惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Last Week in AI
Last Week in AI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园_首页
雷峰网
雷峰网
IT之家
IT之家
I
InfoQ
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
B
Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 【当耐特】
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 聂微东
Hugging Face - Blog
Hugging Face - Blog
A
About on SuperTechFans
月光博客
月光博客
P
Proofpoint News Feed
博客园 - 三生石上(FineUI控件)
J
Java Code Geeks
G
Google Developers Blog
小众软件
小众软件
宝玉的分享
宝玉的分享
Jina AI
Jina AI
V
Visual Studio Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கோவையில் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசியில் ...
2026-05-25 · via hindutamil

சிறுமி குடும்பத்தினரிடம் தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர்கள் பார்த்திபன், சம்பத்குமார் வழங்கினர். உடன் சேலம் ஆட்சியர் இளம்பகவத், எஸ்.பி. கவுதம் கோயல் உள்ளிட்டோர்.

Updated on

2 min read

மேட்டூர் / கோவை: கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை முதல்வர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர்.

கோவை மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதியின் 10 வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் பார்த்திபன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைஅமைச்சர் சம்பத்குமார் சேலம் மாவட்டத்தில் நேற்று சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர். போக்சோ நீதிமன்ற உத்தரவின்பேரில், தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.

இதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய்யும் தொலைபேசி வாயிலாக சிறுமியின் தந்தை மற்றும் பாட்டியிடம் பேசி ஆறுதல் கூறினார். சேலம் ஆட்சியர் இளம் பகவத், எஸ்.பி. கவுதம் கோயல் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் சிறுமியின் குடும்பத்தினர் கூறியதாவது: சம்பவம் குறித்து கேட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்ததாக முதல்வர் தெரிவித்தார்.கொலையாளிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், உங்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

முன்னதாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு வந்தனர். தமிழக அமைச்சர்கள் பார்த்திபன், சம்பத்குமார் வெளியே காத்திருந்தனர். அப்போது, ‘‘சிறுமி குடும்பத்தினருக்கு சொந்தமாக வீடு இல்லை, அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூற, அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பார்த்திபன் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியபோது, ‘‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, நல்லாட்சி நடைபெறும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தொடர்ந்து அதே நிலைமை நீடிக்கிறது. திமுக ஆட்சியில் நடைபெற்ற அதே சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

சம்பவங்கள் நிகழ்ந்த பிறகு, சட்டநடவடிக்கை எடுப்பது போதாது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். சிறுமி குடும்பத்துக்கு முதல்வர் ரூ.1 கோடி நிதி வழங்க வேண்டும்’’ என்றார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியபோது, ‘‘இந்தியாவில் குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக கடுமையான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், முந்தைய திமுக அரசு இதை பின்பற்றாமல் பிரிட்டிஷ்காரர்கள் கொண்டு வந்த சட்டத்தையே நடைமுறையில் வைத்துள்ளது. புதிய சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  கார்த்தி.</p></div>

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்த்தி.

பழனிசாமி ஆறுதல்: சிறுமியின் பெற்றோரிடம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்து, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க தொடர்ந்து போராடுவோம் என்று உறுதியளித்தார். சிறுமி கொலை வழக்கில் கார்த்தி (33), அவரது நண்பர் மோகன் (30) கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, போலீஸிடம் இருந்து தப்பிக்க, மாடியில்இருந்து கீழே குதித்ததால் கார்த்தியின் கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், கோவை அரசு மருத்துவமனையின் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து, கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவலில் எடுக்க திட்டம்: கார்த்தியை ஜூன் 5 வரை நீதிமன்றக் காவலில் வைக்கபோக்சோ நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க உள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2 பேரின் செல்போன்களையும் போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். கார்த்தியின் தொடர்பு எண்கள், சம்பவம் நடந்தபோது யார் யாரிடம் அவர் பேசியுள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.