

























Updated on:
மிசூரி: மத்திய அமெரிக்க மாகாணமான மிசூரியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) சாகசத்தில் ஈடுபட்ட ஒரு ஸ்கை டைவிங் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த 12 பேர் உயிரிழந்தனர்.
மிசூரியில் ஸ்கை டைவிங் சாகசத்துக்காக விமானி மற்றும் 11 பயணிகளுடன் சென்ற விமானம், ஞாயிற்றுக்கிழமை அன்று வயலில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில், அதில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். ஞாயிறு காலை 11:30 மணியளவில் பட்லர் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்தது.
உயிரிழந்த அனைவரையும் அடையாளம் கண்டு, அவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் பணியில் அதிகாரிகள் உடனடியாக ஈடுபட்டனர்.
அந்தத் தனியார் விமானத்தை ஸ்கை டைவ் கான்சஸ் சிட்டி நிறுவனம் இயக்கியதாக விமான நிலைய மேலாளரும், பேட்ஸ் கவுண்டி அவசரகால மேலாண்மை முகமையின் இயக்குநருமான டென்னிஸ் ஜேக்கப்ஸ் கூறினார். அது ஒற்றை எஞ்சின் டர்போப்ராப் விமானம் என அடையாளம் காணப்பட்டது.
விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே, விமானத்தின் சிதைவுகளில் ஏற்பட்ட தீயை அவசரகால மீட்புப் பணியாளர்கள் அணைத்ததாக ஜேக்கப்ஸ் கூறினார்.
ஸ்கை டைவிங் நிறுவனங்கள் இப்பகுதியில் வருடத்திற்கு எட்டு முதல் ஒன்பது மாதங்கள் செயல்படுகின்றன. பொதுவாக மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் தொடங்கி அக்டோபர் அல்லது நவம்பர் வரை ஸ்கை டைவிங் சாகசம் நீடிக்கும்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。