惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
Simon Willison's Weblog
Simon Willison's Weblog
K
Kaspersky official blog
P
Palo Alto Networks Blog
Google DeepMind News
Google DeepMind News
www.infosecurity-magazine.com
www.infosecurity-magazine.com
AI
AI
G
GRAHAM CLULEY
O
OpenAI News
Application and Cybersecurity Blog
Application and Cybersecurity Blog
Help Net Security
Help Net Security
L
LINUX DO - 热门话题
S
Schneier on Security
P
Privacy International News Feed
L
Lohrmann on Cybersecurity
SecWiki News
SecWiki News
C
Cybersecurity and Infrastructure Security Agency CISA
T
Threatpost
C
Cyber Attacks, Cyber Crime and Cyber Security
A
Arctic Wolf
C
Cisco Blogs
V2EX - 技术
V2EX - 技术
有赞技术团队
有赞技术团队
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
月光博客
月光博客
Latest news
Latest news
人人都是产品经理
人人都是产品经理
Schneier on Security
Schneier on Security
Last Week in AI
Last Week in AI
Webroot Blog
Webroot Blog
美团技术团队
N
News and Events Feed by Topic
大猫的无限游戏
大猫的无限游戏
Security Archives - TechRepublic
Security Archives - TechRepublic
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 三生石上(FineUI控件)
The Cloudflare Blog
Project Zero
Project Zero
博客园_首页
Cloudbric
Cloudbric
IT之家
IT之家
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
雷峰网
雷峰网
罗磊的独立博客
Hacker News: Ask HN
Hacker News: Ask HN
The Last Watchdog
The Last Watchdog
cs.CV updates on arXiv.org
cs.CV updates on arXiv.org
T
Tenable Blog
Scott Helme
Scott Helme

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
திருச்செந்தூரில் சுவாமி தரிசனத்துக்காக அமைச்சரிடமே ரூ.4,000 லஞ்சம்: அர்ச்சகர் உள்பட 5 பணியாளர்கள் மீது நடவடிக்கை
செய்திப்பிரிவு · 2026-05-30 · via hindutamil

திருச்செந்தூரில் நடைபெறவுள்ள வைகாசி விசாகத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ரமேஷ், ஸ்ரீநாத், மதன்ராஜா ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

Updated on: 

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அறநிலையத் துறை அமைச்சர் சீ.ரமேஷ் நேற்று காலை மாஸ்க், டி-சர்ட் அணிந்து வந்து ரகசியமாக திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் உதவியாளரிடமே தரிசனம் செய்ய ரூ.4 ஆயிரம் பேரம் பேசி ஜிபேயில் பெற்ற கோயில் அர்ச்சகர் பிடிபட்டார். அவர் உள்பட கோயிலில் முறைகேடு தொடர்பாக 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலில் நேர் கேட் வழியாக சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்களிடம் கட்டாயம் பணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அமைச்சர் ரமேஷ் நேற்று அதிகாலை 5.45 மணியளவில் பேண்ட், டி-சர்ட், முகத்தில் மாஸ்க் அணிந்து, ஒரு உதவியாளர் மற்றும் பாதுகாப்பு போலீஸ் அதிகாரி ஆகியோருடன் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தார். அப்போது கோயில் முகப்பில் அர்ச்சகர்கள் சிலர் பக்தர்களிடம் பேரம் பேசி தரிசனத்துக்கு அழைத்துச் சென்றதை பார்த்தார். இதைத்தொடர்ந்து, அமைச்சரின் உதவியாளர் அங்கிருந்த கோயில் அர்ச்சகர் ஒருவரிடம் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

அப்போது, 4 பேர் செல்வதற்கு ரூ.4 ஆயிரம் ஆகும் என பேரம் பேசி,பணத்தை ஜிபே வழியாக பெற்றுள்ளார். பின்னர் அதிகாரியிடம் பேரம் பேசி மாட்டிக்கொண்டதை அறிந்து, அர்ச்சகர் அங்கிருந்து நழுவியுள்ளார். தொடர்ந்து அமைச்சர் ரமேஷ், அங்கிருந்தவர்களிடம் விசாரித்து விட்டு அன்னதான மண்டபத்துக்குச் சென்றார். அங்கு கோயில் பணியாளர்கள் பக்தர்களுக்கு நுழைவுச் சீட்டு கொடுக்காமல் அன்னதான மண்டபத்துக்குள் அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமைச்சர் அங்கிருந்த பணியாளர்களிடம் விசாரித்துள்ளார்.

