惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Vulnerabilities – Threatpost
L
LINUX DO - 热门话题
F
Fox-IT International blog
C
Cisco Blogs
C
CERT Recently Published Vulnerability Notes
T
Tor Project blog
Malwarebytes
Malwarebytes
Latest news
Latest news
D
Darknet – Hacking Tools, Hacker News & Cyber Security
SecWiki News
SecWiki News
N
News and Events Feed by Topic
T
True Tiger Recordings
www.infosecurity-magazine.com
www.infosecurity-magazine.com
美团技术团队
P
Palo Alto Networks Blog
V
V2EX - 技术
AWS News Blog
AWS News Blog
A
About on SuperTechFans
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
量子位
博客园 - 【当耐特】
P
Proofpoint News Feed
N
News and Events Feed by Topic
博客园 - 司徒正美
U
Unit 42
G
Google Developers Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
Schneier on Security
Schneier on Security
G
GRAHAM CLULEY
O
OpenAI News
T
The Blog of Author Tim Ferriss
F
Future of Privacy Forum
IntelliJ IDEA : IntelliJ IDEA – the Leading IDE for Professional Development in Java and Kotlin | The JetBrains Blog
IntelliJ IDEA : IntelliJ IDEA – the Leading IDE for Professional Development in Java and Kotlin | The JetBrains Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
人人都是产品经理
人人都是产品经理
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
N
News | PayPal Newsroom
V
Visual Studio Blog
V
V2EX
Simon Willison's Weblog
Simon Willison's Weblog
Microsoft Security Blog
Microsoft Security Blog
C
Cyber Attacks, Cyber Crime and Cyber Security
T
Threat Research - Cisco Blogs
Spread Privacy
Spread Privacy
N
Netflix TechBlog - Medium
Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
D
Docker
小众软件
小众软件
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
I
Intezer

