












Updated on
:
1 min read
சென்னை: தேர்தல் ஆணையத்தின் நெறிமுறையை அறிந்து நடிகர் விஜய் கோரிக்கை வைத்தால் நியாயமாக இருக்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
திருவிடைமருதூர் வட்டம் திட்டச்சேரி அரசு தொடக்கப்பள்ளியில் பார்வையிட்ட உயர்கல்வித் துறை அமைச்சரும், திருவிடைமருதூர் தொகுதி திமுக வேட்பாளருமான கோவி.செழியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருவிடைமருதூர் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் சென்று வாக்காளர்கள் வாக்களிக்கக் கூடிய விகிதாசாரத்தை பார்வையிட்டு வருகிறேன்.
5 ஆண்டு காலம் திமுக செய்த பணிகள், திமுகவின் தேர்தல் அறிக்கை கிராமப்புறங்களில் பிரதிபலிப்பதை பார்த்து வருகிறோம் அனைத்து தரப்பு மக்களும் திமுக தொடர வேண்டும் என கருதுகிறார்கள். திமுக வெற்றி, வாக்குப்பதிவின்போதே உறுதி செய்யப்பட்டு விட்டது. திருவிடைமருதூர் தொகுதியில் முழு நிறைவாக வாக்குப்பதிவு நடப்பதற்கு திமுக கூட்டணி களப்பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்" என்றார்.
பின்னர், “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாக்குப்பதிவிற்கு 2 மணி நேரம் கூடுதலாக ஒதுக்கி தர வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்” என அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, தேர்தல் விதிமுறைகளை நன்றாக புரிந்தவர்கள், அறிந்தவர்கள் அதற்கு கட்டுப்பட்டு தான் நடக்க வேண்டும்.
இன்று காலையில் நினைத்து, மதியம் சொல்லி மாலையில் மாற்றுவது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளில் இல்லை. அரசியல் விபரம் புரிந்தவர்கள், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை புரிந்தவர்கள், கடந்த கால தேர்தல் நெறிமுறைகளை தெரிந்தவர்கள், இப்படிச் சொல்வதற்கு வாய்ப்பில்லை.
மாலை 6 மணிக்கு மேல் வாக்களிப்பவர்களுக்கு டோக்கன் வழங்கி தேர்தல் ஆணையம் வாக்களிப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உரிய நெறிமுறையை நன்றாக பார்த்து, அறிந்து புரிந்து நடிகர் விஜய் அந்தக் கோரிக்கையை வைத்தால் நியாயமாக இருக்கும் என்றார் அவர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。