惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

C
CERT Recently Published Vulnerability Notes
U
Unit 42
T
The Blog of Author Tim Ferriss
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
B
Blog RSS Feed
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
S
Securelist
L
Lohrmann on Cybersecurity
Blog — PlanetScale
Blog — PlanetScale
Recorded Future
Recorded Future
D
DataBreaches.Net
Spread Privacy
Spread Privacy
T
Threat Research - Cisco Blogs
I
Intezer
P
Palo Alto Networks Blog
Simon Willison's Weblog
Simon Willison's Weblog
cs.CL updates on arXiv.org
cs.CL updates on arXiv.org
I
InfoQ
宝玉的分享
宝玉的分享
Security Latest
Security Latest
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
T
Threatpost
Cisco Talos Blog
Cisco Talos Blog
P
Proofpoint News Feed
博客园 - 司徒正美
H
Hacker News: Front Page
Y
Y Combinator Blog
爱范儿
爱范儿
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
cs.AI updates on arXiv.org
cs.AI updates on arXiv.org
NISL@THU
NISL@THU
月光博客
月光博客
有赞技术团队
有赞技术团队
Cloudbric
Cloudbric
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
G
Google Developers Blog
A
Arctic Wolf
博客园 - 【当耐特】
W
WeLiveSecurity
V
Visual Studio Blog
Exploit-DB.com RSS Feed
Exploit-DB.com RSS Feed
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
cs.CV updates on arXiv.org
cs.CV updates on arXiv.org
V
V2EX
C
Cyber Attacks, Cyber Crime and Cyber Security
S
SegmentFault 最新的问题
The GitHub Blog
The GitHub Blog
The Cloudflare Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
தமிழகத்தின் நிதிநிலை: எச்சரிக்கை மணி ஒலிக்கிறதா?
எஸ்.வி.ரமணி · 2026-06-18 · via hindutamil

Updated on: 

சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழகத்தின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கை, மாநிலத்தின் நிதிநிலையில் உருவாகி வரும் சவால்களை விரிவாக வெளிப்படுத்துகிறது. இது, ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் பல கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக, இது தமிழகத்தின் வளர்ச்சி பாதை, நிதி நிலைத்தன்மை மற்றும் எதிர்கால ஆட்சி முறை குறித்து அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது.

ஒரு முக்கியமான கேள்வியை இந்த வெள்ளை அறிக்கை முன்வைக்கிறது. கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டு வந்த காலகட்டத்தில், தமிழகத்தின் நிதிநிலை ஏன் தொடர்ந்து மோசமடைந்தது? இந்தியாவின் பல மாநிலங்கள் பெருந்தொற்றுக்கு பிந்தைய ஆண்டுகளை வருவாய் உயர்த்துவதற்கும், செலவுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், நிதி ஒழுங்குமுறையை மீட்டெடுப்பதற்கும் பயன்படுத்தின. ஆனால் தமிழகம் பல முக்கிய நிதி அளவுகோல்களில் எதிர்மாறான திசையில் பயணித்ததாக வெள்ளை அறிக்கை வாதிடுகிறது.

இந்தியாவின் மிகவும் தொழில்மயமாக்கப்பட்ட, நகரமயமாக்கப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பன்முகப்படுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஆனால், இந்த சாதனைகளின் பின்னால் ஒரு நிதிசார் பலவீனம் உருவாகிக் கொண்டிருப்பதாக வெள்ளை அறிக்கை எச்சரிக்கிறது. எனவே ,தமிழகம் எதிர்கொள்ளும் சவால் வெறும் நிதிசார் சவால் அல்ல. அது வளர்ச்சி சார்ந்த சவால், அரசியல் சவால் மற்றும் எதிர்கால தலைமுறைகளைப் பாதிக்கக்கூடிய சவாலாகும்.

உருவாகி வரும் நிதிசார் அழுத்தம்

2021-ஆம் ஆண்டில் சுமார் ரூ.5.13 லட்சம் கோடியாக இருந்த மாநிலத்தின் மொத்த பொறுப்புகள், 2026-ஆம் ஆண்டில் ரூ.10 லட்சம் கோடியை அணுகும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது. கடனின் அளவை விட அதனைச் சேவையாற்றும் செலவுதான் அதிக கவலையை ஏற்படுத்துகிறது. 2021-22-ஆம் ஆண்டில் சுமார் ரூ.41,500 கோடியாக இருந்த வட்டி செலவினம், 2025-26-ஆம் ஆண்டில் ரூ.67,000 கோடியைத் தாண்டியுள்ளது.

