





















Updated on
:
1 min read
சென்னை: தனுஷ் நடிப்பில் வரும் 30-ஆம் தேதி வெளியாகியுள்ள ‘கர’ படத்துக்குத் தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள கர படத்தில் நடிகர் தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏப்ரல் 30-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலம் பூவாய் அம்மன் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடிகரும் தயாரிப்பாளருமான வேங்கை அய்யனார் சென்னை வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில், ஏற்கெனவே கடந்த 2021-ஆம் ஆண்டு ‘கரா’ என்ற தலைப்பில் படப் பெயரை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து, நடிகர்கள் மாஸ்டர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட நடிப்பில் படத்தை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது தனுஷ் நடித்த ‘கர’ படத்தின் தலைப்பை மாற்றக் கோரி தயாரிப்பாளர் சங்கத்திலும் முறையிட்டதாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் பதிவு செய்த பெயரை பயன்படுத்த கூடாது என்றும் தனுஷின் பட தலைப்பை ‘கர’ என்ற பெயரை ஆங்கிலத்திலும் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ‘கர’ என்ற நடிகர் தனுஷ் பட தலைப்பை மற்ற வேண்டும் பெயரை மாற்றாமல் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு நாளை (ஏப்.28) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。