


























மேலும், இந்த நிறுவனங்கள் மூலம் கோடிக் கணக்கில் வருவாய் பெற்ற அவர், அது குறித்த விவரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும், இது சம்பந்தமாக விசாரணை நடத்தும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, மனுதாரர் தரப்பில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் முறையிடப்பட்டது.
இதேபோல, வேட்பு மனுக்களில், சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக, அதிமுக வேட்பாளர்கள் ஜெயக்குமார், தங்கமணி, விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், ஆர்.இ.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், த.வெ.க. தலைவர் விஜய், த.வெ.க வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, பாஜக வேட்பாளர் தமிழசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை விசாரணை நடத்தக் கோரிய வழக்குகளையும் விசாரணைக்கு எடுக்கக் கோரியும் முறையீடு செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வேட்பு மனுவில் தகவலை மறைத்தது தொடர்பான வழக்குகளை இன்று பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。