인셔셔RSS 관심 있는 블로그, 뉴스, 기술 정보를 효율적으로 추적하고 읽으세요
원문 읽기 InertiaRSS에서 열기

추천 피드

G
Google Developers Blog
博客园 - 聂微东
J
Java Code Geeks
Engineering at Meta
Engineering at Meta
Jina AI
Jina AI
D
Docker
B
Blog
S
SegmentFault 最新的问题
宝玉的分享
宝玉的分享
D
DataBreaches.Net
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Y
Y Combinator Blog
N
Netflix TechBlog - Medium
月光博客
月光博客
F
Fortinet All Blogs
爱范儿
爱范儿
H
Help Net Security
腾讯CDC
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
WordPress大学
WordPress大学
The Cloudflare Blog
有赞技术团队
有赞技术团队
T
Tailwind CSS Blog
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கோவை சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: நயினா...
த.சக்திவேல் · 2026-05-24 · via hindutamil

Updated on: 

கோவை: கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சொந்த ஊரான மேட்டூர் அருகே கொளத்தூர் உக்கம்பருத்தி காடு கிராமத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர், பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது, இந்திய அளவில் எல்லோர் மனதிலும் பெரிய தாக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இனி நல்ல ஆட்சி வரும் என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால், தொடர்ந்து அதே நிலைமை நீடித்து வருகிறது. இது மிகவும் மோசமான ஒரு சட்டம் ஒழுங்கு. இவ்விஷயத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியின் குடும்பத்துக்கு முதல்வர் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

திமுக ஆட்சியில் நடைபெற்ற அதேபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு முதல்வர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். ஒவ்வொரு சம்பவமும் அரங்கேறிய பிறகு தான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சட்டங்கள் இது போன்ற தப்பு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். மாநில அரசு உடனடியாக சட்ட திருத்தம் கொண்டு வந்து 2 மாதங்களில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

பின்னர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சரால் பாரதிய நியாய சங்கீத் என்று சொல்லக்கூடிய முன்பு இருந்த ஐபிசி சட்டத்தில் மாற்றங்கள் செய்து கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்பு இருந்த தமிழ்நாடு அரசாங்கம் இதை பின்பற்றாமல் ஆங்கிலேயர் கொண்டு வந்த சட்டத்தையே நடைமுறையில் வைத்துள்ளார்கள். அமித் ஷா கொண்டு வந்த பிஎன்எஸ் சட்டத்தில் கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இதை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கையாக உள்ளது. என்றார்.