惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
U
Unit 42
IT之家
IT之家
Y
Y Combinator Blog
T
Tailwind CSS Blog
B
Blog
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 叶小钗
Jina AI
Jina AI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
I
InfoQ
J
Java Code Geeks
F
Fortinet All Blogs
T
The Blog of Author Tim Ferriss
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
人人都是产品经理
人人都是产品经理
腾讯CDC
Hugging Face - Blog
Hugging Face - Blog
GbyAI
GbyAI
博客园 - 司徒正美
The GitHub Blog
The GitHub Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
L
LangChain Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“நீட் போட்டித் தேர்வு பயிற்சி என்பது ஊழல் தொழிற்சாலை” - ஜ...
க.ராதாகிருஷ்ணன் · 2026-06-24 · via hindutamil

Updated on: 

கரூர்: “நீட் போட்டித் தேர்வு பயிற்சி என்பது ஊழல் தொழிற்சாலையாக மாறியுள்ளது. பயிற்சி, புத்தகங்கள் என 22 லட்சம் மாணவர்களால் ரூ.1.32 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் கல்விக்கான பட்ஜெட்டே நிதியே ரூ.1.04 லட்சம் கோடி தான்,” என காங்கிரஸ் எம்.பி. செ.ஜோதிமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கரூர் எம்.பி. அலுவலகத்தில் எம்.பி. செ.ஜோதிமணி இன்று செய்தியாளர்களிடம் கூறிய: “நாடு முழுவதும் அண்மைக் காலமாக தேர்வுகளில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப்பேரணிகளில் ஜென் ஸி தலைமுறையினர் அதிகளவில் பங்கேற்று அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

பிளஸ் 2 தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு வைப்பது அநீதி. தமிழகத்தில் அனிதா உள்ளிட்ட நாடு முழுவதும் 50, 60 மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளனர். சாதாரண ஏழை, எளிய மக்கள் நீட் பயிற்சி தேர்வுக்கு எப்படி தயாராக முடியும்.

நீட் போட்டித் தேர்வு பயிற்சி என்பது ஊழல் தொழிற்சாலையாக மாறியுள்ளது. பயிற்சி, புத்தகங்கள் என 22 லட்சம் மாணவர்களால் ரூ.1.32 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் கல்விக்கான பட்ஜெட்டே நிதியே ரூ.1.04 லட்சம் கோடி தான்.

இதிலிருந்து இதில் நடக்கும் ஊழலை புரிந்து கொள்ளமுடியும். வினாத்தாள் கசிவு, மறுதேர்வு, தேர்வு மையம் மாற்றம் என பல்வேறு ஊழல் நடைபெறுகிறது. இதற்காக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக மறுக்கிறார்.

நீட் தேர்வு இல்லாமல், ஜேஇஇ, மத்திய அரசு பணிகளுக்கான எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகின்றன. இவற்றிற்காக ஆண்டுக்கு ரூ.3.05 லட்சம் கோடி செலவிடப்படுகிறது. இது மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை விட அதிகம். மக்கள் எப்படி சுரண்டப்படுகின்றனர்.

ஒரு நல்ல வேலைக்காக மக்கள் போராடி வருகின்றனர். கல்வி பயிலும் 1,000 இளைஞர்களின் 12 பேருக்கு மட்டுமே நல்ல நிரந்தர வேலை கிடைகிறது. 612 பேர் முறைசாரா பணிகள், தொழில்களில் ஈடுபடுகின்றனர். 292 பேர் எந்த வேலையுமின்றி உள்ளனர். பொறியியல் பட்டதாரிகள் 80 சதவீதம் பேர் வேலையின்றி உள்ளனர். 40, 50 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லா திண்டாட்டம் தற்போது ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வு, வேலைகளுக்கான போட்டி தேர்வுகளில் பல லட்சம் கோடி ஊழல் நடைபெறுகிறது. மாணவர்கள் தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. இதற்கான போராட்டங்களை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னெடுத்து வருகிறார். ஊழலுக்கு எதிரான போராட் டங்களுக்கு மகத்தான ஆதரவு கிடைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் பல்வேறு போட்டித் தேர்வுக்கான மையங்கள் அமைந்துள்ளன. அங்கு இதற்கு எதிரான பேரணி நடத்தப்பட்டது. தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேரணிகள் நடைபெற உள்ளது. ஜென்ஸி தலைமுறை இளைஞர்கள் அணி திரண்டு பங்கேற்க வேண்டும்.

இதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் க்யூ ஆர் கோடுடன் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை ஸ்கேன் செய்து இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் இணையலாம்” என்று அவர் கூறினார்.