hindutamil

எபோலா வைரஸ் பரவல்: எச்சரிக்கை அவசியம் ஏன்? Oppo A6c ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன? மேகேதாட்டு விவகாரம்: தமிழக அரசின் மறு ஆய்வு மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் மக்கள் தொகை மாற்றங்களை ஆராய உயர்மட்ட குழு அமைத்தது மத்திய அரசு! திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 162 அரசு வழக்கறிஞர்கள் ராஜினாமா ஏற்பு “எல்லை பாதுகாப்பில் ஆண்களைவிட பெண்களின் பங்களிப்பு அதிகம்” - அமித் ஷா “அதிமுக எம்எல்ஏக்களை இணைத்துக் கொள்வது தவெகவின் நம்பகத்தன்மை பாதிக்கும்” - திருமாவளவன் அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா தவெகவில் ஐக்கியம் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 4-க்கு தள்ளிவைப்பு! “அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது ஏற்புடையதல்ல” - பெ.சண்முகம் மேற்கு வங்கத்தில் 400 உணவகங்களில் ரூ.5-க்கு மீன்சாதம்: முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு பழனிசாமி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை: தவெக பதிலடி “கரமோதலும் களமோதலும் ஜனநாயகத்துக்கு மூடத்தனம்” - ஆ.ராசா ‘மேகேதாட்டு அணை திட்ட அறிக்கையை நிராகரிக்க அறிவுறுத்துவீர்’ - பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் மே 30 வரை உள் தமிழக பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு குவாட் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: இந்தோ - பசிபிக் கடல்சார் கண்காணிப்பு திட்டத்தை தொடங்க முடிவு தவெக வாக்குறுதிக்கு மாறானது பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு: இந்திய கம்யூ. அதிருப்தி “நாங்கள் யாரும் குதிரை பேரம் நடத்தவில்லை” - அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் விஜய் நாளை டெல்லி பயணம் - பிரதமர் மோடியை சந்திப்பதாக தகவல் தவெக ஆட்சியில் தீர்க்கப்படுமா நெல் கொள்முதல் நிலைய பிரச்சினைகள்? “சிபிஎஸ்சி 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழியை கட்டாயமாக்கும் உத்தரவை திரும்பப் பெறுக” - அண்ணாமலை ”சட்ட விதிகளுக்கு உட்பட்டே நடவடிக்கை” - எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்பு தொடர்பாக சபாநாயகர் விளக்கம் “பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்” - முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தல் ‘வேள்​பாரி’ படத்​துக்கு முன்பாக ஆக்‌ஷன் த்ரில்லரை இயக்குகிறார் ஷங்​கர் மீண்டும் கட்சி தாவிய டாக்டர் பா.சரவணன் - உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து தவெகவில் ஐக்கியம் ‘டச் ஆஃப் ஈவில்’ - 1958: மூழ்கும் நீதியின் இருண்ட முகம் | ஹாலிவுட் மேட்னி 32 ‘டச் ஆஃப் ஈவில்’ - 1958: மூழ்கும் நீதியின் இருண்ட முகம் | ஹாலிவுட் மேட்னி 32 பெரம்பலூர் அருகே திமுக - விசிகவினர் இடையே பயங்கர மோதல் அமரர் ஊர்தி இல்லாததால் இறந்தவர் உடலை 4 கி.மீ. தோளில் சுமந்த உறவினர்கள் எத்தனை மாணவர்கள்! அத்தனை சம்பவங்கள்! - என் மன வானில் “விவசாயிகளுக்கு விஜய் செய்தது அப்பட்டமான நம்பிக்கை துரோகம்” - நயினார் நாகேந்திரன் அண்டத்தை ஆளும் கரும் பொருள் | அணு முதல் அண்டவெளி வரை 20 பார்க்கின்சன் எனும் அமைதியான தாக்குதல் | நட்சத்திரக் குழந்தைகள் 20 கர்நாடக முதல்வராகிறாரா டி.கே. சிவக்குமார்? - டெல்லியில் முக்கிய ஆலோசனை தவெக வீழ்த்தும் அதிமுக விக்கெட்டுகள்... விஜய்யின் ‘பாய்ச்சல்’ அரசியல் இலக்கு என்ன? ஜேம்ஸ் பாண்​டாக நடிக்க இளம் நடிகரை தேடும் படக்​குழு அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா “அதிமுக எம்எல்ஏக்கள் மூவரின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது” - சபாநாயகரிடம் இபிஎஸ் தரப்பு மனு “இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டுமா சி.எம் சார்?” - உதயநிதி ஷரியா சட்டத்தை முன்னிறுத்தி ரூ.6,000 கோடி மோசடி செய்தவர் கைது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் - மகன் பிரிட்டனில் மேயர்களாக தேர்வாகி சாதனை தன்னை பவர் ப்ளேயின் அசத்தல் பவுலராக்கிக் கொண்ட சிராஜ்! “விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி விஞ்ஞான ஏமாற்று வேலை” - இபிஎஸ் குற்றச்சாட்டு முதல்வர் விஜய்யை விமர்சித்து வீடியோ வெளியிட்டவர் கைது “திராவிட மாடல் 2.0 ஆட்சியாகவே தவெக ஆட்சி உள்ளது” - அர்ஜுன் சம்பத் விமர்சனம் “குதிரை பேர அரசியலை யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது” - காங். எம்.