惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
J
Java Code Geeks
V
V2EX
Blog — PlanetScale
Blog — PlanetScale
博客园 - 司徒正美
Hugging Face - Blog
Hugging Face - Blog
F
Fortinet All Blogs
aimingoo的专栏
aimingoo的专栏
B
Blog
A
About on SuperTechFans
有赞技术团队
有赞技术团队
月光博客
月光博客
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
腾讯CDC
美团技术团队
大猫的无限游戏
大猫的无限游戏
爱范儿
爱范儿
N
Netflix TechBlog - Medium
C
Check Point Blog
Recent Announcements
Recent Announcements
博客园 - Franky
博客园 - 叶小钗
T
Tailwind CSS Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“யோகா நம் வாழ்வின் அங்கமாக வேண்டும்” - கொல்கத்தாவில் 30,0...
செய்திப்பிரிவு · 2026-06-22 · via hindutamil

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர்.

Updated on: 

கொல்கத்தா: ​கொல்​கத்​தா​வில் நேற்று நடை​பெற்ற சர்​வ​தேச யோகா தின நிகழ்ச்​சி​யில் 30 ஆயிரம் பேருடன் பங்​கேற்ற பிரதமர் நரேந்​திர மோடி, ‘‘நம் வாழ்​வின் அங்​க​மாக யோகா மாற வேண்​டும்’’ என்று வலி​யுறுத்​தி​னார்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறை​யாக பிரதம​ராக பொறுப்​பேற்ற நரேந்​திர மோடி, ஜூன் 21-ம் தேதியை சர்​வ​தேச யோகா தின​மாக அறிவிக்க வேண்​டும் என ஐ.நா.சபைக்கு கோரிக்கை வைத்​தார். இதை ஐ.நா. சபை ஏற்​றுக் கொண்​டது. இதையடுத்​து, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி முதலா​வது சர்​வ​தேச யோகா தினம் உலகம் முழு​வதும் கொண்​டாடப்​பட்​டது. இதையடுத்து ஆண்​டு​தோறும் சர்​வ​தேச யோகா தினம் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது.

அந்த வகை​யில், 12-வது ஆண்டு சர்​வ​தேச யோகா தினம் உலகம் முழு​வதும் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி, பல்​வேறு நகரங்​களில் சிறப்பு யோகா நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்தா மாநகரில் உள்ள சிவப்பு சாலை​யில் நடை​பெற்ற பிரம்​மாண்ட யோகா நிகழ்ச்​சிக்கு பிரதமர் நரேந்​திர மோடி தலைமை தாங்​கி​னார். இதில் பங்​கேற்ற 30 ஆயிரம் பேர், பிரதமர் மோடி​யுடன் இணைந்து யோகா பயிற்​சிகளை செய்​தனர்.

இந்​நிகழ்ச்​சி​யில், மேற்கு வங்க ஆளுநர் ஆர்​.என்.ரவி, முதல்​வர் சுவேந்து அதி​காரி உள்​ளிட்​டோரும் கலந்து கொண்​டனர். யோகா நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்த நாளில் ஒட்​டுமொத்த தேச​மும், உலக​மும் இணைந்​திருப்​பது​போல தோன்​றுகிறது. இது​தான் யோகா​வின் சக்​தி. அனை​வரை​யும் யோகா ஒன்​றிணைக்​கிறது.

‘ஆரோக்​கிய​மான முது​மைக்​கான யோகா’ என்​பதே இந்த ஆண்​டுக்​கான கருப்​பொருள். வயது என்​பது மனிதனின் திறனைக் குறைத்​து​விடக் கூடாது. அதை உறு​தி​செய்ய நாம் பணி​யாற்​றலாம் என்​பதே இதன் அர்த்​தம். வயதாகும்​போது மக்​கள் தங்​களது உடல் ஆற்​றல், மன வலிமை, நோய் எதிர்ப்​புத் திறன் ஆகிய​வற்றை தக்​க​வைத்​துக் கொள்​ள​வும், மனித வாழ்க்கை தொடர்ச்​சி​யான வளர்ச்​சியை நோக்​கிச் செல்​ல​வும் யோகா உதவு​கிறது.

நாம் 20 வயதில் இருந்​ததை​விட 40 வயதில் அதிக நெகிழ்​வுத் ​தன்​மை​யுடன் இருக்க வேண்​டும். 30 வயதை​விட 50 வயதில் அதிக ஆற்​றலுடன் இருக்க வேண்​டும். 50 வயதை​விட 70 வயதில் வாழ்க்கை முறை நோய்​களை எதிர்க்​கும் திறன் கொண்​ட​வர்​களாக இருக்க வேண்​டும். இதுவே நம் இலக்​காக இருக்க வேண்​டும். இங்​கு​தான் யோகா நமக்கு உதவ முடி​யும்.

யோகா ஒரு வாழ்க்கை முறை: யோகா என்​பது ஒரு வரு​டாந்​திர நிகழ்​வாக சுருங்​கி​வி​டா​மல், அது ஒரு வாழ்க்கை முறை​யாக மாற வேண்​டும். நமது தனிப்​பட்ட வாழ்க்கை முறைக்கு மட்​டுமின்​றி, உலகின் சிறந்த எதிர்​காலத்​துக்​கும் யோகா அவசி​யம். யோகாவை ஒரு நாளுக்கு மட்​டு​மான​தாகவோ, ஒரு நிகழ்ச்​சிக்கு மட்​டு​மான​தாகவோ மட்​டுப்​படுத்த மாட்​டோம். யோகாவை நம் வாழ்​வின் ஒரு பகு​தி​யாக, நம் குடும்​பங்​களின் ஒரு பகு​தி​யாக, எதிர்​கால சந்​த​தி​யின் வாழ்க்​கை​யின் ஒரு அங்​க​மாக​வும் மாற்​று​வோம். இவ்​வாறு பிரதமர் தெரி​வித்​தார்.

மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற யோகா அமர்​வில் கலந்து கொண்​டார், மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் எஸ்.ஜெய்​சங்​கர் டெல்​லி​யின் நேரு பூங்​கா​வில் நடை​பெற்ற கொண்​டாட்​டங்​களில் பங்​கேற்​றார். மத்​திய அமைச்​சர்​கள் பியூஷ் கோயல் மற்​றும் ஜே.பி. நட்டா ஆகியோ​ரும் யோகா தின நிகழ்​வு​களில்​ பங்​கேற்றனர்​.