி: தோற்றாலும் முதலிடத்தை உறுதி செய்த ஆர்சிபி ‘பரிமளா அண்ட் கோ’ உருவானது எப்படி? - இயக்குநர் பாண்டிராஜ் நெகிழ்ச்சி எல்லை கடந்த ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ - பாகிஸ்தானிலும் பரவும் புதிய டிரெண்ட் மேகேதாட்டு விவகாரம்: டி.கே.சிவகுமாருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் “தமிழகத்தில் தொடர் மின்வெட்டுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்” - பிரேமலதா கி.வீரமணி மிரட்டலுக்கு பணிந்து அறநிலையத் துறை செயலாளர் சுவர்ணா மாற்றமா? - வானதி சீனிவாசன் திமுகவுக்குள் ‘பாஜக ஆதரவு’ குரல்கள்... - மு.க.ஸ்டாலினின் ‘கூட்டணி பாலிசி’ மாறுமா? ‘அரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது’ - தவெகவினருக்கு அமைச்சர் என்.ஆனந்த் உத்தரவு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.பா.கிருஷ்ணன் நியமனம் தமிழகத்தில் 22 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - முழு விவரம் ‘த்ருஷ்யம் 3’ விமர்சனம் - மீண்டும் இருக்கை நுனியில் அமர வைக்கிறதா? திருமாவளவனின் 35 ஆண்டு போராட்டம்: அதிகாரத்தை பிடித்த விசிக கடந்து வந்த பாதை பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள் எனில், பிள்ளைகளுக்கு ஏன் இடஒதுக்கீடு? - உச்ச நீதிமன்றம் கேள்வி டிஜிட்டல் வாரியர்ஸ் Vs கொள்கை வாரியர்ஸ்: தவெக - திமுக ‘இன்ஸ்டா’ யுத்தப் போக்கு எத்தகையது? ஜூன் 21-ல் நடக்கும் நீட் மறுதேர்வு 100% பிழையற்றதாக இருக்கும்: மத்திய அமைச்சர் உறுதி ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மலைவாழ் மக்கள் பி.கே.செந்தில்குமாரி உட்பட 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் வானிலை முன்னறிவிப்பு: சேலம், தி.மலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு “பெண்களை அவமதிப்பதாக இருக்கிறது ஆ.ராசாவின் கருத்து” - அமைச்சர் வன்னியரசு 8 தொகுதிகளை அள்ளிக் கொடுத்த மதுரைக்கு ஒரு அமைச்சர்தானா? - தவெக தொண்டர்கள் சோர்வு ஓட்டேரி நல்லா கால்வாய் பாலம் விவகாரம்: சென்னை மாநகராட்சி விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு ‘அம்மா உணவக’ அரசியல்... முதல்வர் விஜய் வியூகம் என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ முதன்முறையாக அமைச்சர் தொகுதியான ராஜபாளையம் - ஜெகதீஸ்வரி பின்புலம் என்ன? 10 மாநிலங்களை சேர்ந்த 24 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு ஜூன் 18-ல் தேர்தல் திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயில் திருப்பணிகளுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை “தமிழக மக்களிடமும், திருமாவளவனிடமும் ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும்” - ஆதவ் அர்ஜுனா 74 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரை பெற்ற திருவாடானை தொகுதி!
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதள பக்கங்கள் ‘முடக்கம்’ - அரசு மீது அப்ஜித் சாடல்
2026-05-23 · via hindutamil

மர்ம நபர்கள் ‘ஹேக்’ செய்ததால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (cockroach janata party) அனைத்து சமூக வலைதள கணக்குகளும், இணையதளமும் முடக்கப்பட்டுள்ளது. ‘எங்களைப் பார்த்து இந்திய அரசு அஞ்சுகிறது’ என்று அப்ஜித் தீப்கே சாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “காக்ரோச் ஜனதா கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கம் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தை தவிர்த்து இதர அனைத்து சமூக வலைதளங்களும் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளன. எங்களது இணையதளத்தில் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்திருந்தனர். அந்த இணையதளமும் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் கரப்பான் பூச்சிகள். எங்களைப் பார்த்து இந்திய அரசு அஞ்சுகிறது. எங்கள் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது சர்வாதிகார நடவடிக்கை ஆகும். இந்திய இளைஞர்களுக்கு வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. காக்ரோச் ஜனதா கட்சியின் எந்தவொரு சமூக வலைதள கணக்கும் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அவற்றில் வெளியாகும் எந்தப் பதிவுகளையும் நம்ப வேண்டாம். கரப்பான்பூச்சிகள் சாகாது. நாங்கள் புதிய வடிவில் மீண்டு வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.

