





















இந்தக் கூட்டத்தில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் வளர்ச்சிப் போக்குகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொள்ளக் கூடிய முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக மூன்று இடதுசாரிக் கட்சிகளும் கூட்டாக செயல்படுவதென முடிவு செய்யப்பட்டது.
வர்க்க, வெகுமக்கள் அமைப்புகளின் ஒருங்கிணைந்த மேடையை உருவாக்குவது எனவும், இளைஞர், மாணவர், மாதர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவிற்கு, மக்களின் முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து பொதுவான வேலை திட்டத்தை உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டது. 12 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மு.வீரபாண்டியன், டி.எம்.மூர்த்தி, நா. பெரியசாமி, எம். ரவி ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெ.சண்முகம், பி.சம்பத், என்.குணசேகரன், கே.சாமுவேல்ராஜ் ஆகியோரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை சார்பில் பழ. ஆசைத்தம்பி, பாலசுந்தரம், சந்திரமோகன் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர். இக்கட்சி சார்பில் மற்றொருவர் பின்னர் இணைக்கப்படுவார். ஒருங்கிணைப்புக் குழுவிற்கான செயல்திட்டத்தை தயாரித்து அடுத்தக் கூட்டத்தில் ஒப்புதல்களுக்காக முன்வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
ஜூலை மாதம் 20-ஆம் தேதி இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்தக் கூட்டத்தை நடத்துவது என்றும், இடதுசாரி கட்சிகளின் வர்க்க - வெகுமக்கள் அமைப்புகளின் விரிவடைந்த கூட்டத்தை ஜூலை 10 ஆம் தேதி சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。