惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

腾讯CDC
N
Netflix TechBlog - Medium
aimingoo的专栏
aimingoo的专栏
P
Proofpoint News Feed
F
Fortinet All Blogs
大猫的无限游戏
大猫的无限游戏
I
InfoQ
V
V2EX
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
有赞技术团队
有赞技术团队
G
Google Developers Blog
L
LangChain Blog
博客园_首页
M
MIT News - Artificial intelligence
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
月光博客
月光博客
IT之家
IT之家
量子位
宝玉的分享
宝玉的分享
S
SegmentFault 最新的问题
Stack Overflow Blog
Stack Overflow Blog
V
Visual Studio Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
雷峰网
雷峰网

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
"தமிழகத்தில் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் காங். வெற...
ஆர்.டி.சிவசங்கர் · 2026-04-14 · via hindutamil

Updated on: 

ஊட்டி: இந்த முறை தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என அக்கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் டி.நாகராஜ் தலைமை வகித்தார். தெலங்கானா அமைச்சர் உத்தம்குமார் ரெட்டி, முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு ஆகியோர் இந்த கூட்டத்தில் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊட்டி வேடப்பாளர் பி.ராமசந்திரனை அறிமுகம் செய்து வைத்து பேசினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ராகுல் மீது மக்கள் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். எங்கள் ஆய்வுகளின்படி ஊட்டி தொகுதியிலும் நாங்கள் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். ஊட்டியில் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவோம்.

போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம். சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் உட்பட பொது வசதிகளை மேம்படுத்துவோம். பாஜக ஒரு விஷ கிருமி. எனவே, தமிழக மக்கள் பாஜகவின் வருகையை நிராகரிப்பார்கள். தமிழகத்தில் பாஜகவுக்கு இடமில்லை. காங்கிரஸ், திமுக மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் ஒற்றுமையாகப் பணியாற்றி வருகின்றனர்.

தி.மு.க மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் மீண்டும் முதல்வராவதற்கு நாங்கள் அனைவரும் ஆதரவளிக்கிறோம். ராகுல் காந்தியைப் பிரதமராகவும், ஸ்டாலினை முதல்வராகவும், ராமச்சந்திரனை இங்கு சட்டமன்ற உறுப்பினராகவும் ஆக்குவதற்கு நாங்கள் அனைவரும் உழைக்கிறோம்.

பெண்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை மாதம் ரூ.2,000 ஆக உயர்த்துவோம். இண்டியா கூட்டணி அரசு மற்றும் திமுக அரசு அமைந்தவுடன், 300 நாட்களில் 3 லட்சம் அரசு வேலை காலிப்பணியிடங்களை நிரப்புவோம். 10,000 பெண் காவலர்களைத் தேர்வு செய்யச் சிறப்பு நடவடிக்கை எடுப்போம்.

தமிழகத்தில் முதல்முறையாக இணைந்துள்ள 21 அரசியல் கட்சிகளின் தொண்டர்களின் ஆதரவுடன் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். மற்ற மாநிலங்களை பாஜக அழித்தது போலத் தமிழகம் அழிந்து போவதை நாங்கள் விரும்பவில்லை. பாஜக என்ற விஷம் தமிழகத்திற்குள் நுழைவதை நாங்கள் விரும்பவில்லை. அதனால்தான் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், மக்களும் திமுகவின் கீழ் ஒன்றுபட்டுள்ளனர்.

எங்களது தேசியத் தலைவர்கள் அனைவரும் அடுத்த வாரம் தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர். காங்கிரஸ் தலைவர் கார்கே ஒன்று அல்லது இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்வார். ராகுல் இரண்டு முதல் மூன்று நாட்கள் பிரச்சாரம் செய்வார். பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை பிரச்சாரம் செய்வார். கர்நாடக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரும் பிரச்சாரம் செய்வார்கள்.

தெலங்கானா முதல்வர் மற்றும் துணை முதல்வர், அமைச்சர் ஏற்கனவே சுற்றுப்பயணத்தில் உள்ளனர். மேலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல தேசியத் தலைவர்கள் கடைசி சில நாட்களில் தமிழகத்தில் உள்ள 234 வேட்பாளர்களுக்காகவும் பிரச்சாரம் செய்வார்கள். எங்களது கட்சியில் இருந்த ஒரு சிலர் த.வெ.க-வுடன் கூட்டணி வைக்க விரும்பினர், நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்த பிறகு, அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு அங்கே சேர்ந்துவிட்டனர். அவ்வளவுதான். மற்றபடி கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர்.

நான் கோவாவிலிருந்து வருகிறேன். மூன்று சிலிண்டர் வாக்குறுதியை 2022 கோவா சட்டமன்றத் தேர்தலின் போது அவர்கள் அளித்தனர். இப்போது கோவாவிலும் பாஜக ஆட்சி தான், மத்தியிலும் பாஜக ஆட்சி தான். இப்போது நாம் 2026-ல் இருக்கிறோம். கோவாவில் எத்தனை சிலிண்டர்களை விநியோகித்தார்கள். கோவாவில் மட்டுமல்ல, உத்தரகாண்டிலும் இதை அறிவித்தார்கள். எனவே, தேர்தல் நடக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் பொய்களை விற்கிறார்கள். காங்கிரஸ் பொய் சொல்லாது.

முதலில் அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்கள் என்று அவர்களிடம் கேளுங்கள். நரேந்திர மோடி ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் போடப்படும் என்றார். கருப்பு பணம் திரும்ப வரும் எனப் பெரிய வாக்குறுதிகளை அளித்தார். பாஜகவே ஒரு போலி, பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையும் போலி. இவ்வாறு அவர் கூறினார்.