அதாவது மாநிலம் திரட்டும் ஒவ்வொரு வருவாயிலும் கணிசமான பகுதி புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அல்ல, பழைய கடன்களின் வட்டியைச் செலுத்துவதற்கே செலவாகிறது. அதிலும் கவலைக்கிடமான விஷயம், தமிழகம் தற்போது புதிய சொத்துகளை உருவாக்குவதற்காக செலவிடுவதை விட பழைய கடன்களின் வட்டியைச் செலுத்துவதற்காக அதிகமாக செலவிடுகிறது என்பதுதான்.

ஒப்பீட்டில் உண்மையான எச்சரிக்கை

இந்த வெள்ளை அறிக்கையின் மிகவும் முக்கியமான அம்சம் தமிழகத்தின் கடன் அளவு மட்டுமல்ல; அதன் ஒப்பீட்டு செயல்திறனாகும். ஏனெனில் தமிழகத்துக்கு பொருளாதார திறன் இல்லாதது பிரச்சினையல்ல. அந்த திறனை நிதி வலிமையாக மாற்றுவதில் ஏற்பட்ட குறைபாடுகள்தான் முக்கியமான கேள்வியாக எழுகின்றன.

வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டும் முக்கிய பிரச்சினைகள்

வெள்ளை அறிக்கை ஆறு முக்கிய கவலைகளை அடையாளப்படுத்துகிறது. முதலாவதாக, மாநிலத்தின் மொத்தக் கடன் மற்றும் பொறுப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இரண்டாவது, வட்டி செலவினங்கள் வேகமாக உயர்ந்து வருகின்றன. மூன்றாவது, வருவாய் பற்றாக்குறை ஒரு தற்காலிக பிரச்சினையாக இல்லாமல் கட்டமைப்பு சார்ந்த பிரச்சினையாக மாறியுள்ளது.

நான்காவது, மாநிலத்தின் சொந்த வருவாய் திரட்டும் திறன் பலவீனமடைந்துள்ளது. ஐந்தாவது, சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி செலவுகள் போன்ற கட்டாயச் செலவுகள் அரசின் வருவாயில் பெரும் பங்கைக் கைப்பற்றுகின்றன. ஆறாவது, மின்சார வாரியம், போக்குவரத்து கழகங்கள் மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்களின் நிதிநிலை மாநிலத்தின் எதிர்கால நிதிசார் சுமையை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

இந்த அனைத்தையும் ஒன்றாகப் பார்த்தால், தமிழகம் எதிர்கொள்ளும் நிதிசார் சவால் தற்காலிகமானதல்ல; அது கட்டமைப்பு ரீதியான சவாலாக மாறியிருப்பது தெளிவாகிறது.

ஏன் இது முக்கியமானது?

அதிக கடன் மற்றும் தொடர்ச்சியான பற்றாக்குறைகளால் பாதிக்கப்பட்ட அரசுகள் படிப்படியாக தங்களின் கொள்கை சுதந்திரத்தை இழக்கத் தொடங்குகின்றன. ஆகவே, இங்கே எதிர்கொள்ள வேண்டிய அபாயம் உடனடியாக உருவாகும் நிதி நெருக்கடி அல்ல. மாறாக, மாநிலத்தின் வளர்ச்சி வேகத்தை மெதுவாகக் குறைக்கும் தேக்கநிலையே உண்மையான கவலையாகும்.

பொருளாதார வரலாறு நமக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்பிக்கிறது. பொருளாதாரங்கள் பெரும்பாலும் திடீரென வீழ்ச்சியடைவதில்லை. வளர்ச்சி வேகம் மெல்ல மந்தமடைந்து, உள்கட்டமைப்பு திட்டங்கள் பின்னடைவைச் சந்தித்து, முதலீட்டு ஓட்டம் குறைந்து, பொதுச் சேவைகளின் தரம் பாதிக்கப்படுவதுடன், அரசுகள் எதிர்கால வளர்ச்சியைத் திட்டமிடுவதை விட நிதிச் சுமைகளை நிர்வகிப்பதிலேயே கவனம் செலுத்தும் சூழல் உருவாகிறது. இதுவே வெள்ளை அறிக்கை மறைமுகமாக எச்சரிக்கும் அபாயமாகும்.

