惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Last Week in AI
Last Week in AI
有赞技术团队
有赞技术团队
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 司徒正美
博客园 - 聂微东
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 叶小钗
罗磊的独立博客
IT之家
IT之家
博客园 - 三生石上(FineUI控件)
V
Visual Studio Blog
T
Tailwind CSS Blog
大猫的无限游戏
大猫的无限游戏
Hugging Face - Blog
Hugging Face - Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
N
Netflix TechBlog - Medium
MyScale Blog
MyScale Blog
J
Java Code Geeks
L
LangChain Blog
S
SegmentFault 最新的问题
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
G
Google Developers Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
புறக்கோள்களைத் தேடி... | வானம் நமக்கொரு போதிமரம் 29
2026-04-29 · via hindutamil
த.வி.வெங்கடேஸ்வரன்

Updated on

3 min read

பிப்ரவரி 17, 1600. ரோம் நகரில் ஜோர்டானோ புருனோ உயிருடன் எரிக்கப்பட்டார். அவர் செய்த குற்றம்? இரவில் நாம் பார்க்கும் எல்லா விண்மீன்களும் சூரியன்கள்தான். ஒவ்வொரு சூரியனுக்கும் சொந்தமாகக் கோள்கள் உண்டு. அந்தக் கோள்களில் உயிர்கள் தோன்றலாம் என்று சொன்னார்.

இது ஏன் குற்றமாகக் கருதப்பட்டது? கடவுள் பூமியையும் உயிர்களையும் படைத்ததாகப் புனித நூல்கள் கூறின. மற்ற உலகங்கள் பற்றி அந்த நூல்களில் எதுவும் இல்லை.

வேறு கோள்கள் இருந்தால், அங்கே உயிர்கள் இருந்தால், அவற்றைப் படைத்தவர் யார்? இந்தக் கேள்வியே ஆபத்தானதாக இருந்தது. புருனோவின் கருத்துகள் கடவுளுக்கு எதிரானவை என்று அறிவிக்கப்பட்டன.

ஆனால் அந்தச் சிந்தனை அவருடன் மறைந்துவிடவில்லை. பல நூற்றாண்டுகளாக மனிதர்கள் யோசித்துக்கொண்டே இருந்தார்கள். மற்ற விண்மீன்களுக்குக் கோள்கள் உண்டா? அவை எப்படி இருக்கும்? அங்கே யாராவது வாழ்கிறார்களா? நெடுங்காலம் இவை வெறும் கற்பனைக் கருத்துகளாக மட்டுமே இருந்தன.

போதுமான வலிமையான தொலைநோக்கி இல்லை. பின்னர் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தது; நம் கேள்விகளுக்கு விடை பிறந்தது. 1800களின் மத்தியில் நுங்கம்பாக்கத்தில் ஒரு வான் ஆய்வகம் (Madras Observatory) இருந்தது.

அது ‘கிழக்கின் கிரீன்விச்’ என்று அழைக்கப்பட்டது. உலகெங்கும் புகழ்பெற்றதாக இருந்தது. அங்கே கேப்டன் டபிள்யூ.எஸ். ஜேக்கப் என்கிற பிரிட்டிஷ் வானியலாளர் பணிபுரிந்தார்.

ஜேக்கப் ‘70 ஒபியூச்சி’ என்கிற இரட்டை விண்மீன் தொகுதியைக் கவனித்துக்கொண்டிருந்தார். அந்த விண்மீன் நேர்க்கோட்டில் நகரவில்லை. அது சற்றே அசைந்தாடிக்கொண்டிருந்தது. மிகமிக நுட்பமாகத் தள்ளாடியது.

தானே விண்மீன் அசைந்தாடாது. ஏதாவது ஒரு பொருள் அதனை ஈர்ப்பு விசையால் கவர்ந்து இழுத்தால் மட்டுமே அசையும். அதனால், ஜேக்கப்புக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த விண்மீனை ஒரு கோள் சுற்றி வந்தால், கோளின் ஈர்ப்பு விசையில் விண்மீன் சற்றே தள்ளாடும்.

அப்படி ஒரு கோள் இருந்தால் அதனை நேரடியாகப் பார்க்க முடியாது. அவ்வளவு தொலைவில் மிகமிகச் சிறிதாக இருக்கும். ஆனால் கோளின் ஈர்ப்பு விண்மீனை இழுக்கும்.

கோள் சுற்றும்போது, அது விண்மீனை இடப்புறமும் வலப்புறமும் இழுக்கும். அதனால் பூமியிலிருந்து பார்க்கும்போது, அந்த விண்மீன் அலை அலையான பாதையில் நகர்வதைப் போல் தெரியும்.

இதற்குப் பெயர்தான் ‘ஆரத் திசைவேக முறை’ (Radial Velocity method). ஜேக்கப் உற்சாகம் அடைந்தார். அங்கே ஒரு கோள் இருப்பதாக ஆய்வுக் கட்டுரை எழுதினார். ஆயினும் பின்னர் மேலாய்வுகளில் அவரின் பிழை வெளிப்பட்டது; அக்காலக் கருவிகள் துல்லியமானவை அல்ல.

அவரின் ‘கண்டறிதல்’ பிழையானது; ஆனால் அவரின் யோசனை சரியானதுதான். அவர் வழிமொழிந்த ‘ஆரத் திசைவேக முறை’ கொண்டுதான் பல புறக்கோள்களை இன்று நாம் காண்கிறோம்.