‘சிஜேபி’ பின்புலம் என்ன?

போலி சான்​றிதழ் தொடர்​பான ஒரு வழக்கை அண்மை​யில் விசா​ரித்த உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறும்​போது, “வேலை இல்​லாமல் எந்த தொழிலும் செய்ய தகு​தி​யற்ற சில இளைஞர்​கள் கரப்​பான்​பூச்​சிகளை போல, ஒட்​டுண்​ணி​களைப் போல சமூக வலை​தளங்​களில் எல்லோரையும் தாக்​கத் தொடங்​கு​கிறார்​கள்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு இணையத்தில் இளைஞர்கள் கடும் எதிர்வினையாற்றினர். “கரப்பான்பூச்சிகளை அழிப்பது அவ்வளவு எளிதல்ல.. அதுபோலத்தான் நாங்கள்...” என்று அவர்கள் காத்திரம் காட்டினர். இதனிடையே, தனது கருத்து குறித்து விளக்​கம் அளித்த நீதிபதி சூர்​ய​காந்த், “போலி சான்​றிதழ் வைத்​திருப்​பவர்​களை மட்​டுமே குறிப்​பிட்​டேன். ஒட்​டுமொத்த இளைஞர்​களை அல்ல” என்று தெரி​வித்​தார்.

இந்தச் சூழலில்தான் அமெரிக்​கா​வின் பாஸ்​டன் பல்​கலைக்​கழகத்​தில் பயிலும் இந்​திய மாணவர் அப்​ஜித் தீப்கே என்​பவர் கடந்த 16-ம் தேதி இன்​ஸ்டாகி​ராமில், ‘காக்ரோச் ஜனதா கட்​சி’ என்ற பக்​கத்தை அரசியல் நையாண்டி நோக்குடன் தொடங்​கி​னார். எக்​ஸ், ஃபேஸ்​புக் உள்​ளிட்ட இதர சமூக வலைதளங்​களி​லும் இதே பெயரில் கணக்​கு​கள் தொடங்​கப்​பட்​டன.

கரப்​பான்பூச்சி ஜனதா கட்​சி​யில் இணைய வேலை ​வாய்ப்​பற்​றவ​ராக இருக்க வேண்​டும். சோம்​பேறி​யாக இருக்க வேண்​டும். ஆன்லைனுக்கு அடிமை​யாக இருக்க வேண்​டும். கோபத்தை அழகாக வெளிப்​படுத்த தெரிந்​தவ​ராக இருக்க வேண்​டும் என்று அப்​ஜித் கூறியிருந்தார். மேலும், ஒரு கட்​சி​யில் இருந்து தேர்வு செய்​யப்​பட்ட எம்.​பி., எம்எல்ஏக்​கள் தேர்​தலுக்​குப் பிறகு அணி மாறி​னால் அடுத்த 20 ஆண்​டு​கள் அவர்​கள் தேர்​தலில் போட்​டி​யிட தடை விதிக்​கப்​படும் என்பது உட்பட அப்​ஜித் 5 வாக்​குறுதி அளித்​திருந்தார்.

“தங்கள் குரல் கேட்கப்படவில்லை. பிரதிநிதித்துவமும் பெறவில்லை என்ற விரக்தியில் இந்திய இளைஞர்கள் இருக்கிறார்கள்” என்ற அப்​ஜித் தீப்கே, “இந்தியப் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகள் ஏறுமுகம் காட்டினாலும் கூட, வேலை நிமித்தமான பதற்றங்கள், சமத்துவமின்மை, விலைவாசி உயர்வு தரும் நெருக்கடிகள் இருக்கத்தானே செய்கின்றன. கல்வி வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கான உத்தரவாதத்தைத் தருவதாக இல்லை. வாழ்க்கைத்தரம் மேல்நோக்கி நகரும் என்பதற்கு உறுதியைத் தருவதாக இல்லை.

