




















புதுடெல்லி: தேசிய திறந்தநிலை தரவரிசைப் போட்டியில் பங்கேற்க இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அனுமதி மறுத்த நிலையில், தான் மல்யுத்தத்தை விட்டு விலக வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் விரும்புவதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரபல மல்யுத்த வீராங்கனையும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான வினேஷ் போகத், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு அனுப்பிய நோட்டீஸுக்கு பதில் அளிக்கும் நோக்கில் உத்தரப் பிரதேசத்தின் கோண்டா நகருக்கு வருகை தந்தார். விளக்கம் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகத், “அவர்கள் அரசியல் ரீதியாக சரியானவர்களாகக் காட்டிக்கொள்ள முயன்றனர். விஷயத்தை நேரடியாகக் கூறுமாறு நான் அவர்களிடம் சொன்னேன்.
நான் போட்டியில் பங்கேற்பதை அவர்கள் விரும்பவில்லை. இந்த சிக்கல்களால் நான் சோர்வடைந்து இறுதியில், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அதனால்தான், அவர்கள் என்னை இத்தனை சர்ச்சைகளுக்குள் இழுத்துச் செல்கிறார்கள்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。