அரசின் வருவாயில் பெரும் பகுதி வட்டி, சம்பளம், ஓய்வூதியம் போன்ற முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட செலவுகளுக்குச் செலவாகும்போது, எதிர்கால வளர்ச்சிக்கான முதலீடுகள் குறையத் தொடங்குகின்றன. இதனால் ஒரு தீய சுழற்சி உருவாகிறது. முதலீடு குறைகிறது. வளர்ச்சி மந்தமடைகிறது. வருவாய் உயர்வு குறைகிறது. பற்றாக்குறை அதிகரிக்கிறது. அதனை சமாளிக்க மேலும் கடன் பெறப்படுகிறது. புதிய கடன்கள் எதிர்கால வட்டி சுமையை அதிகரிக்கின்றன. இந்தச் சுழற்சியை உடைக்க திட்டமிட்ட நடவடிக்கைகள் அவசியமாகின்றன.

மக்கள் தொகை மாற்றம் – கவனிக்கப்படாத சவால்

தமிழ்நாடு எதிர்கொள்ளும் மற்றொரு முக்கியமான சவால் மக்கள் தொகை மாற்றமாகும். மாநிலம் வேகமாக முதியோர் சமூகமாக மாறி வருவதால், சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியச் செலவுகள் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், நலத்திட்டங்களின் மீதான அரசின் பொறுப்பும் மேலும் விரிவடையும்.

அதேசமயம், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் வேலைவாய்ப்பு வயதினரின் பங்கு குறையத் தொடங்குவதால், வருவாய் ஈட்டும் திறனுக்கும் அரசின் செலவுத் தேவைகளுக்கும் இடையிலான சமநிலையைப் பேணுவது எதிர்காலத்தில் மிகப் பெரிய சவாலாக மாறக்கூடும். இது வெறும் மக்கள் தொகை விவாதமல்ல. எதிர்கால நிதி திட்டமிடலின் மையக் கேள்வியாக மாறவிருக்கிறது.

அரசியல் பரிமாணம்

ஒரு வலுவான நிதி அடித்தளம் இல்லாமல் எந்த அரசும் நீண்ட காலத்திற்கு நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு முதலீடுகள் மற்றும் பொதுச் சேவைகளைத் தொடர முடியாது. எந்த அரசு இந்த நிலையை உருவாக்கியது என்பது முக்கியமான கேள்வியாக இருக்கலாம். ஆனால் அதைவிட முக்கியமான கேள்வி:

இந்த நிலைக்கு நம்பகமான தீர்வை வழங்கப் போவது யார்?

வெள்ளை அறிக்கை எழுப்பும் மிக முக்கியமான அரசியல் கேள்வி இதுவே.

நடவடிக்கை இல்லை எனில் நடப்பது என்ன?

திருத்த நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டால், தமிழகம் ஓர் ஆபத்தான சுற்றுவட்டத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. கடன் அதிகரிக்கும், வட்டி செலவுகள் உயரும், கட்டாயச் செலவுகள் பெருகும், அரசின் நிதி நெகிழ்வுத்தன்மை குறையும். எதிர்கால அரசுகள் புதிய திட்டங்களை உருவாக்குவதை விட பழைய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகவே அதிக நேரமும் வளங்களும் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

இதன் விளைவாக உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார மாற்றத்துக்கான முதலீடுகள் பாதிக்கப்படலாம். எனவே செயலற்றிருப்பதற்கான விலை உடனடி நெருக்கடியாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் அது மாநிலத்தின் வளர்ச்சி திறனை மெதுவாக சிதைக்கும். இதை தடுக்க திருத்த நடவடிக்கைகள் சரியான நேரத்தில் எடுக்கப்படுமா என்பதுதான் உண்மையான கேள்வி.

நிதி மீட்சிக்கான செயல்திட்டம்

தமிழகத்தின் பொருளாதார வலிமைகள் இன்னும் போதுமான அளவில் உள்ளன. எனவே நோக்கம் செலவுக் குறைப்போ அல்லது கடுமையான சிக்கனமோ அல்ல. நிலையான வளர்ச்சியுடன் கூடிய நிதி மீட்பே இலக்காக இருக்க வேண்டும். நீண்டகால நிதிசார் சீர்திருத்தத்திற்கான முதல் படியாக, ஒரு சுயாதீனமான ‘தமிழக பொருளாதார மற்றும் நிதி மீட்பு ஆணையம்’ அமைக்கப்பட வேண்டும்.

