























Updated on:
வாஷிங்டன்: இஸ்ரேல் ராணுவம் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த போர்நிறுத்தம் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) மாலை 4:00 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் கத்தார் நாடுகளின் தூதரகப் பிரதிநிதிகள் ஈரானின் மறைமுக உதவியுடன் இந்த உடன்பாட்டை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, தெற்கு லெபனானின் நபாத்தியா மாவட்டத்தின் பல நகரங்கள் மீது நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை இந்த தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் நடத்தி உள்ளது. வான்வழித் தாக்குதலோடு பீரங்கித் தாக்குதல்களும் நடந்ததாக அப்பகுதி மக்கள் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 4 பேர் ஹிஸ்புல்லா படையினரால் கொல்லப்பட்டதை அடுத்து, பதில் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் அமெரிக்கா - ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்படவிருக்கும் இதே வாரத்தில், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள இந்த இஸ்ரேல் - லெபனான் போர்நிறுத்தம், மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நீடித்து வரும் போர்ப் பதற்றத்தைத் தணிப்பதில் மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。