முதல் கண்டறிதல்

1992இல் தான் முதன்முதலாகப் புறக்கோள் இனம் காணப்பட்டது. அலெக்சாண்டர் வோல்ஸ்ஜான், டேல் ஃபிரெயில் என்கிற இரண்டு வானியலாளர்கள் PSR B1257+12 என்கிற பல்சாரை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார்கள். கலங்கரை விளக்கம் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை சரியாக சுழன்று ஒளி வீசும்.

பல்சாரும் அப்படித்தான், ஆனால் அது ஒளிக்குப் பதிலாக வானொலித் துடிப்புகளை மிகத் துல்லியமாக வெளியிடும். வோல்ஸ்ஜானும் ஃபிரெயிலும் இந்தப் பல்சாரின் துடிப்புகளுக்காகக் காத்திருந்தார்கள். திடீரென்று சில துடிப்புகள் கொஞ்சம் முன்னதாக வந்தன.

சில கொஞ்சம் பின்னதாக வந்தன. ஏதோ ஒன்று பல்சாரை முன்னும் பின்னுமாக இழுப்பதைப் போல் இருந்தது. இதனைக் கொண்டு அந்த பல்சாரை ஒரு கோள் சுற்றிவருகிறது என்கிற முடிவுக்கு வந்தார்கள்.

துடிப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கவனமாக ஆய்வு செய்து, பூமியைப் போலப் பல மடங்கு நிறை கொண்ட இரண்டு கோள்கள் முறையே 66 மற்றும் 98 நாள்களில் அந்தப் பல்சாரைச் சுற்றி வருகின்றன எனக் கண்டறிந்தார்கள். அப்படித்தான் 1992இல் முதல் புறக்கோள்கள் கண்டறியப்பட்டன. ஒரு சாதாரண விண்மீனைச் சுற்றி அல்ல. இறந்த விண்மீனைச் சுற்றி.

திருப்புமுனை

1995இல் மைக்கேல் மேயர், டிடியர் குயலோஸ் ஆகியோர் 51 பெகாசி பி என்கிற விண்மீனைச் சுற்றி வரும் ஒரு புறக்கோளைக் கண்டறிந்தனர். இது இறந்த விண்மீன் அல்ல. சாதாரண விண்மீன். நமது சூரியனைப் போன்றதே.

இந்தக் கண்டறிதலுக்கு முன்புவரை நமக்குத் தெரிந்த ஒரே கோளமைப்பு நமது சூரியக் குடும்பம்தான். ஒரு பூமியும் ஏழு கோள்களும் மட்டுமே நமக்குத் தெரிந்திருந்தன. 51 பெகாசி பி கண்டறிதல் மூலம் சாதாரண விண்மீன்களைச் சுற்றியும் கோள்கள் இருப்பதை உறுதிசெய்ய முடிந்தது.

ஒரு கோள் விண்மீனைச் சுற்றும்போது, அது விண்மீனை இழுக்கிறது. அந்த விண்மீன் நம்மை நோக்கிக் கொஞ்சம் நகரும், பின்னர் நம்மை விட்டுவிலகும். இது விண்மீனின் ஒளியை நுட்பமாக மாற்றும். விண்மீனின் ஒளியை நிறமாலையாகப் பிரித்துப் பார்க்கும்போது, இந்த நகர்வை அளவிட முடியும். இப்படித்தான் இந்தப் புறக்கோள் கண்டறியப்பட்டது.

அந்தக் கோளுக்கு ‘51 பெகாசி பி’ என்று பெயரிடப் பட்டது. அது ஒரு பெரும் வளிமப் பேரரக்கன். வியாழனின் பாதி நிறை கொண்டது. மேலும் அது தன் விண்மீனைச் சுற்றி வெறும் 4.2 நாள்களில் வலம்வந்தது! சூரியனுக்கு அருகே உள்ள புதன் கோள்கூட 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.

இந்தக் கோளின் சுற்றுப்பாதை விண்மீனுக்கு மிக மிக அருகில் இருந்தது. இத்தகைய கோள்கள் ‘ஹாட் ஜூபிடர்’ (வெப்ப வியாழன்) என்று அழைக்கப்படுகின்றன.

அத்தகைய கோள்களில் உயிர் தோன்றுமா என்பது கேள்விக்குறிதான். இந்த அற்புதக் கண்டறிதலுக்காக மேயர், குயலோஸ் ஆகியோர் 2019இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்கள்.

இன்றைய நிலவரம்

இன்று, பிப்ரவரி 2026 நிலவரப்படி, நமக்கு 6,256 புறக்கோள்கள் தெரியும். சில வியாழன் போன்ற வளிமப் பேரரக்கர்கள். சில பூமி போன்ற பாறைக் கோள்கள். சில தங்கள் விண்மீனுக்கு மிக அருகில் சுற்றுகின்றன. சில மைய விண்மீனிலிருந்து வெகு தொலைவில் குளிர் இருளில் உள்ளன.

நமக்கு மிக அருகிலுள்ள புறக்கோள் ‘பிராக்சிமா சென்டாரி பி’. அது வெறும் 4.2 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. மனித அளவில் இது மிகப் பெரிய தொலைவுதான். ஆனால் விண்வெளி அளவில் அருகில் உள்ள பகுதியே. இது ஒரு பாறைக் கோள்.

பூமியைவிடச் சற்றுக் கனமானது. இது தன் விண்மீனைச் சுற்றி வெறும் 11 நாள்களில் வலம் வந்துவிடும். மேலும் இது உயிர் வாழக்கூடிய மண்டலத்தில் அமைந்துள்ளது. இரவில் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விண்மீனுக்கும், குறைந்தது ஒரு பாறைக் கோளாவது அதைச் சுற்றியிருக்க வாய்ப்புள்ளது.

(அறிவோம்)