இந்திய ஜென்ஸீ இளைஞர்கள், பாரம்பரிய அரசியல் கட்சிகளைக் கைவிடத் தொடங்கியுள்ளனர். அவர்கள் தங்கள் வேதனையை, மொழியை அறிந்த புதிய அரசியல் அமைப்புகளை விரும்புகின்றனர். சிஜேபி பக்கத்தில் வரும் கருத்துகள் அதையே பிரதிபலிக்கின்றன. அங்கே வரும் இளைஞர்கள், “எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது” என்று போலியாகச் சொல்ல விரும்பாதவர்கள் இந்த இளைஞர்கள்” என்றார் அப்ஜித் தீப்கே.

இணையவாசிகளின் கவனம் ஈர்த்த கரப்​பான் பூச்சி கட்​சி​யின் இன்​ஸ்​டாகி​ராம் பக்​கம் சட்டென பல மில்லியன்களில் ஃபாலோயர்களை எட்டியது. குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ இன்ஸ்டா பக்கத்தின் ஃபாலோயர்களின் எண்ணிக்கையை முந்தியது. எக்​ஸ், பேஸ்​புக் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களி​லும் கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி பக்​கங்​களை பின்தொடர்​வோரின் எண்​ணிக்கை லட்சங்களில் அதி​கரிக்கத் தொடங்கியது.

அப்போது திடீரென அந்தக் கட்​சி​யின் எக்ஸ் சமூக வலைதள பக்​கம் இந்தியாவில் முடக்​கப்​பட்​டது. அடுத்த சில மணி நேரங்​களில் கரப்பான்​பூச்​சிகள் ஒரு​போதும் உயி​ரிழப்​பது இல்லை என்ற வாசகத்​துடன் காக்​ரோச் இஸ் பேக் என்ற டேக் உடன் எக்ஸ் தளத்​தில் புதிய பக்​கம் தொடங்​கப்​பட்​டது.

இந்தச் சூழலில்தான் அபிஜித் தீப்கே சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஆன்லைனில் புதிய கட்சியை தொடங்கிய பிறகு சமூக வலைதளங்கள் வாயிலாக எனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான். எங்களது கட்சி சார்பில் முதல் கோரிக்கையை முன்வைக்கிறோம். நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும். இதுதொடர்பான ஆன்லைன் மனுவில் பொதுமக்கள் கையெழுத்திட வேண்டுகிறேன். அரசு நிர்வாகத் தவறுகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்” என்றார்.

அதேவேளையில், மகாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜிநகரில் வசித்து வரும் அபிஜித் தீப்கேவின் பெற்றோர், “எனது மகன் அபிஜித் அரசியலில் நுழைவதை நாங்கள் விரும்பவில்லை. அவர் ஆன்லைனில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை தொடங்கிய நாள் முதல் எங்களது தூக்கத்தை தொலைத்துவிட்டோம். புதிய கட்சிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் எங்களுக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. எங்கள் மகன் இந்தியா திரும்பினால் கைது செய்யப்படுவார் என்று அஞ்சுகிறோம். இந்தியாவில் இருந்தபோது ஆம் ஆத்மியில் சிறிது காலம் எங்களது மகன் பணியாற்றினார். அப்போதே நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம்” என்று கவலை தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறும்போது, “கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் திடீர் வளர்ச்சி வியப்பளிக்கிறது. அதன் சமூக வலைதள பக்கங்களை முடக்கக் கூடாது. இளைஞர்கள் கருத்துகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும். ஜனநாயகத்தில் அனைவரும் கருத்துகளை தெரிவிக்க உரிமை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியல் களத்தில், இளைஞர்கள் தங்கள் கோபத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் புகலிடமாக இருக்கும் சிஜேபி, காணாமல் போகலாம். அது பிரபலமான அதே வேகத்தில் இல்லாமல் போகலாம். ஆனாலும், இந்திய அரசியலில் சிஜேபியும், கரப்பான்பூச்சி எனும் சூப்பர் ஸ்டாரும் ஏற்கெனவே ஒரு புதுமையைப் புகுத்திவிட்டன. காட்சிகள் மாறினாலும் இந்த அலை ஓயாது எனலாம். மீம் பார்ட்டியும், பூச்சி சின்னமும் இந்திய இளைஞர்களின் கோபத்தின் சாட்சியாக வரலாற்றில் நிற்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.