பி ஜோதிமணி கருத்து பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை தவெக அரசின் பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது: டெல்டா விவசாயிகள் கருத்து “கொஞ்சம் பொறாமைதான்...” - விஜய் ஆட்சியைப் பிடித்தது குறித்து பவன் கல்யாண் ஓபன் டாக் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைவு: இன்றைய சந்தை நிலவரம் என்ன? தகுதி சுற்று 1: ஆர்சிபி - குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை 10 நாட்களில் மாற்றங்களை எப்படி கொண்டு வர முடியும்? - முதல்வர் விஜய்க்கு நேரம் கொடுக்க வேண்டும்: குஷ்பு கருத்து அலையில் இழுத்து செல்லப்பட்ட தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணன் பரிதாபமாக உயிரிழப்பு ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் - போர்நிறுத்த அத்துமீறல்? திருவான்மியூரில் பள்ளி, கோயில் அருகே விதிகளை மீறி செயல்படும் டாஸ்மாக் கடையை மூட கோரிக்கை கார்த்தி ஜோடியானார் மீனாட்சி சவுத்ரி “பந்துவீச்சே எங்கள் பலம்... தொடக்கத்திலேயே விக்கெட்கள் வீழ்த்த முயற்சிப்போம்” - ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆர்வமுடைய வீரர், வீராங்கனைக்கு ரூ.5.80 லட்சம் நிதி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியை கேரள முதல்வரின் செயலாளராக நியமிக்க எதிர்ப்பு யு-23 மல்யுத்தத்தில் இந்தியா தங்க வேட்டை மேகேதாட்டு அணை விவகாரம்: அரசியல், சட்ட ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் - கட்சி தலைவர்கள் வலியுறுத்தல் விசில் தம்பிகளின் ‘ரீல்ஸ்’ அலப்பறைகள் | உள்குத்து உளவாளி பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக், பவுலினி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் ட்விஷா மரண வழக்கு: கணவரிடம் சிபிஐ விசாரணை ராயபுரம் உள்ளிட்ட 3 மண்டலங்களில் ரூ.303 கோடியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆய்வு ஜூன் 18-ல் மாநிலங்களவை தேர்தல்: பாஜக கூட்டணி, எதிர்க்கட்சிகளுக்கு தலா 2 எம்.பி.க்கள் அதிகரிக்க வாய்ப்பு பயணிகளின் தேவைக்காக எழும்பூர் உட்பட 4 ரயில் நிலையங்களில் மருத்துவ வசதி ஏற்படுத்த ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை கோட்டம் காலி மது பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை எதிர்த்து டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டம் குல்மார்க்கில் ரோப் கார் பழுது: 300 சுற்றுலாப் பயணிகள் மீட்பு ஆந்திராவில் 4 விமான நிலையங்களில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் விரைவில் விநியோகம் சுந்தரம் பைனான்ஸ் நிகர லாபம் ரூ.1,834 கோடியாக அதிகரிப்பு பக்ரீத் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து 3,700 பஸ்கள் இயக்கம்: போக்குவரத்துத் துறை தகவல் அதிக தொழில்முனைவோரை உருவாக்குகிறது இந்தியா: நிதி ஆயோக் அதிகாரி கருத்து “மோடி எனது சிறந்த நண்பர்” - ட்ரம்ப் நெகிழ்ச்சி காதல் பிரச்சினைகளுக்கு தீர்வு தருவதாகக் கூறி ஆன்லைன் ஜோதிடம் மூலம் ரூ.60 லட்சம் கொள்ளை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செயல்பாட்டை சிபிஐ விசாரிக்க கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீரில் கார் மூழ்கி தம்பதி உயிரிழப்பு மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை நிறுத்த வேண்டும்: அமைச்சர் விஸ்வநாதன் வலியுறுத்தல் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 உயர்வு - ‘பணவீக்க மனிதர் மோடி’ என ராகுல் விமர்சனம் செய்யாத பணிக்கு ரூ.16 லட்சத்தை வழங்கியதாக காரைக்குடி மாநகராட்சி மீது ஒப்பந்ததாரர் முறைகேடு புகார் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் இன்று குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் அடகுவைக்க வந்த விவசாயிகளிடம் 12 பவுன் நகை பெற்று மோசடி: கூட்டுறவு ஊழியர்கள் கைது சித்திரைத் திருவிழாவின்போது மோதல்: மதுரையில் முன்விரோதத்தில் சிறுவன் கொலை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி: விவசாய சங்கங்கள் எதிர்ப்பு, பாமக வரவேற்பு சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக அன்பு நியமனம்: லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் “உங்கள் மகளின் நினைவு வரவில்லையா?” - வேடநத்தம் மாணவி கொலை குற்றவாளியிடம் நீதிபதி கேள்வி அதிகாரிகளுடன் பத்திரப்பதிவு துறை அமைச்சர் ஆலோசனை: லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை மருத்துவமனைகளுக்கு தடையின்றி மின்சாரம்: சுகாதார அமைச்சர் தகவல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 26 மே 2026 ஜோதிட நாள்காட்டி 26.05.2026 | வைகாசி 12 - செவ்வாய்க்கிழமை தகுதியுள்ள நிறுவனங்களுக்கு ஒப்பந்தப் பணிகள்: மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் உறுதி 66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை - முழு விவரம் தேர்தலில் வெற்றி பெற்ற 21-வது நாளிலேயே அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் பெற்ற ரூ.50,000 பயிர்க் கடன் தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை சிறுமி படுகொலை: பத்திரிகையாளர் சந்திப்பில் சிரித்த அதிகாரிகளுக்கு குவியும் கண்டனம் “அன்று ஸ்டாலின் எங்களிடம் சொன்னதற்கும், இன்று திமுக தலைவர்கள் பேசுவதற்கும் சம்பந்தமில்லை” - பெ.சண்முகம் கருத்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது ஏன்? - மரகதம் குமரவேல் விளக்கம் அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேரின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர் கூறியது என்ன?
முதல்வர் விஜய் கவனத்துக்கு... சாதாரண மக்களின் அசாதாரண 7 கேள்விகள்!
2026-05-26 · via hindutamil
பாரதி ஆனந்த்