பொருளாதார நிபுணர்கள், தொழிலதிபர்கள், முன்னாள் நிர்வாகிகள், நிதி வல்லுநர்கள் மற்றும் பொதுக் கொள்கை நிபுணர்கள் இதில் இடம்பெற வேண்டும். கடன் மேலாண்மை, வருவாய் உயர்வு, பொதுத்துறை சீர்திருத்தம், முதலீட்டு விரிவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கான பத்து ஆண்டு செயல்திட்டத்தை இந்த ஆணையம் உருவாக்க வேண்டும்.

வரி விகிதங்களை உயர்த்துவதற்குப் பதிலாக, வருவாய் கசிவுகளைத் தடுக்க வேண்டும். தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு, செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இணக்கத்தன்மை கண்காணிப்பு மற்றும் தரவு ஒருங்கிணைப்பு போன்றவை வருவாய் திரட்டலை மேம்படுத்த உதவும். குறிப்பாக மின்சாரத் துறை உடனடி கவனம் பெற வேண்டும்.

மின்சார இழப்புகளைக் குறைத்தல், கட்டண வசூலை மேம்படுத்தல், நிர்வாக நவீனமயமாக்கல் மற்றும் நிதி பொறுப்புணர்வை அதிகரித்தல் ஆகியவை முக்கியம். மூலதன முதலீடுகளைப் பாதுகாத்து விரிவுபடுத்தப்பட வேண்டும். நிதி சீர்திருத்தம் என்ற பெயரில் வளர்ச்சி முதலீடுகள் பாதிக்கப்படக் கூடாது. சாலைகள், துறைமுகங்கள், தொழிற்பூங்காக்கள், குடிநீர் அமைப்புகள், மின்சார பரிமாற்ற வலையமைப்புகள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புகள் போன்ற துறைகளில் முதலீடு தொடர வேண்டும்.

தமிழ்நாடு எதிர்கால வளர்ச்சியை முன்னெடுக்கும் உயர்தொழில்நுட்ப உற்பத்தி, மேம்பட்ட தொழில் துறைகள், பசுமை ஆற்றல் மற்றும் அறிவுசார் பொருளாதாரத் துறைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். கடன் குறைப்பு, வருவாய் பற்றாக்குறை நீக்கம், பொதுத்துறை சீர்திருத்தம் மற்றும் முதலீட்டு வளர்ச்சி ஆகியவற்றுக்கான தெளிவான இலக்குகளுடன் பத்து ஆண்டு நிதி வரைபடம் வெளியிடப்பட வேண்டும்.

அரசின் செலவுகள் எவ்வளவு என்பதைக் காட்டிலும் அதன் விளைவுகள் என்ன என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதன் மூலம் சமூக நீதியையும் செயல்திறனையும் ஒரே நேரத்தில் மேம்படுத்த முடியும்.

தமிழ்நாடு தனது நவீன வரலாற்றில் பல சவால்களை வெற்றிகரமாக சமாளித்துள்ளது. விவசாய மாநிலத்திலிருந்து தொழில் துறை மற்றும் சேவைத் துறைகளில் முன்னணியில் இருக்கும் மாநிலமாக அது வளர்ந்துள்ளது.

வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டும் சவால்கள் தீவிரமானவை. ஆனால் அவை தீர்க்க முடியாதவை அல்ல. தமிழகத்திடம் வலுவான பொருளாதார அடித்தளம் உள்ளது. திறமையான மனிதவளம் உள்ளது. நிர்வாக அனுபவம் உள்ளது. தொழில் துறை திறன் உள்ளது. தேவையானது அரசியல் மனவலிமை, நிர்வாக ஒழுங்கு மற்றும் நீண்டகால திட்டம் மட்டுமே.

இந்த வெள்ளை அறிக்கையின் உண்மையான மதிப்பு பிரச்சினைகளை சுட்டிக்காட்டுவதில் இல்லை. மாறாக, தமிழகத்துக்கு ஒரு புதிய திசையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குவதில்தான் உள்ளது. மாநிலம் இந்த தருணத்தை சரியாகப் பயன்படுத்தினால், இந்த வெள்ளை அறிக்கை நிதிசார் வீழ்ச்சியைப் பதிவு செய்த ஆவணமாக அல்லாமல், தமிழகத்தின் அடுத்த பொருளாதார மறுமலர்ச்சிக்கான தொடக்கப் புள்ளியாக வரலாற்றில் நினைவுகூரப்படலாம்.