惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
小众软件
小众软件
The Cloudflare Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园_首页
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
爱范儿
爱范儿
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
雷峰网
雷峰网
Jina AI
Jina AI
博客园 - 【当耐特】
V
Visual Studio Blog
美团技术团队
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
量子位
IT之家
IT之家
G
Google Developers Blog
V
V2EX
The GitHub Blog
The GitHub Blog
月光博客
月光博客
GbyAI
GbyAI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“பயிர்க் கடன் தள்ளுபடியில் முதல்வர் விஜய் செய்தது பெரும் ...
வெற்றி மயிலோன் · 2026-06-01 · via hindutamil

Updated on: 

சென்னை: ‘பயிர்க் கடன் ரத்து செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டுவிட்டு தமிழக விவசாயிகளுக்கு பெரும் துரோகம் செய்திருக்கிறார் முதல்வர் விஜய். விவசாயிகளின் உரிமைகளை புறம்தள்ளி, அவர்களை ஏமாற்ற வேண்டாம்’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘முதல்வர் ஜோசப் விஜய், தமிழக விவசாயிகளுக்கு அறிவித்திருந்த விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை, முறையாக, நிறைவாக நிறைவேற்றவில்லை என்பதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள், சாலை மறியல் மற்றும் பல்வேறு போராட்டங்கள் நடத்திக் கொண்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

கடந்த தேர்தலில், விவசாய பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஜோசப் விஜய் கூறியிருந்தார். ஆனால், ரூ.50,000 மதிப்புள்ள பயிர்க் கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருப்பது விவசாயிகளை ஏமாற்றுகிற வித்தை ஆகும்.

"5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும்" என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், விவசாயிகளை ஏமாற்றிவிட்டது த.வெ.க அரசு.

அதுமட்டுமல்லாமல் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் என்று அறிவித்துவிட்டு, அதற்கு முரணாக, 500 யூனிட்டுக்கு மேல் இலவச மின்சாரம் கிடையாது என்று நிபந்தனை இட்டிருப்பது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பயிர்க் கடன் ரத்து செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டுவிட்டு தமிழக விவசாயிகளுக்கு பெரும் துரோகம் செய்திருக்கிறார் முதல்வர் ஜோசப் விஜய்.

இனியும் தாமதப் படுத்தாமல், த.வெ.க அரசு, விவசாய உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3500-ம், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4500-ம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஊக்கத்தொகையாக விவசாய இடுபொருட்கள், விதைகள், உரங்கள் ஆகியவை விவசாயிகள் பாதிக்கப்படாத அளவில் விலைநிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

நீர்நிலைகளை பாதுகாக்க குடிமராமத்து திட்டங்களும் வேகப்படுத்த வேண்டும். மேலும், வண்டல் மண்ணை விவசாயிகள் தங்களுடைய விவசாயத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அனுமதியிருந்தாலும், ஆங்காங்கு வருவாய்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள், வண்டல் மண்ணை எடுத்துச்செல்லும் விவசாயிகளின் மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்துவதால் விவசாயப் பெருமக்கள் சொல்லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகிறார்கள்.

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர், கடன் தள்ளுபடி செய்யும்போது, எந்தவித பாரபட்சம் இல்லாமல், விவசாயிகளின் நலன் ஒன்றையே மனதில் வைத்து அவர்களது கடன் சுமையை குறைத்தார்கள். இதர தொழில்களான கறவை மாடுகள் மற்றும் கால்நடை வளர்ப்பு கடன்கள், வேளாண்மை இயந்திரக் கடன்கள், வேளாண்மை நகை கடன்கள், மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் உட்பட அனைத்துவிதமான விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்தனர்.

தேர்தல் காலத்தில் ஜோசப் விஜய், "நான் விவசாயி அல்ல; இருப்பினும், விவசாயிகளின் ரணத்தை அறிந்தவன்" என்று பேசிவிட்டு, தற்பொழுது ஏமாற்றும் வகையில் பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பு செய்திருப்பது, நியாயம் இல்லாத கண்துடைப்பான நடவடிக்கை ஆகும்.

தேர்தல் வாக்குறுதி பொய்யாகி போய்விட்டது. விவசாயிகளை ஏமாற்றி, கடன் தள்ளுபடி என்று சொல்லி ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய்யை நோக்கி விவசாயிகளின் போராட்டம் நிச்சயமாக இருக்கும். விவசாயிகளின் போராட்டமானது அணையாமல் கனன்று கொண்டிருக்கும் நெருப்பைப் போன்றதாகும்.

1970 -லிருந்து 1992 வரை தமிழக விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகள் 57 பேர் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகி உள்ளனர் என்ற வரலாற்றுச் சம்பவத்தை ஜோசப் விஜய் உணரவேண்டும். தமிழக விவசாயிகள் போராட்டம், என்பது விவசாயிகளின் அறச்சீற்றம். இதை த.வெ.க அரசு தவறாக எடை போட வேண்டாம்.

"உழவன் உயர்ந்தால் உலகம் உயரும்" என்ற உணர்வோடு தமிழக மக்களின் பட்டினியை போக்கும் நடவடிக்கையை த.வெ.க அரசு எடுக்க வேண்டும். அறன்சார்ந்த வேளாண்தொழிலை புறக்கணிக்கும் முதல்வர் ஜோசப்விஜய், விவசாயிகளின் உரிமைகளையும் புறம்தள்ளி, அவர்களை ஏமாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.