Updated on

5 min read

“நாங்களே மாற்று, தூய சக்தி..” என்று தவெக தலைவர் விஜய் அளித்த வாக்குறுதிகளுக்காக 108 இடங்களில் வெற்றி என்ற சுகமான சுமையைத் தூக்கி வைத்தவர்கள் சாமானிய மக்கள். முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி இப்போது வெற்றிகரமாக 3-வது வாரத்தில் அடியெத்து வைத்துள்ள நிலையில், மாற்றத்துக்கான அந்த ‘தூய சக்தி’-க்கு பின்புலத்துடன் சாமானியர்கள் முன்வைக்கும் 7 கேள்விகள் இங்கே...

1. சட்டம் - ஒழுங்கும், பாதுகாப்பும்:

தேர்தல் பிரச்சார மேடைகளில் எல்லாம் ‘இந்த ஆட்சியில் குழந்தை முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை’ என்றீர்கள். பெண்கள் எல்லோரும் தெறி படத்தில் வந்ததுபோல் நீங்கள் நீதி செய்வீர்கள் என்று நினைத்தார்களோ என்னவோ! வாக்குகளை வாரி வழங்கியுள்ளனர். 15 நாட்களில் 19 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) புள்ளி விவரத்தின்படி, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 85 முதல் 87 பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. மொத்தமாக பெண்களுக்கு எதிராக அன்றாடம் 1200 குற்றங்கள் நடக்கின்றன என்கிறது. இதைக் கூட நீங்கள் உங்களுக்கு ஆதரவான உதாரணமாகச் சொல்லக்கூடும்.

ஆனால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்குகளை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த ஆலோசனைக்குப் பின்னர் “பாலியல் குற்ற வழக்குகளை விரைவாக, முறையாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத் தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளீர்கள்.

நீங்கள் போட்ட முதல் கையெழுத்துகளில் ஒன்று சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டம். அதுவே முந்தைய ஆட்சியின் பிங்க் பேட்ரோல் திட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டி பரிணாம வளர்ச்சி கண்டது என்கிறார்கள். ஆக, பெண்களின் பாதுகாப்புக்காக நீங்கள் ஆக்கபூர்வமாக என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்கிறார்கள்.

2. லஞ்சம், ஊழல்...

பத்திரப் பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டத்தின்கீழ் 18 புதிய சேவைகளை உள்ளடக்கிய ‘ஸ்பிரின்ட் 1’ செயல் திட்டம் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் தருவாயில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் மக்கள் பிறர் உதவியின்றி, சொத்து தொடர்பான குறைந்தபட்ச விவரங்களை உள்ளிட்டு, ஆவணத்தை தாங்களே உருவாக்கும் வகையில், மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. அத்துடன், பிரச்சினைகள் ஓய்ந்துவிட்டதா என்றால், இல்லை. என்னதான் ‘ஸ்டார் 3.0'’ மென்பொருளால் மற்றும் வீட்டில் இருந்தபடியே பதிவு செய்யும் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இணைய வசதி, கணினி பயன்பாடு திறன் குறைவாக உள்ள சாமானிய மக்களுக்கு இதில் சவால்களே அதிகம்.

அதேபோல், சொத்து மோசடிகளைத் தடுக்க, பதிவு செய்யப்படும் அனைத்து சொத்துககளுக்கும் உரிய ‘பட்டா’ கட்டாயம் ஆக்கப்பட்டிருந்தாலும், நிலம் தொடர்பான சிறிய பிழைகளைத் திருத்த வருவாய்த் துறையை நாட வேண்டியுள்ளதாக சாமானியர்கள் தவிப்பை வெளிப்படுத்துகின்றனர். இன்னமும்கூட இடைத்தரகர்களின் ஆதிக்கம் ஆவணங்களை சரிபார்ப்பதிலும், நில அளவீடு செய்வதிலும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்கின்றனர்.