இதற்கிடையே அமைச்சர் ஆய்வு செய்வதை அறிந்து, கோயில் இணை ஆணையர் ராமு, உதவி ஆணையர் மெய்வேல், உள்துறை கண்காணிப் பாளர் ராமமூர்த்தி ஆகியோர் அங்குவந்தனர். அங்கிருந்த கோயில் பணியாளர்களிடம் நடந்த சம்பவத்தை அப்படியே எழுதி தரும்படி அமைச்சர் கேட்டுள்ளார்.

தொடர்ந்து, அமைச்சர் மற்றும் அவருடன் வந்தவர்கள் அன்னதானக் கூடத்தில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர். பின்னர் கோயில் நிர்வாக அலுவலகத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.இதேபோல், கோயில் சண்முகவிலாச மண்டபம் முகப்பு, கடற்கரை, பக்தர்கள் தங்கும் விடுதி, கார் பார்க்கிங் ஆகிய இடங்களை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் நண்பகல் 12.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றார்.

அமைச்சர் விளக்கம்: முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: திருச்செந்தூர் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் என்னிடம் தெரிவித்திருந்தனர். சமூக வலைதளங்களிலும் பல்வேறு புகார்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன.அதனைத் தொடர்ந்து ரகசியமாக ஆய்வு செய்யலாம் என்ற நோக்கத்தில் அதிகாலையில் முகக்கவசம் அணிந்து வந்தேன்.

அப்போது கோபுர முகப்பு பகுதியில் பக்தர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு நேரடியாக தரிசனத்துக்கு அழைத்துச் செல்வதை கண்டுபிடித்தோம். அர்ச்சகர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் சேர்ந்துதான் இந்த முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால், அவர்களிடம் மன்னிப்பு கடிதம் வாங்கிக் கொண்டு மன்னித்து விட்டுவிட்டதுபோல இணையத்தில் தவறான ஒரு தகவல் பரப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் வாங்கியது மன்னிப்பு கடிதம் இல்லை. விளக்க கடிதம் தான் பெறப்பட்டுள்ளது. கோயில் சொத்துகள், கோயிலுக்கு வரவேண்டிய வருமானங்கள் எங்கெல்லாம் தடைபட்டுள்ளது, கோயிலுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கோயில் துய்மையை எவ்வாறு கடைபிடிப்பது, கோயிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் முடித்துவிட்டு செல்வதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்றவை குறித்து ஆய்வு செய்துள்ளோம்.இந்த ஆய்வு அறிக்கை முதல்வரிடம் அளிக்கப்பட்டு யாராக இருந்தாலும் தவறு செய்தால் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையே பக்தர்களிடம் முறைகேடாக பணம் பெற்ற புகாரில் கோயில் அர்ச்சகர் ஞா.ஐயப்பன் என்பவர் கைங்கரிய பணிகள் செய்வதற்கு தடை விதித்து கோயில் இணை ஆணையர் ராமு உத்தரவிட்டுள்ளார். மேலும், முடி காணிக்கை மண்டபத்தில் பக்தர்களிடம் பணம் பெற்றதாக பணியாளர்கள் பா.சங்கர், வே.நாகராஜ் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் பக்தர்களிடம் பணம் பெற்ற புகாரில் பாதுகாப்பு பணியாளர்கள் கே.கருப்பசாமி, அ.தோப்பு ஆகியோர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் மேற்கொண்ட இந்த ஆய்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அமைச்சரின் இந்த நடவடிக்கைகளை பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.

4 அமைச்சர்கள் வருகை: இதனிடையே திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் ரமேஷ் நேற்று ஆய்வு மேற்கொண்டிருந்தபோது, சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, மீன்வளத் துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத்,சிறு குறு தொழில் துறை அமைச்சர் பி.மதன்ராஜா ஆகியோரும் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். அமைச்சர்கள் வருகையை அறிந்து மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன், மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா ஆகியோர் அமைச்சர்களை புத்தகம் கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து, வைகாசி விசாகத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ரமேஷ், ஸ்ரீநாத், மதன்ராஜா ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தினர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோரும் கலந்துகொண்டனர்.