வந்தவுடன் கஜானா காலி என்ற ஓர் அரிய கருத்தை தெரிவித்ததோடு, அது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவதாகக் கூறினீர்கள். ‘காலியான அந்த கஜானா’-வை நிரப்புவதற்கு அதிக நிதி ஆதாரத்தை ஈட்டித் தருவது பத்திரப் பதிவுத் துறை. அந்தத் துறையின் நடைமுறை சிக்கல்களை தீர்த்து, ஊழல்களை ஒழித்துவிடுவீர்களா என்று உரிமையுடன் கேட்கின்றனர் உங்களுக்கு வாக்களித்த சாமானியர்கள். அதேபோல், ஆர்டிஓ அலுவலகங்களில் வாழையடி வாழையாக சாமானியர்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்கும் லஞ்ச ஊழல்களை ஒழிப்பீர்களா என்ற எதிர்பார்ப்பும் எகிறியிருக்கிறது.

3. பெண்களின் எதிர்பார்ப்பு...

உங்களுக்கு 18 வயது முதல் தலைமுறை பெண் வாக்காளரும், விசில் என்று கூட சொல்ல முடியாத அளவுக்கு வயதான மூதாட்டியும் வாக்களித்தார்களே... நீங்கள் ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றீர்கள். 60 வயதுக்குட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாய்மார்களுக்கு ஆண்டுக்குக் கல்வி உதவித் தொகையாக ரூ.15,000 வழங்கப்படும் என்றீர்கள்.

மகளிருக்கான ‘வெற்றி பயண திட்டம்’ அறிவித்தீர்கள். அதாவது விடியல் திட்டத்தில் சாதாரண கட்டண பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிப்பதுபோல் தவெக ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவச பயணம் என்ற வாக்குறுதியை வழங்கினீர்கள். அது குறித்துப் போக்குவரத்துத் துறை தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக துறை சார்ந்த அமைச்சர் கூறினாலும் பெண்கள் அதை அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதேபோல், பெட்ரோல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், இல்லத்தரசிகள் மாதம் ரூ.2,500, இலவசமாக 6 சிலிண்டர்கள், வெற்றிப் பயணத் திட்டங்களை வெகுவாக எதிர்பார்க்கின்றனர்.

தேர்தல் வாக்குறுதிகளை வழங்கும் முன்னரே குறைந்தபட்சம் மாநில அரசின் அதிகாரப்பூர்வ நிதிநிலை அறிக்கைகள் (Budget), கொள்கை விளக்கக் குறிப்புகள் மற்றும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை தலைவர் (CAG) வெளியிடும் தணிக்கை அறிக்கைகளை வாசித்து ஆய்வு செய்திருந்தாலே நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைத் தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

எங்களுக்கு இலவசமாக ரெஃப்ரிஜிரேட்டர் வேண்டாம், ரூ.8,000 கூப்பனும் வேண்டாம் என்றல்லவா உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள் பெண்கள். அது நீங்கள் சொன்ன மாற்றத்துக்கான அல்லது அவர்கள் எதிர்பார்த்த மாற்றத்துக்கான வாக்குகளாக இருக்கலாம். நீங்கள் பெண்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

“நாங்களும் பொறுத்திருந்தே ஒவ்வொன்றாக செய்ய முடியும். எங்களுக்கும் அவகாசம் கொடுக்க வேண்டும்” என்று உங்கள் கட்சியில் உள்ள அரசியல் அனுபவம் நிறைந்த 3 முதல்வர்களோடு பயணித்த செங்கோட்டையன் சொல்லியுள்ள கருத்தை தோதாகத் சாக்கை தூக்கிக் கொண்டு வராதீர்கள் என்று ஆதங்கப்படுகிறார்கள் மக்கள்.

4. வேதனையில் விவசாயிகள்

கடந்த ஏப்ரல் மாதம் நீங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை ஒரு விவசாயி பெற்றுக் கொண்டார். விவசாயிகளுக்கு அப்படித்தான் நீங்கள் மாபெரும் மாற்றத்துக்கான நம்பிக்கையைக் கொடுத்தீர்கள்.

கூடவே, 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்து வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கடன்பெற்ற விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி செய்யப்படும். 2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் குழந்தைகளின் கல்விச்செலவை அரசே ஏற்கும். குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். விவசாய தொழிலாளர்களுக்கு ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் நேரடி முதலீட்டு ஆதரவு தொகையாக வழங்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகள் வழங்கினீர்கள்.

<div class="paragraphs"><p>தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் முதல்வரை சமீபத்தில் சந்தித்தபோது</p></div>

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் முதல்வரை சமீபத்தில் சந்தித்தபோது

இந்நிலையில்தான் இப்போது ஓர் உத்தரவை பிறப்பித்தீர்கள். தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் வரை பயிர்க் கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையான தள்ளுபடியையும், அதற்கு மேல் பெற்ற விவசாயிகளுக்கான பயிர்க் கடன் தள்ளுபடியை விகிதங்களின் அடிப்படையிலும் அறிவித்துள்ளீர்கள்.

இதுவரை யாருமே செய்யாதவகையில், சிறு, குறு விவசாயிகள், பெரிய விவசாயிகள் என விவசாயிகளை தரம் பிரித்து கடன் தள்ளுபடி அறிவித்துள்ளது கண்டனத்துக்குரியது என்கிறார்கள் விவசாயிகள்.

தேர்தல் வாக்குறுதியில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதமும் கடன் தள்ளுபடி செய்வேன் என்றார்கள். ஆனால், தற்போது சிறு, குறு விவசாயிகளுக்கு 25 சதவீதமும், பெரு விவசாயிகளுக்கு வெறும் 5 சதவீதமும் மட்டுமே கடன் தள்ளுபடி வழங்கி உள்ளனர் என்கின்றனர்.

நிலத்தை அளவுகோலாக எடுக்காமல், பணத்தை அளவுகோலாக வைத்து மிகப் பெரிய ஏமாற்று வேலையில் தவெக அரசு ஈடுபட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துள்ள இடதுசாரிகளே கண்டித்துள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

அதுமட்டுமல்லாது, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் எடை போட மூட்டை ஒன்றுக்கு ரூ.60 வரை கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், மூட்டைக்கு 2 கிலோ வரை கூடுதலாக எடை பிடிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஊழலை ஒழிப்பேன் என்ற நீங்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் என்ன நடக்கிறது என்று கவனிப்பீர்களா என்பது விவசாயிகளின் குரலாக இருக்கிறது.

5. நண்பாஸ், நண்பீஸுக்காக...

சிஜேபி (கரப்பான்பூச்சி ஜனதா கட்சி) பற்றி உங்களுக்கு அதிகாரிகள் சொல்லியிருப்பார்கள் என்று நம்புகிறோம். அது எங்கோ வடக்கே உதித்த இயக்கமல்ல, இணையம் முழுதும் மாநிலங்கள் கடந்து ஒலிக்கும் ஆதங்கக் குரல்.

<div class="paragraphs"><p>முதல்வர் விஜய்யை இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் , மாநிலச் செயலாளர்    மற்றும் நிர்வாகிகள் சந்தித்தபோது</p></div>

முதல்வர் விஜய்யை இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் , மாநிலச் செயலாளர்    மற்றும் நிர்வாகிகள் சந்தித்தபோது

தமிழக வேலைவாய்ப்பில் 75% தமிழக இளைஞர்களுக்கே, 12-ஆம் வகுப்புக்கு பிறகு பிஎச்டி வரை பிணை இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன், ஆண்டுதோறும் 5 லட்சம் இண்டர்ன் பணிகளை வழங்க அரசு தனியார் தொழில் நிறுவனங்கள் கூட்டாக இயங்கும், 29 வயதுக்கும் மேல் வேலைவாய்ப்பு இல்லாத டிகிரி முடித்த இளைஞர்களுக்கு ரூ.4,000, பாலிடெக்னிக் முடித்த இளைஞர்களுக்கு ரூ.2000 இளைஞர் நல நிதி...

இவையெல்லாமே நீங்கள் சொன்னதுதான்!

இரண்டு வார கால ஆட்சியில் இவற்றின் மீது தங்களின் கவனம் திரும்பியதாக தெரியவில்லை என்கிறார்கள் சாமானிய இளைஞர்கள். அவர்களில் பலரும் சிஜேபி-யில் இணைந்தோம் என்ற கூடுதல் தகவலையும் சொன்னார்கள். அவர்களுக்கு உங்களின் பதில் என்ன?

6. மீனவர்கள் பிரச்சினை

“இலங்கை கடற்படையால் ஏற்கெனவே 54 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ளனர். மேலும் 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இப்பிரச்சினை குறித்து இலங்கை அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக மீட்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்ற வெளியுறவு அமைச்சருக்கான கடிதம் டெம்ப்ளேட். இதில் ஆட்சி எதுவாக இருந்தாலும் எண்ணிக்கை மட்டுமே மாறும். ஒருவேளை துறை அமைச்சர் மாறினால் அதை மாற்றுவார்கள்.

தூத்துக்குடியில் மீனவ சமுதாயத்தினர் வாக்குகளை அள்ளி வீசியுள்ளனர், மாற்றம் வரும் என்பதற்காக. உங்கள் அமைச்சரவையில் மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத், கச்சத்தீவு பிரச்சினையில் உங்கள் நிலைப்பாடு என்னவென்று கேட்டால் ‘நோ கமென்ட்ஸ்’ எனக் கூறியிருக்கிறார். உங்கள் கடிதத்தில் நீங்களே கச்சத்தீவு பிரச்சினையில் தவெக நிலைப்பாடு என்னவென்று சொல்லியிருந்தால், அந்தக் கேள்வியே எழுந்திருக்காது அல்லவா? உங்கள் நிலைப்பாட்டை அறிய மீனவ சகோதரர்களும் ஆர்வமாக இருப்பதாகக் கூறுகின்றனர்.

7. ஆசிரியர்களுக்கு...

ஒவ்வோர் ஆண்டும் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதளம் மூலமாக மே மாதத்தில் நடைபெறும். இந்த ஆண்டு ஆட்சி மாறியுள்ளது. ஆனாலும், இதுவரை பணியிட மாறுதல் தொடர்பான அறிவிப்பு ஏதும் வரவில்லை.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றிய, மாவட்ட அளவிலான கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டு மாநில அளவில் மட்டுமே நடத்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக மாநில அளவில் கலந்தாய்வு நடத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டுமென்று புதிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக ஜாக்டோ ஜியோ, டிட்டோ ஜாக் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

மேலும், கலந்தாய்வு நடத்தும் பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பே பல இடங்களுக்கு நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பணியிட மாறுதல் வழங்கப்படுவது, கலந்தாய்வில் பணியிடங்கள் மறைக்கப்படுவது போன்ற முறைகேடுகள் களையப்படுமா என்று கேள்வி எழுப்புகின்றனர்.

அதேபோல் தமிழக அரசுப் பள்ளிகள் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் விவரங்களை முறையாகக் கணக்கெடுக்கவும், பதவி உயர்வு பட்டியலை எவ்வித பாரபட்சமும் இன்றி தயாரிக்கவும் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. பதவி உயர்வுக்கு பணம் பெறும் கலாச்சாரம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் உங்கள் வாக்குறுதியில் இருந்தது என்பதை நினைவுபடுத்துகிறோம்.

தவெக தனிபெரும் கட்சியாக தேர்தலில் சோபிக்க அரசுப் பணியாளர்கள், குறிப்பாக ஆசிரியர்கள் அளித்த வாக்குகள் மிக முக்கியப் பங்கு வகிப்பதாக பல்வேறு ஊடகங்களிலும் பேசப்பட்டதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்பதும் மக்களின் குரலாக உள்ளது.

இந்தப் பட்டியல் நீளமானது. ஆனால், ஆளத் தொடங்கி இரண்டு வாரமே ஆன நிலையில், முதன்மையான சிலவற்றை மட்டுமே மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாண்புமிகு சிஎம் சார்... உரிய உறுதுணைகளுடன் நீங்களே ஏற்கெனவே பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்துவிட்டீர்கள். எனினும், ‘தொலைநோக்கு’ அரசியல் பார்வையுடன் பிற கட்சி எம்எல்ஏக்களை வசப்படுத்துவதில் காட்டும் அதே தீவிரத்தை, எங்கள் அத்தியாவசிய பிரச்சினையிலும் கொஞ்சம் காட்டலாமே என்பதே சாமானிய மக்களின் குரலாக உள்ளது இப்போதைக்கு.